Member
- Joined
- Dec 23, 2024
- Messages
- 73
- Thread Author
- #1
கதைப்போமா எபிளாக்
ஐந்து வருடம் கடந்திருந்தது. சொன்னது போல அபிமன்யு தன் குடும்பத்தாருடன் செட்டில் ஆவதற்காக இந்தியாவிற்கே திரும்பி வந்துகொண்டிருந்தான். பொருட்களை எல்லாம் பேக்கேஜர்ஸ் மூலம் அனுப்பி வைத்துவிட்டான். அவனுக்காகத்தான் விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தனர்.
“அப்பா ஆத்ரேஷும் நம்ம கூடவே இனிமே இந்த ஊரிலேயே இருந்து விடுவானா?” என்று கவிச்சந்திரனின் தவப்புதல்வி கேட்டுக் கொண்டிருக்க.
“ஆமாமா இனி இங்கே இருந்திடுவாங்க. நாம நினைக்கும் போதெல்லாம் அத்தையையும் அவனையும் பார்க்க முடியும்” என்றான் கவிச்சந்திரன்.
தங்கை திரும்பி ஊருக்கு வருவது அவனுக்கு அவ்வளவு சந்தோஷம். அது மட்டுமா அவளால் பேச முடிந்திருந்தது பழையது போல இல்லையென்றாலும் கீச்சு குரலில் மெல்லமாக பேசிக்கொண்டிருந்தாள். ஊமையாக இருப்பதற்கு இது தேவலாம். தன் மனதில் நினைப்பதை வெளிப்படுத்த முடிகிறது என்று அவளுடைய சொந்தங்கள் சந்தோஷப்பட்டு கொண்டுதான் இருந்தனர்.
“இன்னும் பிளைட் வந்து சேர எவ்வளவு நேரம் இருக்கு?” என்று அம்பிகா செந்தாமரையிடம் கேட்டுக் கொண்டிருக்க.
அவர் கைகடிகாரத்தை பார்த்துவிட்டு “வந்துடுமா” என்று கூறும் போதே, அந்த விமானம் வந்ததற்கான அறிவிப்பு வாசிக்கப்பட்டது.
சற்று நேரத்தில் மகனைக் கையில் பிடித்தபடி ஆராதியா நடந்து வர. மூன்று வயது பெண் குழந்தையைத் தூக்கிப்பிடித்தபடி நடந்து வந்தான் அபிமன்யு.
குடும்பமாக அவர்களைப் பார்ப்பதற்கு பெற்றவர்களுக்கும் சகோதரனுக்கும் அவ்வளவு மன நிறைவாக இருந்தது.
அபிமன்யு சொன்னது போல, வழக்கு நடக்கும் வரை அபிமன்யுவை தரம் தாழ்த்தி பேசிக் கொண்டிருந்த சமூக ஊடகங்கள் எல்லாம், வழக்கு முடிவடைந்த பிறகு, அந்தப் பெண்ணைத் தரம் தாழ்த்தி பேசிக் கொண்டிருந்தது. அதைப் பொறுக்க முடியாமல் மனம் உடைந்து உண்மையில் தற்கொலை முயற்சி செய்ய நினைத்தவளை காப்பாற்றி வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்ததாகத் தான் கேள்விப்பட்டான் கவிச்சந்திரன். அதைத் தன் தங்கை கணவனிடமும் கூறினான். அவனுக்கு எதைப் பற்றிய நாட்டமும் இல்லை.
வினை விதைத்தவன் வினை அறுப்பான். அவனைப் பொறுத்தவரை தவறு செய்யவில்லை, ஆனாலும் தண்டனையை அனுபவித்து விட்டான். கடந்த காலத்தைத் திரும்பி பார்க்கக் கூட அவன் நினைக்கவில்லை.
அவர்களை நெருங்கும் போதே அம்பிகா தன் பாதத்தை முன்னெடுத்துச் சென்று அபிமன்யுவின் கையில் இருந்த குழந்தையைத் தன் கைக்கு மாற்றி உச்சி முகர்ந்து முத்தம் கொடுத்தார். அவள் குழந்தை பெற்று இருக்கும்போது இவரும் சென்று பார்த்துக்கொண்டார் தான். ஆனாலும் வளர்ந்துவிட்ட தன் பேத்தியைப் பார்க்க அவ்வளவு சந்தோஷமாக இருந்தது அவருக்கு. மகன் மருமகள் என்று இருவரின் கலவையாக இருந்தாள் அபிநயா.
ஆதிரேஷோ கவி சந்திரனின் மகளை நெருங்கி “ஹேய் பவி எப்படி இருக்க?“ என்று கேட்டபடியே அவள் கையைப் பற்றிக் கொள்ள.
விசாலாட்சியோ தூக்க முடியாமல் பேரனைத் தூக்கிக் கொண்டார்.
தன் மகனின் செயலைப் பார்வையால் தன் மனைவியிடம் சுட்டிக்காட்டினான் அபிமன்யு. அவள் பார்வையால் கணவனை அடக்கினாள்.
“வாத்தியா நம்ம ஊருக்கே போகலாம். இவங்களுக்கு எல்லாம் பேரனும் பேத்தியும் தான் முக்கியம் போல, நம்மள யாரும் கண்டுக்கல” என்று மனைவியின் கரத்தைப் பிடித்துப் பிளைட்டுக்கே திரும்பிச் செல்வது போலப் பாவனை செய்தான்.
“மாப்பிள்ளை, மாமா, அபி” என்று பல குரல்களும் அவர்களைத் தடுத்து நிறுத்த. செந்தாமரை ஒரு அடி முன்னாள் சென்று அவன் கரத்தையும் பிடித்திருந்தார்.
“என்ன விளையாட்டு அபி இது?? உங்க அம்மா நீங்க எப்ப வருவீங்கன்னு நொடிக்கு ஒரு தரம் என்னை கேட்டுக் கேட்டு என் கழுத்தை அறுத்துட்டாள். உன்னோட மாமியார் நொடிக்கு ஒரு தடவை அந்தப் போர்டையே பார்த்துட்டு இருந்தாங்க. நான் உனக்கு மெசேஜ் தட்டிக்கிட்டே இருந்தேன். கவிச்சந்திரன் இங்க இருக்க எல்லார்கிட்டயும் இந்தப் பிளைட் எப்ப வரும்னு கேட்டுக்கிட்டே இருந்தான். இப்படி எல்லாருமே உங்க நாலு பேருக்காகத் தான் காத்துகிட்டு இருக்கோம்” என்று பொதுப்படையாகக் கூற. அவன் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது.
அவன் கையில் இருந்த தன் கையை உருவிக்கொண்டு வந்து மாமனார் மாமியாரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய ஆராதியா, பிறகு தாயை கட்டிக்கொண்டு தமையனின் கையில் இருந்த குழந்தையை வாங்கிக் கொஞ்சினாள்.
“ரொம்ப நன்றி மாப்பிள்ளை. நாங்களும் எவ்வளவோ முயற்சி பண்ணோம். ஆனா நீங்க அவள் குரலையே சரி பண்ணி கூட்டிட்டு வந்துட்டீங்க. உண்மையிலேயே அதுக்காகவே நாங்க உங்களுக்குக் கடமைப்பட்டு இருக்கோம்” என்று நெகிழ்வாக விசாலாட்சி பேசிக் கொண்டிருக்க.
“இப்பயும் முழுசா சரியாகல அத்தை. லேசா தான் குரல் வந்து இருக்கு. அப்புறம், இதை நான் சரி பண்ணல டாக்டர்ஸ் தான் சரி பண்ணாங்க” என்று மனைவியை மையலாகப் பார்த்துக் கொண்டு கூறினான் அபிமன்யு.
அதில் அவளுக்கு வெட்கம் ஏற்பட தலையைத் தாழ்த்திக் கொண்டவள். “ஆத்ரேஷ், பாட்டிக்குக் கைவலிக்கும். இறங்கி அம்மா கிட்ட வா” என்று ஆத்ரேஷை தன் கையில் வாங்கிக் கொண்டவள். மகளைத் திரும்பிப் பார்க்க.
அதை உணர்ந்து கொண்ட அம்பிகா.
“எனக்கு ஒன்னும் கை வலிக்கலடியம்மா. எவ்வளவு தக்கையாட்டம் இருக்கா பாரு. உன்ன மாதிரியே பெத்து போட்டு வச்சிருக்க. வீட்டுக்கு வந்துட்டீங்கள்ள, இனிமே உங்க ரெண்டு பேரோட உடம்பையும் எப்படி தேத்துறேன்னு பாரு” என்று அம்பிகா கூற. அதில் ஆராதியாவின் இதழ்கள் நன்றாக விரிந்து கொண்டது.
நலம் விசாரிப்புக்குப் பிறகு எல்லோருமே வீட்டிற்கு கிளம்பினார்கள். கவிச்சந்திரனின் குடும்பமும் கூட ஆராத்யாவின் வீட்டிற்கு வந்து அவர்களை விட்டு விட்டு அதன் பிறகு தான் தன் வீட்டிற்கு சென்றான்.
“என்ன உங்க தங்கச்சியும், உங்க தங்கச்சி புருஷனும் வந்துட்டாங்களா??” வீட்டிற்குள் அவர்கள் நுழைந்ததும் நுழையாததுமாகக் குழலியின் குரல் கேட்க.
கவிச்சந்திரன் வேண்டுமென்றே கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தான். “எகத்தாளத்தை பாரு? ரூமுக்கு வருவெல்ல அப்ப வச்சுக்கிறேன்” என்று கணவனை பார்த்துப் பொறுமியவள். முகவாயை தோளில் இடித்துக் கொண்டு தன்னறைக்கு சென்று விட்டாள்.
‘சில ஜென்மங்களை எல்லாம் எந்தக் காலத்திலும் திருத்த முடியாது’ என்று தன் விதியை நொந்து கொண்டு தன் மனைவியின் பின்னோடு அவன் அறைக்குள் செல்ல. தன் பேத்திகளை அழைத்துக் கொண்டு விசாலாட்சி தன்னறைக்கு வந்து விட்டார். கவிச்சந்திரனுக்கு இரண்டாவதும் மகளாகப் பிறக்க மூன்றாவது ஆண் குழந்தை தனக்கு வேண்டும் என்று அடம்பிடித்து இப்பொழுது ஆறு மாதத்திற்கு முன்னால் ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள். அடுத்தடுத்த குழந்தைகளில் அவள் சோர்ந்தாளோ என்னவோ?? அவன் சோர்ந்து விட்டான். மூன்று குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள முடியாமல் போய்விட, கைக்குழந்தையான ஆண் குழந்தையை வைத்துக்கொண்டு முதல் இரண்டு பெண் குழந்தைகளையும் மாமியாரின் பொறுப்பில் விட்டு விட்டாள் குழலி. எட்டு வயது பேத்தியையும் ஐந்து வயது பேத்தியையும் தன்னோடு தன்னறையிலேயே படுக்க வைத்துக் கொள்வார். அதில் அவருக்கு அவ்வளவு சந்தோஷம். மகள் சென்றபிறகு தனிமையில் வாடியவர், பேத்திகளின் வரவால் நிம்மதியாக உணர்ந்தார் எனலாம். என்னதான் குழலி கத்தி கொண்டு இருந்தாலும். பேத்திகளையும் பேரணையும் பார்த்த நொடி அவரின் கவலை எல்லாம் பஞ்சாகப் பறந்து விடும்.
…….
“உன் பையன் என்ன பண்றான்னு பாத்தியா? எனக்கென்னமோ எதுவும் சரியா படல தியா?” என்று அபிமன்யு தன் மனைவியைத் தன்னுள் சாய்த்து கொண்டு கூறிக் கொண்டிருக்க.
“அவன் உங்க அக்கா பொண்ணு கிட்ட எப்படி பேசரானோ அப்படித்தான் பவிகிட்டயும் பேசுறான். நீங்க ஏன் தப்பா எடுத்துக்கிறீங்க?” என்று மெல்லிய குரலில் கூறினாள் ஆராதியா.
சரியாகக் குரல் வந்துவிட்டது என்று சொல்ல முடியாது கீச்சு கீச்சு குரலில் தான் பேசுவாள். நிசப்தமாக இருந்தால் நன்றாகக் கேட்கும். பொது இடங்களில் அவள் குரல் அருகில் இருப்பவர்களுக்கே சரியாகக் கேட்காது என்பதுதான் உண்மை. ஆனால் இந்தளவாவது பேச வருகிறதே என்று அவளுக்கும் சந்தோஷம்தான். தன் குழந்தைகளிடம் தன் கணவன் தன் குடும்பத்தாரிடம் தன்னால் மனதில் நினைத்ததை பேச முடிகிறது அது போதும் அவளுக்குப் பொது இடங்களில் கத்தி பேச வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லவே இல்லை பேசும் குணமும் அவளுக்கு இல்லை.
“நீ என்ன வேணா சொல்லு உன் பையன் பெருசாயிட்டு கண்டிப்பா உன் கிட்ட தான் வந்து நிப்பான். அப்பத் தெரியும் நான் இப்ப சொன்னது உண்மையா இல்லையான்னு?” என்று அபிமன்யு கூற வருவதின் சாரம்சம் அவளுக்குப் புரியாமல் ஒன்றுமில்லை.
ஆத்ரேஷின் உடல் மொழியும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் குழந்தைகள் தானே இப்பொழுது எதையும் கணிக்க முடியாது. ரிதன்யாவின் மகள் ஆத்ரேஷைவிடவும் நான்கு வயது பெரியவள். அக்கா என்னும் பொறுப்பில் தான் எப்போதும் பேசுவாள், நடந்து கொள்வாள். ஆதரேஷுக்கு அவள்மீதும் தனிப்பட்ட பாசம் இருந்தது. ரிதன்யாவிற்கு அடுத்து ஒரு மகனும் பிறந்து விட. ரித்திகா இரண்டு பேரையும் தன் தம்பிகளாகப் பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
ஆத்ரேஷ் வீடியோ காலில் ரித்திகாவுடன் எப்படி பேசுவானோ அதே போல அடுத்து பவியிடமும் பேச ஆரம்பித்து விடுவான்.
“ஏங்க மகள் அழுவுற மாதிரிக் குரல் கேட்கல?? “ என்று ஆராதியா கேட்க.
“ஒன்னும் இல்ல உன் மகன் அவன் தங்கச்சியை பார்த்துப்பான். அவன் எவ்வளவு பொறுப்பா பாத்துக்கறான்னு நான் சொல்லி உனக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை” என்று கூறியவன். தன் கைவளைவிலிருந்து மனைவியை அகல நிறுத்தி இருக்கவே இல்லை. ஆம், அபிநயா பிறந்த நொடியில் இருந்தே தன் தங்கை என்று ஒவ்வொரு நொடியிலும் தன் செயலிலும் பேச்சிலும் உணர்விலும் காட்டிக் கொண்டிருப்பவன் அவளைத் தாயும் மாணவனாகத் தான் பார்த்துக் கொண்டான். அதை இப்பொழுது நினைக்கும் போதும் ஆராதியாவிற்கு நெகிழ்வாக இருந்தது.
அவர்களுடைய அறையில் மகனும் மகளும் உறங்கிக் கொண்டிருக்க. அதற்கு அடுத்த அறையில் தான் அவர்கள் தனிமையை போக்கிக் கொண்டிருந்தனர். விடியல் வரை அப்படியே பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டிருக்க. நேரம் கழித்து தான் உறங்கினார்கள். எப்பொழுது போல விடியலின் போது மனைவி அவன் அருகில் இல்லை. எங்குச் சென்று இருப்பாள்? என்று தெரிந்த போதும் அமைதியாக அங்கேயே உறங்கி விட்டான் அபிமன்யு
………
ஐந்து வருடம் கடந்திருந்தது. சொன்னது போல அபிமன்யு தன் குடும்பத்தாருடன் செட்டில் ஆவதற்காக இந்தியாவிற்கே திரும்பி வந்துகொண்டிருந்தான். பொருட்களை எல்லாம் பேக்கேஜர்ஸ் மூலம் அனுப்பி வைத்துவிட்டான். அவனுக்காகத்தான் விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தனர்.
“அப்பா ஆத்ரேஷும் நம்ம கூடவே இனிமே இந்த ஊரிலேயே இருந்து விடுவானா?” என்று கவிச்சந்திரனின் தவப்புதல்வி கேட்டுக் கொண்டிருக்க.
“ஆமாமா இனி இங்கே இருந்திடுவாங்க. நாம நினைக்கும் போதெல்லாம் அத்தையையும் அவனையும் பார்க்க முடியும்” என்றான் கவிச்சந்திரன்.
தங்கை திரும்பி ஊருக்கு வருவது அவனுக்கு அவ்வளவு சந்தோஷம். அது மட்டுமா அவளால் பேச முடிந்திருந்தது பழையது போல இல்லையென்றாலும் கீச்சு குரலில் மெல்லமாக பேசிக்கொண்டிருந்தாள். ஊமையாக இருப்பதற்கு இது தேவலாம். தன் மனதில் நினைப்பதை வெளிப்படுத்த முடிகிறது என்று அவளுடைய சொந்தங்கள் சந்தோஷப்பட்டு கொண்டுதான் இருந்தனர்.
“இன்னும் பிளைட் வந்து சேர எவ்வளவு நேரம் இருக்கு?” என்று அம்பிகா செந்தாமரையிடம் கேட்டுக் கொண்டிருக்க.
அவர் கைகடிகாரத்தை பார்த்துவிட்டு “வந்துடுமா” என்று கூறும் போதே, அந்த விமானம் வந்ததற்கான அறிவிப்பு வாசிக்கப்பட்டது.
சற்று நேரத்தில் மகனைக் கையில் பிடித்தபடி ஆராதியா நடந்து வர. மூன்று வயது பெண் குழந்தையைத் தூக்கிப்பிடித்தபடி நடந்து வந்தான் அபிமன்யு.
குடும்பமாக அவர்களைப் பார்ப்பதற்கு பெற்றவர்களுக்கும் சகோதரனுக்கும் அவ்வளவு மன நிறைவாக இருந்தது.
அபிமன்யு சொன்னது போல, வழக்கு நடக்கும் வரை அபிமன்யுவை தரம் தாழ்த்தி பேசிக் கொண்டிருந்த சமூக ஊடகங்கள் எல்லாம், வழக்கு முடிவடைந்த பிறகு, அந்தப் பெண்ணைத் தரம் தாழ்த்தி பேசிக் கொண்டிருந்தது. அதைப் பொறுக்க முடியாமல் மனம் உடைந்து உண்மையில் தற்கொலை முயற்சி செய்ய நினைத்தவளை காப்பாற்றி வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்ததாகத் தான் கேள்விப்பட்டான் கவிச்சந்திரன். அதைத் தன் தங்கை கணவனிடமும் கூறினான். அவனுக்கு எதைப் பற்றிய நாட்டமும் இல்லை.
வினை விதைத்தவன் வினை அறுப்பான். அவனைப் பொறுத்தவரை தவறு செய்யவில்லை, ஆனாலும் தண்டனையை அனுபவித்து விட்டான். கடந்த காலத்தைத் திரும்பி பார்க்கக் கூட அவன் நினைக்கவில்லை.
அவர்களை நெருங்கும் போதே அம்பிகா தன் பாதத்தை முன்னெடுத்துச் சென்று அபிமன்யுவின் கையில் இருந்த குழந்தையைத் தன் கைக்கு மாற்றி உச்சி முகர்ந்து முத்தம் கொடுத்தார். அவள் குழந்தை பெற்று இருக்கும்போது இவரும் சென்று பார்த்துக்கொண்டார் தான். ஆனாலும் வளர்ந்துவிட்ட தன் பேத்தியைப் பார்க்க அவ்வளவு சந்தோஷமாக இருந்தது அவருக்கு. மகன் மருமகள் என்று இருவரின் கலவையாக இருந்தாள் அபிநயா.
ஆதிரேஷோ கவி சந்திரனின் மகளை நெருங்கி “ஹேய் பவி எப்படி இருக்க?“ என்று கேட்டபடியே அவள் கையைப் பற்றிக் கொள்ள.
விசாலாட்சியோ தூக்க முடியாமல் பேரனைத் தூக்கிக் கொண்டார்.
தன் மகனின் செயலைப் பார்வையால் தன் மனைவியிடம் சுட்டிக்காட்டினான் அபிமன்யு. அவள் பார்வையால் கணவனை அடக்கினாள்.
“வாத்தியா நம்ம ஊருக்கே போகலாம். இவங்களுக்கு எல்லாம் பேரனும் பேத்தியும் தான் முக்கியம் போல, நம்மள யாரும் கண்டுக்கல” என்று மனைவியின் கரத்தைப் பிடித்துப் பிளைட்டுக்கே திரும்பிச் செல்வது போலப் பாவனை செய்தான்.
“மாப்பிள்ளை, மாமா, அபி” என்று பல குரல்களும் அவர்களைத் தடுத்து நிறுத்த. செந்தாமரை ஒரு அடி முன்னாள் சென்று அவன் கரத்தையும் பிடித்திருந்தார்.
“என்ன விளையாட்டு அபி இது?? உங்க அம்மா நீங்க எப்ப வருவீங்கன்னு நொடிக்கு ஒரு தரம் என்னை கேட்டுக் கேட்டு என் கழுத்தை அறுத்துட்டாள். உன்னோட மாமியார் நொடிக்கு ஒரு தடவை அந்தப் போர்டையே பார்த்துட்டு இருந்தாங்க. நான் உனக்கு மெசேஜ் தட்டிக்கிட்டே இருந்தேன். கவிச்சந்திரன் இங்க இருக்க எல்லார்கிட்டயும் இந்தப் பிளைட் எப்ப வரும்னு கேட்டுக்கிட்டே இருந்தான். இப்படி எல்லாருமே உங்க நாலு பேருக்காகத் தான் காத்துகிட்டு இருக்கோம்” என்று பொதுப்படையாகக் கூற. அவன் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது.
அவன் கையில் இருந்த தன் கையை உருவிக்கொண்டு வந்து மாமனார் மாமியாரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய ஆராதியா, பிறகு தாயை கட்டிக்கொண்டு தமையனின் கையில் இருந்த குழந்தையை வாங்கிக் கொஞ்சினாள்.
“ரொம்ப நன்றி மாப்பிள்ளை. நாங்களும் எவ்வளவோ முயற்சி பண்ணோம். ஆனா நீங்க அவள் குரலையே சரி பண்ணி கூட்டிட்டு வந்துட்டீங்க. உண்மையிலேயே அதுக்காகவே நாங்க உங்களுக்குக் கடமைப்பட்டு இருக்கோம்” என்று நெகிழ்வாக விசாலாட்சி பேசிக் கொண்டிருக்க.
“இப்பயும் முழுசா சரியாகல அத்தை. லேசா தான் குரல் வந்து இருக்கு. அப்புறம், இதை நான் சரி பண்ணல டாக்டர்ஸ் தான் சரி பண்ணாங்க” என்று மனைவியை மையலாகப் பார்த்துக் கொண்டு கூறினான் அபிமன்யு.
அதில் அவளுக்கு வெட்கம் ஏற்பட தலையைத் தாழ்த்திக் கொண்டவள். “ஆத்ரேஷ், பாட்டிக்குக் கைவலிக்கும். இறங்கி அம்மா கிட்ட வா” என்று ஆத்ரேஷை தன் கையில் வாங்கிக் கொண்டவள். மகளைத் திரும்பிப் பார்க்க.
அதை உணர்ந்து கொண்ட அம்பிகா.
“எனக்கு ஒன்னும் கை வலிக்கலடியம்மா. எவ்வளவு தக்கையாட்டம் இருக்கா பாரு. உன்ன மாதிரியே பெத்து போட்டு வச்சிருக்க. வீட்டுக்கு வந்துட்டீங்கள்ள, இனிமே உங்க ரெண்டு பேரோட உடம்பையும் எப்படி தேத்துறேன்னு பாரு” என்று அம்பிகா கூற. அதில் ஆராதியாவின் இதழ்கள் நன்றாக விரிந்து கொண்டது.
நலம் விசாரிப்புக்குப் பிறகு எல்லோருமே வீட்டிற்கு கிளம்பினார்கள். கவிச்சந்திரனின் குடும்பமும் கூட ஆராத்யாவின் வீட்டிற்கு வந்து அவர்களை விட்டு விட்டு அதன் பிறகு தான் தன் வீட்டிற்கு சென்றான்.
“என்ன உங்க தங்கச்சியும், உங்க தங்கச்சி புருஷனும் வந்துட்டாங்களா??” வீட்டிற்குள் அவர்கள் நுழைந்ததும் நுழையாததுமாகக் குழலியின் குரல் கேட்க.
கவிச்சந்திரன் வேண்டுமென்றே கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தான். “எகத்தாளத்தை பாரு? ரூமுக்கு வருவெல்ல அப்ப வச்சுக்கிறேன்” என்று கணவனை பார்த்துப் பொறுமியவள். முகவாயை தோளில் இடித்துக் கொண்டு தன்னறைக்கு சென்று விட்டாள்.
‘சில ஜென்மங்களை எல்லாம் எந்தக் காலத்திலும் திருத்த முடியாது’ என்று தன் விதியை நொந்து கொண்டு தன் மனைவியின் பின்னோடு அவன் அறைக்குள் செல்ல. தன் பேத்திகளை அழைத்துக் கொண்டு விசாலாட்சி தன்னறைக்கு வந்து விட்டார். கவிச்சந்திரனுக்கு இரண்டாவதும் மகளாகப் பிறக்க மூன்றாவது ஆண் குழந்தை தனக்கு வேண்டும் என்று அடம்பிடித்து இப்பொழுது ஆறு மாதத்திற்கு முன்னால் ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள். அடுத்தடுத்த குழந்தைகளில் அவள் சோர்ந்தாளோ என்னவோ?? அவன் சோர்ந்து விட்டான். மூன்று குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள முடியாமல் போய்விட, கைக்குழந்தையான ஆண் குழந்தையை வைத்துக்கொண்டு முதல் இரண்டு பெண் குழந்தைகளையும் மாமியாரின் பொறுப்பில் விட்டு விட்டாள் குழலி. எட்டு வயது பேத்தியையும் ஐந்து வயது பேத்தியையும் தன்னோடு தன்னறையிலேயே படுக்க வைத்துக் கொள்வார். அதில் அவருக்கு அவ்வளவு சந்தோஷம். மகள் சென்றபிறகு தனிமையில் வாடியவர், பேத்திகளின் வரவால் நிம்மதியாக உணர்ந்தார் எனலாம். என்னதான் குழலி கத்தி கொண்டு இருந்தாலும். பேத்திகளையும் பேரணையும் பார்த்த நொடி அவரின் கவலை எல்லாம் பஞ்சாகப் பறந்து விடும்.
…….
“உன் பையன் என்ன பண்றான்னு பாத்தியா? எனக்கென்னமோ எதுவும் சரியா படல தியா?” என்று அபிமன்யு தன் மனைவியைத் தன்னுள் சாய்த்து கொண்டு கூறிக் கொண்டிருக்க.
“அவன் உங்க அக்கா பொண்ணு கிட்ட எப்படி பேசரானோ அப்படித்தான் பவிகிட்டயும் பேசுறான். நீங்க ஏன் தப்பா எடுத்துக்கிறீங்க?” என்று மெல்லிய குரலில் கூறினாள் ஆராதியா.
சரியாகக் குரல் வந்துவிட்டது என்று சொல்ல முடியாது கீச்சு கீச்சு குரலில் தான் பேசுவாள். நிசப்தமாக இருந்தால் நன்றாகக் கேட்கும். பொது இடங்களில் அவள் குரல் அருகில் இருப்பவர்களுக்கே சரியாகக் கேட்காது என்பதுதான் உண்மை. ஆனால் இந்தளவாவது பேச வருகிறதே என்று அவளுக்கும் சந்தோஷம்தான். தன் குழந்தைகளிடம் தன் கணவன் தன் குடும்பத்தாரிடம் தன்னால் மனதில் நினைத்ததை பேச முடிகிறது அது போதும் அவளுக்குப் பொது இடங்களில் கத்தி பேச வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லவே இல்லை பேசும் குணமும் அவளுக்கு இல்லை.
“நீ என்ன வேணா சொல்லு உன் பையன் பெருசாயிட்டு கண்டிப்பா உன் கிட்ட தான் வந்து நிப்பான். அப்பத் தெரியும் நான் இப்ப சொன்னது உண்மையா இல்லையான்னு?” என்று அபிமன்யு கூற வருவதின் சாரம்சம் அவளுக்குப் புரியாமல் ஒன்றுமில்லை.
ஆத்ரேஷின் உடல் மொழியும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் குழந்தைகள் தானே இப்பொழுது எதையும் கணிக்க முடியாது. ரிதன்யாவின் மகள் ஆத்ரேஷைவிடவும் நான்கு வயது பெரியவள். அக்கா என்னும் பொறுப்பில் தான் எப்போதும் பேசுவாள், நடந்து கொள்வாள். ஆதரேஷுக்கு அவள்மீதும் தனிப்பட்ட பாசம் இருந்தது. ரிதன்யாவிற்கு அடுத்து ஒரு மகனும் பிறந்து விட. ரித்திகா இரண்டு பேரையும் தன் தம்பிகளாகப் பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
ஆத்ரேஷ் வீடியோ காலில் ரித்திகாவுடன் எப்படி பேசுவானோ அதே போல அடுத்து பவியிடமும் பேச ஆரம்பித்து விடுவான்.
“ஏங்க மகள் அழுவுற மாதிரிக் குரல் கேட்கல?? “ என்று ஆராதியா கேட்க.
“ஒன்னும் இல்ல உன் மகன் அவன் தங்கச்சியை பார்த்துப்பான். அவன் எவ்வளவு பொறுப்பா பாத்துக்கறான்னு நான் சொல்லி உனக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை” என்று கூறியவன். தன் கைவளைவிலிருந்து மனைவியை அகல நிறுத்தி இருக்கவே இல்லை. ஆம், அபிநயா பிறந்த நொடியில் இருந்தே தன் தங்கை என்று ஒவ்வொரு நொடியிலும் தன் செயலிலும் பேச்சிலும் உணர்விலும் காட்டிக் கொண்டிருப்பவன் அவளைத் தாயும் மாணவனாகத் தான் பார்த்துக் கொண்டான். அதை இப்பொழுது நினைக்கும் போதும் ஆராதியாவிற்கு நெகிழ்வாக இருந்தது.
அவர்களுடைய அறையில் மகனும் மகளும் உறங்கிக் கொண்டிருக்க. அதற்கு அடுத்த அறையில் தான் அவர்கள் தனிமையை போக்கிக் கொண்டிருந்தனர். விடியல் வரை அப்படியே பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டிருக்க. நேரம் கழித்து தான் உறங்கினார்கள். எப்பொழுது போல விடியலின் போது மனைவி அவன் அருகில் இல்லை. எங்குச் சென்று இருப்பாள்? என்று தெரிந்த போதும் அமைதியாக அங்கேயே உறங்கி விட்டான் அபிமன்யு
………