- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
2
“ஐஸ்வர்யா! பூ பழம் புடவை எடுத்து வச்சாச்சா? கரன் எங்க? கிளம்புற நேரத்துல எங்க போய்த் தொலைஞ்சான்?” ஆனந்தி மருமகளிடம் கத்திக் கொண்டிருந்தார்.
தங்கள் அறையை விட்டு வெளியில் வந்த ஐஸ்வர்யா, ‘இவங்க வாயில நல்ல வார்த்தையே வராது. பெத்த பிள்ளையை தொலைஞ்சான் கிலைஞ்சான்னு சொல்லிட்டு’ என மனதினுள் மறுகி, “இதோ வந்துட்டேன் அத்தை. புடவைக்கு மேட்சிங் ஜாக்கெட் எங்க ரூம்ல இருந்தது. அதை எடுக்கதான் வந்தேன். உங்க பையனை வெத்தலை பாக்கு வாங்க நீங்கதான் அத்தை அனுப்பி வச்சீங்க” என்றாள் தவறுகள் அவர் மீதே என்பதாய்.
அவசரத்தில் அதைக் கவனியாதவர், “சின்னவனை எங்க? வசீ.. வசீ கிளம்பிட்டியா?” என்று கத்தி அழைக்க,
“அம்மா! இதோ இங்கதான் இருக்கேன். ஏன் கத்துறீங்க?”
“இல்லடா நேரமாகிட்டு இருக்கு. அப்புறம் முகூர்த்த நேரம் முடிஞ்சிருச்சின்னா என்ன செய்யுறது? இன்னும் நாம வீட்டுலயிருந்தே கிளம்பலை. ஒரே பொண்ணுக்கு இவ்வளவு சிம்ப்ளா நிச்சயம் பண்ண ஒத்துக்கிட்டதே பெரிய விஷயம். நீ என்னடான்னா.. சீக்கிரம் வா” என்றார்.
“ஏன்மா க்ராண்டாவே செய்யலாமே? ஏன் இந்த அவசரம்?” என்றான் கேள்வியாக.
“சும்மாவே நம்ம சொந்தக்காரங்க பொறாமையில காய்ஞ்சி போயி கிடக்குறாங்க. இதுல பெரிசா எடுத்து செய்தா சொல்லவே வேண்டாம். இப்படியே பேசிட்டிருக்காம கிளம்புற வழியைப் பாரு” என்று உயர்த்திய குரலை இறக்காது பேசினார்.
“சர்ரி” என்று வார்த்தையை அழுத்தித் தன் குழப்பங்களை ஒதுக்கி வைத்தவன் ஐஸ்வர்யாவிடம் சென்று, “அண்ணி எதாவது ஹெல்ப் வேணுமா?” என கேட்க,
அவனின் முகம் பார்க்காது, “இல்ல.. முடிஞ்சிது. இனி தேவைப்படாது” என்று பட்டும்படாமல் சொல்லி கையில் எதையோ எடுத்தபடி நகர்ந்துவிட்டாள்.
வசீகரனுக்கு ஒன்றும் புரியவில்லை. பெண் பார்க்கச் சம்மதித்துச் சென்று வந்ததிலிருந்து அண்ணியவளின் நடவடிக்கை அவனுக்கே புதிர்தான். உரிமையாய் பேசும் பேச்சுகள் கிடையாது. மூன்றாம் மனிதரிடம் என்ன என்றால் என்னவென்று பேசுவது போலொரு விலகல் அவளிடம்.
அதோடு சமீபமாக இன்னொன்றையும் உணர்ந்திருந்தான். தன் தந்தை வீட்டினுள் நுழைந்ததும் அவ்விடத்தில் அண்ணியவள் இல்லாதிருப்பது. இல்லையெனில் தன் அண்ணனே மனைவி மகனுடன் அறைக்குள் அடைந்து கொள்வது. தன் வீட்டில் என்ன நடக்கிறதென்று தனக்கேப் புரியாத சூழல் வசீகரனுக்கு.
காரில் டிரைவர் சீட்டில் அமர்ந்த வசீகரன் அண்ணனை தன்னருகில் அமரச்சொல்ல, அவனோ தந்தையை அமரச்சொல்லி, “அப்பா, அம்மா, அண்ணி மூணுபேரும் நடு சீட்டுல உட்காரட்டும்ணா. பையன் நம்மளோட இருக்கட்டும்” என்றதும் தம்பியின் வார்த்தையை மீற முடியாது மனைவியைப் பார்க்க அவளோ காரிலிருந்து இறங்கி பையனையும் தன்னுடன் இறங்க வைத்து பின் சீட்டிற்குச் சென்று அமர்ந்துவிட்டாள்.
வசீகரனோ ஐஸ்வர்யாவின் செயலில் கேள்வியாய் அண்ணனைப் பார்க்க, அவனோ வேறெங்கோ பார்த்திருந்தான்.
பெண்ணின் வீடு சற்று வசதியானதாகவே இருக்க, நகை சீர் எல்லாம் அதிகமாகவே பேசப்பட்டிருந்தது. பெண் வீட்டார் சார்பாக கொஞ்சம் உறவினர்கள் இருக்க, பையன் வீட்டு சார்பாக ஐஸ்வர்யாவின் அப்பா, அம்மா, தங்கை வந்திருந்தனர்.
“வசீ பொண்ணைப் பார்த்துக்கோ. முதல்நாள் தூரத்துல பார்த்ததால சரியா பார்த்திருக்கமாட்ட” என்ற தாயின் கட்டளைக்கு உட்பட்டு பெண்ணைப் பார்க்க, அதேநேரம் பெண் அஞ்சுகாவும் அவனைப் பார்க்க, சட்டென தலையைக் குனிந்து கொண்டான்.
தம்பியினருகில் குனிந்த சுவீகரன், “என்னடா பொண்ணுங்க செய்யுறதை நீ செய்யுற? தலையை நிமிர்ந்து பாரு” என்றான்.
“சும்மாயிரு கரன். எனக்கு இங்க இருக்குறதே அன்ஈஸி ஃபீல் கொடுக்குது.”
“அன்ஈஸி ஃபீலா? டேய் உனக்கு இப்ப நிச்சயதார்த்தம். வசீ எதாவது பிரச்சனையா? உடம்புக்கு ஒண்ணுமில்லைதான?” என்றான் அக்கறையாய்.
“இல்லைண்ணா. ஆனா, கல்யாணம் செஞ்சுக்கப் பிடிக்கலை. இந்தப் பொண்ணை சுத்தமா பிடிக்கலைண்ணா. முடிஞ்சா இதை நிறுத்திரு.” பட்டென்று சொல்லிவிட, அண்ணனவனோ திகைத்து, “வசீ என்ன பேசுற? நீ பிடிச்சிருக்குன்னு சொன்னதாலதான் இவ்வளவு தூரம் வந்திருக்கோம். இப்ப இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்? அதுவும் நிச்சயம் பண்ணப்போற நேரத்தில்” என்றான் காதோரம் கடிந்தபடி.
“ஏதோ ஒரு நினைப்புல சொன்னேன்தான். ஆனா, ஏதோ ஒண்ணு உள்ளுக்குள்ள பண்ணதுண்ணா. மனசெல்லாம் சொல்ல முடியாதொரு அவஸ்தை. அது ஏன்னு புரியலை. இங்க இருக்குறதே முள்மேல உட்கார்ந்திருக்கிற மாதிரியிருக்கு. எதுவும் வேண்டாம்னு கிளம்பிரலாமா?”
“வசீ! புரிஞ்சிதான் பேசிட்டிருக்கியா? இங்க வர்றதுக்கு முன்ன சொல்லியிருந்தா வேற. இங்க வந்து உட்கார்ந்துட்டு, ப்ச்.. தப்புடா” என்றான் தம்பியின் கடைசி நேர மனமாற்றம் பிடிக்காது. முன்னரே என்றால் தானே தடுத்திருப்பான். அவனுக்குமே இதில் இஷ்டம் கிடையாது.
“எனக்கென்னவோ இந்த நிச்சயதார்த்தம்தான் தப்புன்னு தோணுது” எனவும் பக்கென்று மனதினுள் அதிர்வு எழ மனைவியைப் பார்க்க, அவளோ கணவனை முறைத்திருக்க, என்ன சொல்வதென்று புரியா நிலை சுவீகரனுக்கு. தம்பியின் தவிப்பு அவனின் உள்ளுணர்வால் என்பதை ஓரளவு யூகித்துவிட்டான்.
அதற்குள் பெரியவர்கள் பேச்சுவார்த்தை முடித்து, வெற்றிலை பாக்கு மாற்றி, சில சம்பிரதாயங்களுடன் நிச்சயம் முடிந்திருந்தது.
“பொண்ணு பையன் தனியா பேசிக்கட்டும்” என்று பெண் வீட்டினர் எடுத்துக் கொடுக்க,
‘ரொம்ப முக்கியம். நிச்சயத்துக்கு முன்ன பேசினாலாவது சரி தப்புன்னு கருத்துப் பகிரலாம். எல்லாத்தையும் முடிச்சிட்டு பேசச் சொல்றாங்க. என்ன ப்ளான்டா சாமி’ என்றவனுக்குள் ஏதோ தோன்ற, ‘ப்ளானாதான் இருக்குமோ?’ என்ற சந்தேகம் எழுந்தது. ‘ப்ளான்னா.. யாரோடது?’ என்ற கேள்வி மனதினுள்.
வேறு வழியில்லாமல் பேசச் சென்று பத்து நிமிடங்களுக்கெல்லாம் திரும்பிய தம்பியிடம், “இப்ப உன் எண்ணம் மாறிருச்சிதான? சம்மதமா?” என்றான் சுவீகரன்.
சகோதரனின் ஆர்வத்தைக் கண்டு மெல்ல புன்னகைத்து, “நல்ல மாதிரிதான் தெரியுறாங்க. பொய் சொல்றது, ஏமாத்துறது பிடிக்காதாம். இருந்தாலும் ஏதோ...” என்றவன் பார்வை வாசல் தாண்டிச் செல்ல, அங்கு சைக்கிளை உருட்டிச் சென்ற பூரணியோ அவனை எரித்தாற்போல் பார்த்துச் சென்றாள். அப்பார்வையில்தான் எவ்வளவு உஷ்ணம்.
‘ஏன் இந்தப் பொண்ணு இப்படி முறைச்சிட்டுப் போறா. எனக்கும் அவளுக்கும் எதாவது பிரச்சனை இருந்ததா என்ன? யார்னே தெரியலை. அப்புறம் எப்படி?’ மனதிற்குள் அவளின் முறைப்பே வந்து நின்றது வசீகரனுக்கு.
“வசீ சாப்பிடக் கூப்பிடுறாங்க” என்றதும் அண்ணனுடன் எழுந்து நடந்தவனுக்கு யோசனை முழுவதும் வெளியில் பார்த்த பெண்ணே!
“டேய் அண்ணா! முன்னப்பின்ன பார்த்திராத ஒரு பொண்ணு நம்மளைப் பார்த்து முறைச்சா என்ன அர்த்தம்?”
“ம்.. முறைச்ச பொண்ணுன்னு அர்த்தம்” என்றான் நக்கலாக.
“உன்கிட்டப் போயி கேட்டேன் பாரு” என்று முனக,
“உடனே கோபப்படாதடா. சரி திடீர்னு எதுக்கு அப்படிக் கேட்ட?”
“கேட்டதுக்குப் பதில் சொல்லு கரன்” என்றான் அடமாக.
“ஒண்ணு உரிமைப்பட்டவங்களா இருக்கணும். இல்லன்னா எதிரியா இருக்கணும். அதுவும் இல்லைன்னா நம்மளால அவங்களோ, இல்லை அவங்களைச் சார்ந்தவங்களோ பாதிக்கப்பட்டிருக்கணும். அதனால வந்த கோபத்தை முறைப்பா கொடுக்கலாம்”
“அப்படின்னா?”
“நம்பிக்கைத் துரோகம்டா.”
“ஓ...” என்றவனுக்குள், ‘அந்தப் பெண் ஏன் அப்படிப் பார்த்தாள்? எங்களுக்குள் என்ன சம்பந்தம்? பார்வைக்கான அர்த்தம் உரிமையாகவா? இல்லை எதிரியாக பாவித்தா? இல்லை துரோகமா? துரோகம்னா, யார்.. யாருக்கு? டேய் வசீ! வேண்டாத நினைவு எதுக்கு. சும்மா தற்செயலா நடந்ததை வச்சி ஏதேதோ கற்பனை பண்ணுறன்னு தோணுது’ என தனக்குத்தானே பேசிச் சென்றான்.
இரவு வீடு வந்து வேலை அனைத்தும் முடித்துப் படுத்த பொழுது பூரணியின் நினைவுகள் யாவும் மாலை நடந்ததே ஓடியது.
தற்செயலாகதான் பார்த்தாள் அவர்களை. என்றும் அந்நேரம் வீடு வராதவள் மெடிக்கலுக்குத் தேவையான சில மருந்துகள் ஆர்டர் கொடுத்திருக்க, அதைக் கொண்டு வருவதாக முன்னரே அறிவிக்கவும், கையிருப்பு கம்மியாக இருந்ததால் பணம் எடுக்க வீடு வந்திருந்தாள்.
வசீகரனுக்குப் பார்த்திருந்த பெண் அஞ்சுகா பூரணியின் பக்கத்து வீடு. சில மாதங்கள் முன்தான் இங்கு வீடு கட்டி குடி வந்திருந்தார்கள். ஆதலால் அவர்கள் அதிகம் பழக்கமில்லை. நேருக்கு நேர் பார்த்தால் சின்னதான புன்னகை மட்டுமே!
இன்றும் வரும்பொழுது அவ்வீட்டின் முன் கார் நிற்க, தற்செயலாகத்தான் அவ்வீட்டு ஜன்னலைப் பார்த்தாள். அப்பெண் வசீகரனுடன் பேசிக்கொண்டிருப்பது தெரிய, அவளின் அலங்காரமும் அவள் ஏதோ பேச அமைதியாக நின்றிருந்த அவனின் தோற்றமும் அங்க நடப்பதைச் சொல்லியது. அளவிற்கதிகமான கோபம் அவளுள் எழ, பக்கத்து வீடு நுழைந்து அனைவரையும் அடித்துத் துவைக்கும் கோபம் வரத்தான் செய்தது.
பணம் படைத்தவனிடம் மோதுவதும், நம் கண்ணை நாமே குத்திக்கொள்வதும் ஒன்றாயிற்றே! எளியவன் சொல் அம்பலம் ஏறாதல்லவா!
‘அவனுக்கு எப்படி கல்யாணம் சாத்தியம்? ஒரு பெண்ணின் வாழ்க்கை அவ்வளவு ஈஸியாகப் போய்விட்டதாமா? அதுவும் அக்குடும்பத்தில் இன்னொரு பெண்ணா? இல்லை கண்முன் இன்னொரு பெண்ணின் வாழ்க்கையைச் சீரழிய விடமாட்டேன். ரொம்பத் தப்பு செய்றீங்க வசீகரன்? ரொம்பவே தப்பு இது’ என மனதிற்குள் புலம்பினாலும், அடுத்து என்ன செய்யலாமென்ற யோசனை மட்டுமே அவளிடம்.
பணம் எடுத்துவிட்டு கடைக்குச் செல்ல மெல்ல சைக்கிளை உருட்டும் பொழுது அவர்கள் வீட்டைப்பார்க்க அவனும் தற்செயலாக வெளியே பார்க்க, ‘உனக்குப் பொண்ணு கேட்குதா?’ என தன்னால் முடிந்தமட்டும் பார்வையால் எரித்துவிட்டே சென்றிருந்தாள்.
“ஐஸ் என்ன பண்ணுற? ஏய்! சொன்னா கேளு. வேண்டாம்டா.” பேக்கில் துணியை அடுக்கிக் கொண்டிருந்தவளை கெஞ்சிக் கொண்டிருந்தான் சுவீகரன்.
“என்னை விடுங்க. இங்க நடக்கிறதைப் பார்த்துட்டு என்னால சும்மாயிருக்க முடியாது. என்ன நினைச்சிட்டிருக்காங்க உங்க அப்பாவும் அம்மாவும்? என்னால இதைச் சகிச்சுக்கவே முடியலை” என்று கத்தினாள்.
“ஏய்! ஏன்டி கத்துற? பையன் முழிச்சிரப்போறான்.”
“முழிக்கட்டுமே கூடக்கூட்டிட்டுப் போறேன். இங்கயிருந்தா அவன் எப்படி வளருவானோன்னு பயப்படாம இருக்கலாம்ல.”
“ஏன்மா நான் நல்லவன் இல்லையா?” என்றான் வருத்தமான குரலில்.
“அந்த ஒரே காரணத்துக்காகதான் நடக்குற எல்லாத்தையும் பொறுத்துப் போயிட்டு இருக்கேன். ஆனா, உங்க குடும்பம்னு வர்றப்ப அவங்க பண்ற தப்புக்கு நீங்களும் துணை நிற்கிறீங்க பார்த்தீங்களா? அதோட எங்க வீட்டுல உள்ளவங்களையும் உள்ள இழுக்குறீங்க. அவங்களும் வேற வழியில்லாம வந்து நிற்கிறாங்க. இதெல்லாம் எனக்கு சுத்தமாப் பிடிக்கலை” என்றாள் கோபம் குறையாது.
“ஐஸ்... அம்மாவுக்காக”
“ப்ச்.. பேசாதீங்க. உங்களோட சேர்ந்து உங்களுக்காகன்னு நானும் எத்தனைத் தப்...” அழுகை வர வார்த்தைகள் தடைபட்டது.
“எல்லாம் சரியாகும்டா” என்று சமாதானப்படுத்தும் பொருட்டு அவளைக் கட்டியணைத்தான்.
“ஐஸ்வர்யா! பூ பழம் புடவை எடுத்து வச்சாச்சா? கரன் எங்க? கிளம்புற நேரத்துல எங்க போய்த் தொலைஞ்சான்?” ஆனந்தி மருமகளிடம் கத்திக் கொண்டிருந்தார்.
தங்கள் அறையை விட்டு வெளியில் வந்த ஐஸ்வர்யா, ‘இவங்க வாயில நல்ல வார்த்தையே வராது. பெத்த பிள்ளையை தொலைஞ்சான் கிலைஞ்சான்னு சொல்லிட்டு’ என மனதினுள் மறுகி, “இதோ வந்துட்டேன் அத்தை. புடவைக்கு மேட்சிங் ஜாக்கெட் எங்க ரூம்ல இருந்தது. அதை எடுக்கதான் வந்தேன். உங்க பையனை வெத்தலை பாக்கு வாங்க நீங்கதான் அத்தை அனுப்பி வச்சீங்க” என்றாள் தவறுகள் அவர் மீதே என்பதாய்.
அவசரத்தில் அதைக் கவனியாதவர், “சின்னவனை எங்க? வசீ.. வசீ கிளம்பிட்டியா?” என்று கத்தி அழைக்க,
“அம்மா! இதோ இங்கதான் இருக்கேன். ஏன் கத்துறீங்க?”
“இல்லடா நேரமாகிட்டு இருக்கு. அப்புறம் முகூர்த்த நேரம் முடிஞ்சிருச்சின்னா என்ன செய்யுறது? இன்னும் நாம வீட்டுலயிருந்தே கிளம்பலை. ஒரே பொண்ணுக்கு இவ்வளவு சிம்ப்ளா நிச்சயம் பண்ண ஒத்துக்கிட்டதே பெரிய விஷயம். நீ என்னடான்னா.. சீக்கிரம் வா” என்றார்.
“ஏன்மா க்ராண்டாவே செய்யலாமே? ஏன் இந்த அவசரம்?” என்றான் கேள்வியாக.
“சும்மாவே நம்ம சொந்தக்காரங்க பொறாமையில காய்ஞ்சி போயி கிடக்குறாங்க. இதுல பெரிசா எடுத்து செய்தா சொல்லவே வேண்டாம். இப்படியே பேசிட்டிருக்காம கிளம்புற வழியைப் பாரு” என்று உயர்த்திய குரலை இறக்காது பேசினார்.
“சர்ரி” என்று வார்த்தையை அழுத்தித் தன் குழப்பங்களை ஒதுக்கி வைத்தவன் ஐஸ்வர்யாவிடம் சென்று, “அண்ணி எதாவது ஹெல்ப் வேணுமா?” என கேட்க,
அவனின் முகம் பார்க்காது, “இல்ல.. முடிஞ்சிது. இனி தேவைப்படாது” என்று பட்டும்படாமல் சொல்லி கையில் எதையோ எடுத்தபடி நகர்ந்துவிட்டாள்.
வசீகரனுக்கு ஒன்றும் புரியவில்லை. பெண் பார்க்கச் சம்மதித்துச் சென்று வந்ததிலிருந்து அண்ணியவளின் நடவடிக்கை அவனுக்கே புதிர்தான். உரிமையாய் பேசும் பேச்சுகள் கிடையாது. மூன்றாம் மனிதரிடம் என்ன என்றால் என்னவென்று பேசுவது போலொரு விலகல் அவளிடம்.
அதோடு சமீபமாக இன்னொன்றையும் உணர்ந்திருந்தான். தன் தந்தை வீட்டினுள் நுழைந்ததும் அவ்விடத்தில் அண்ணியவள் இல்லாதிருப்பது. இல்லையெனில் தன் அண்ணனே மனைவி மகனுடன் அறைக்குள் அடைந்து கொள்வது. தன் வீட்டில் என்ன நடக்கிறதென்று தனக்கேப் புரியாத சூழல் வசீகரனுக்கு.
காரில் டிரைவர் சீட்டில் அமர்ந்த வசீகரன் அண்ணனை தன்னருகில் அமரச்சொல்ல, அவனோ தந்தையை அமரச்சொல்லி, “அப்பா, அம்மா, அண்ணி மூணுபேரும் நடு சீட்டுல உட்காரட்டும்ணா. பையன் நம்மளோட இருக்கட்டும்” என்றதும் தம்பியின் வார்த்தையை மீற முடியாது மனைவியைப் பார்க்க அவளோ காரிலிருந்து இறங்கி பையனையும் தன்னுடன் இறங்க வைத்து பின் சீட்டிற்குச் சென்று அமர்ந்துவிட்டாள்.
வசீகரனோ ஐஸ்வர்யாவின் செயலில் கேள்வியாய் அண்ணனைப் பார்க்க, அவனோ வேறெங்கோ பார்த்திருந்தான்.
பெண்ணின் வீடு சற்று வசதியானதாகவே இருக்க, நகை சீர் எல்லாம் அதிகமாகவே பேசப்பட்டிருந்தது. பெண் வீட்டார் சார்பாக கொஞ்சம் உறவினர்கள் இருக்க, பையன் வீட்டு சார்பாக ஐஸ்வர்யாவின் அப்பா, அம்மா, தங்கை வந்திருந்தனர்.
“வசீ பொண்ணைப் பார்த்துக்கோ. முதல்நாள் தூரத்துல பார்த்ததால சரியா பார்த்திருக்கமாட்ட” என்ற தாயின் கட்டளைக்கு உட்பட்டு பெண்ணைப் பார்க்க, அதேநேரம் பெண் அஞ்சுகாவும் அவனைப் பார்க்க, சட்டென தலையைக் குனிந்து கொண்டான்.
தம்பியினருகில் குனிந்த சுவீகரன், “என்னடா பொண்ணுங்க செய்யுறதை நீ செய்யுற? தலையை நிமிர்ந்து பாரு” என்றான்.
“சும்மாயிரு கரன். எனக்கு இங்க இருக்குறதே அன்ஈஸி ஃபீல் கொடுக்குது.”
“அன்ஈஸி ஃபீலா? டேய் உனக்கு இப்ப நிச்சயதார்த்தம். வசீ எதாவது பிரச்சனையா? உடம்புக்கு ஒண்ணுமில்லைதான?” என்றான் அக்கறையாய்.
“இல்லைண்ணா. ஆனா, கல்யாணம் செஞ்சுக்கப் பிடிக்கலை. இந்தப் பொண்ணை சுத்தமா பிடிக்கலைண்ணா. முடிஞ்சா இதை நிறுத்திரு.” பட்டென்று சொல்லிவிட, அண்ணனவனோ திகைத்து, “வசீ என்ன பேசுற? நீ பிடிச்சிருக்குன்னு சொன்னதாலதான் இவ்வளவு தூரம் வந்திருக்கோம். இப்ப இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்? அதுவும் நிச்சயம் பண்ணப்போற நேரத்தில்” என்றான் காதோரம் கடிந்தபடி.
“ஏதோ ஒரு நினைப்புல சொன்னேன்தான். ஆனா, ஏதோ ஒண்ணு உள்ளுக்குள்ள பண்ணதுண்ணா. மனசெல்லாம் சொல்ல முடியாதொரு அவஸ்தை. அது ஏன்னு புரியலை. இங்க இருக்குறதே முள்மேல உட்கார்ந்திருக்கிற மாதிரியிருக்கு. எதுவும் வேண்டாம்னு கிளம்பிரலாமா?”
“வசீ! புரிஞ்சிதான் பேசிட்டிருக்கியா? இங்க வர்றதுக்கு முன்ன சொல்லியிருந்தா வேற. இங்க வந்து உட்கார்ந்துட்டு, ப்ச்.. தப்புடா” என்றான் தம்பியின் கடைசி நேர மனமாற்றம் பிடிக்காது. முன்னரே என்றால் தானே தடுத்திருப்பான். அவனுக்குமே இதில் இஷ்டம் கிடையாது.
“எனக்கென்னவோ இந்த நிச்சயதார்த்தம்தான் தப்புன்னு தோணுது” எனவும் பக்கென்று மனதினுள் அதிர்வு எழ மனைவியைப் பார்க்க, அவளோ கணவனை முறைத்திருக்க, என்ன சொல்வதென்று புரியா நிலை சுவீகரனுக்கு. தம்பியின் தவிப்பு அவனின் உள்ளுணர்வால் என்பதை ஓரளவு யூகித்துவிட்டான்.
அதற்குள் பெரியவர்கள் பேச்சுவார்த்தை முடித்து, வெற்றிலை பாக்கு மாற்றி, சில சம்பிரதாயங்களுடன் நிச்சயம் முடிந்திருந்தது.
“பொண்ணு பையன் தனியா பேசிக்கட்டும்” என்று பெண் வீட்டினர் எடுத்துக் கொடுக்க,
‘ரொம்ப முக்கியம். நிச்சயத்துக்கு முன்ன பேசினாலாவது சரி தப்புன்னு கருத்துப் பகிரலாம். எல்லாத்தையும் முடிச்சிட்டு பேசச் சொல்றாங்க. என்ன ப்ளான்டா சாமி’ என்றவனுக்குள் ஏதோ தோன்ற, ‘ப்ளானாதான் இருக்குமோ?’ என்ற சந்தேகம் எழுந்தது. ‘ப்ளான்னா.. யாரோடது?’ என்ற கேள்வி மனதினுள்.
வேறு வழியில்லாமல் பேசச் சென்று பத்து நிமிடங்களுக்கெல்லாம் திரும்பிய தம்பியிடம், “இப்ப உன் எண்ணம் மாறிருச்சிதான? சம்மதமா?” என்றான் சுவீகரன்.
சகோதரனின் ஆர்வத்தைக் கண்டு மெல்ல புன்னகைத்து, “நல்ல மாதிரிதான் தெரியுறாங்க. பொய் சொல்றது, ஏமாத்துறது பிடிக்காதாம். இருந்தாலும் ஏதோ...” என்றவன் பார்வை வாசல் தாண்டிச் செல்ல, அங்கு சைக்கிளை உருட்டிச் சென்ற பூரணியோ அவனை எரித்தாற்போல் பார்த்துச் சென்றாள். அப்பார்வையில்தான் எவ்வளவு உஷ்ணம்.
‘ஏன் இந்தப் பொண்ணு இப்படி முறைச்சிட்டுப் போறா. எனக்கும் அவளுக்கும் எதாவது பிரச்சனை இருந்ததா என்ன? யார்னே தெரியலை. அப்புறம் எப்படி?’ மனதிற்குள் அவளின் முறைப்பே வந்து நின்றது வசீகரனுக்கு.
“வசீ சாப்பிடக் கூப்பிடுறாங்க” என்றதும் அண்ணனுடன் எழுந்து நடந்தவனுக்கு யோசனை முழுவதும் வெளியில் பார்த்த பெண்ணே!
“டேய் அண்ணா! முன்னப்பின்ன பார்த்திராத ஒரு பொண்ணு நம்மளைப் பார்த்து முறைச்சா என்ன அர்த்தம்?”
“ம்.. முறைச்ச பொண்ணுன்னு அர்த்தம்” என்றான் நக்கலாக.
“உன்கிட்டப் போயி கேட்டேன் பாரு” என்று முனக,
“உடனே கோபப்படாதடா. சரி திடீர்னு எதுக்கு அப்படிக் கேட்ட?”
“கேட்டதுக்குப் பதில் சொல்லு கரன்” என்றான் அடமாக.
“ஒண்ணு உரிமைப்பட்டவங்களா இருக்கணும். இல்லன்னா எதிரியா இருக்கணும். அதுவும் இல்லைன்னா நம்மளால அவங்களோ, இல்லை அவங்களைச் சார்ந்தவங்களோ பாதிக்கப்பட்டிருக்கணும். அதனால வந்த கோபத்தை முறைப்பா கொடுக்கலாம்”
“அப்படின்னா?”
“நம்பிக்கைத் துரோகம்டா.”
“ஓ...” என்றவனுக்குள், ‘அந்தப் பெண் ஏன் அப்படிப் பார்த்தாள்? எங்களுக்குள் என்ன சம்பந்தம்? பார்வைக்கான அர்த்தம் உரிமையாகவா? இல்லை எதிரியாக பாவித்தா? இல்லை துரோகமா? துரோகம்னா, யார்.. யாருக்கு? டேய் வசீ! வேண்டாத நினைவு எதுக்கு. சும்மா தற்செயலா நடந்ததை வச்சி ஏதேதோ கற்பனை பண்ணுறன்னு தோணுது’ என தனக்குத்தானே பேசிச் சென்றான்.
இரவு வீடு வந்து வேலை அனைத்தும் முடித்துப் படுத்த பொழுது பூரணியின் நினைவுகள் யாவும் மாலை நடந்ததே ஓடியது.
தற்செயலாகதான் பார்த்தாள் அவர்களை. என்றும் அந்நேரம் வீடு வராதவள் மெடிக்கலுக்குத் தேவையான சில மருந்துகள் ஆர்டர் கொடுத்திருக்க, அதைக் கொண்டு வருவதாக முன்னரே அறிவிக்கவும், கையிருப்பு கம்மியாக இருந்ததால் பணம் எடுக்க வீடு வந்திருந்தாள்.
வசீகரனுக்குப் பார்த்திருந்த பெண் அஞ்சுகா பூரணியின் பக்கத்து வீடு. சில மாதங்கள் முன்தான் இங்கு வீடு கட்டி குடி வந்திருந்தார்கள். ஆதலால் அவர்கள் அதிகம் பழக்கமில்லை. நேருக்கு நேர் பார்த்தால் சின்னதான புன்னகை மட்டுமே!
இன்றும் வரும்பொழுது அவ்வீட்டின் முன் கார் நிற்க, தற்செயலாகத்தான் அவ்வீட்டு ஜன்னலைப் பார்த்தாள். அப்பெண் வசீகரனுடன் பேசிக்கொண்டிருப்பது தெரிய, அவளின் அலங்காரமும் அவள் ஏதோ பேச அமைதியாக நின்றிருந்த அவனின் தோற்றமும் அங்க நடப்பதைச் சொல்லியது. அளவிற்கதிகமான கோபம் அவளுள் எழ, பக்கத்து வீடு நுழைந்து அனைவரையும் அடித்துத் துவைக்கும் கோபம் வரத்தான் செய்தது.
பணம் படைத்தவனிடம் மோதுவதும், நம் கண்ணை நாமே குத்திக்கொள்வதும் ஒன்றாயிற்றே! எளியவன் சொல் அம்பலம் ஏறாதல்லவா!
‘அவனுக்கு எப்படி கல்யாணம் சாத்தியம்? ஒரு பெண்ணின் வாழ்க்கை அவ்வளவு ஈஸியாகப் போய்விட்டதாமா? அதுவும் அக்குடும்பத்தில் இன்னொரு பெண்ணா? இல்லை கண்முன் இன்னொரு பெண்ணின் வாழ்க்கையைச் சீரழிய விடமாட்டேன். ரொம்பத் தப்பு செய்றீங்க வசீகரன்? ரொம்பவே தப்பு இது’ என மனதிற்குள் புலம்பினாலும், அடுத்து என்ன செய்யலாமென்ற யோசனை மட்டுமே அவளிடம்.
பணம் எடுத்துவிட்டு கடைக்குச் செல்ல மெல்ல சைக்கிளை உருட்டும் பொழுது அவர்கள் வீட்டைப்பார்க்க அவனும் தற்செயலாக வெளியே பார்க்க, ‘உனக்குப் பொண்ணு கேட்குதா?’ என தன்னால் முடிந்தமட்டும் பார்வையால் எரித்துவிட்டே சென்றிருந்தாள்.
“ஐஸ் என்ன பண்ணுற? ஏய்! சொன்னா கேளு. வேண்டாம்டா.” பேக்கில் துணியை அடுக்கிக் கொண்டிருந்தவளை கெஞ்சிக் கொண்டிருந்தான் சுவீகரன்.
“என்னை விடுங்க. இங்க நடக்கிறதைப் பார்த்துட்டு என்னால சும்மாயிருக்க முடியாது. என்ன நினைச்சிட்டிருக்காங்க உங்க அப்பாவும் அம்மாவும்? என்னால இதைச் சகிச்சுக்கவே முடியலை” என்று கத்தினாள்.
“ஏய்! ஏன்டி கத்துற? பையன் முழிச்சிரப்போறான்.”
“முழிக்கட்டுமே கூடக்கூட்டிட்டுப் போறேன். இங்கயிருந்தா அவன் எப்படி வளருவானோன்னு பயப்படாம இருக்கலாம்ல.”
“ஏன்மா நான் நல்லவன் இல்லையா?” என்றான் வருத்தமான குரலில்.
“அந்த ஒரே காரணத்துக்காகதான் நடக்குற எல்லாத்தையும் பொறுத்துப் போயிட்டு இருக்கேன். ஆனா, உங்க குடும்பம்னு வர்றப்ப அவங்க பண்ற தப்புக்கு நீங்களும் துணை நிற்கிறீங்க பார்த்தீங்களா? அதோட எங்க வீட்டுல உள்ளவங்களையும் உள்ள இழுக்குறீங்க. அவங்களும் வேற வழியில்லாம வந்து நிற்கிறாங்க. இதெல்லாம் எனக்கு சுத்தமாப் பிடிக்கலை” என்றாள் கோபம் குறையாது.
“ஐஸ்... அம்மாவுக்காக”
“ப்ச்.. பேசாதீங்க. உங்களோட சேர்ந்து உங்களுக்காகன்னு நானும் எத்தனைத் தப்...” அழுகை வர வார்த்தைகள் தடைபட்டது.
“எல்லாம் சரியாகும்டா” என்று சமாதானப்படுத்தும் பொருட்டு அவளைக் கட்டியணைத்தான்.