வாழ்வில் யாரோ ஒருவருக்கு ஏதோ ஒரு பிடிப்பை கடவுள் வழங்கி இருப்பார் அதன் கயிற்றை பற்றிப் பிடித்தபடியே காலத்தை கடந்து நாமும் பயணிப்போம்.
நிச்சயமாக கவலைக்கு பின் சந்தோசம் இருக்கிறது. அது எதுவென கண்டறியும் பொறுப்பு நம்மிடமே.. வாழ்வின் இரகசியங்களை பொருந்திக்கொள்வோமாக!
நன்றி!
இப்படிக்கு
ஆஷா சாரா
அன்னை மடியில் அறுபது நொடிகள்
அந்தக் கறுப்பு வெள்ளை புகைப்படத்தின் மீதுள்ள குங்குமம் கூடத் தன் புடைவையில் பட்டு அழிந்துவிட கூடாதெனக் கவனமாய் அணைத்து உறங்கும் செல்விக்கு "செல்லம்மா, எழுந்திடுடா" என்ற அம்மாவின் குரல் கேட்க, சுகமான கனவு கலைந்த உணர்வில் திடுக்கிட்டு விழித்தாள் இளம் பெண் ஒருத்தி...