Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 128
- Thread Author
- #1
“முல்லை ஏன் அழுவுற?” என்று வந்தான் கதிர்.
“எனக்கு அப்பாவ பாக்கணும்.”
“அழாத முல்லை. உன் அப்பா மரணத்துக்கு கண்டிப்பா ஒரு நியாயம் கிடைக்கும்.”
“நியாயம் கிடைச்சா என் அப்பா திரும்ப வருவாரா கதிர்?”
“நியாயம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் போன உயிர் போனது தான். அந்த இழப்பை ஆயிரம் புது வரவு வந்தாலும் பூர்த்தி செய்ய முடியாது. ஆனா நம்ம இதை கடந்து தான் வாழ்ந்து ஆகணும்.”
“எனக்கு என் அப்பா தானே எல்லாமே. அம்மாவை நான் பார்த்தது கூட இல்லை. அப்பாவையும் எரிச்சிட்டாங்க. நான் அவரகிட்ட போய் பாக்கணும்ன்னு சொன்னதுக்கு கூட என்னை விடல.”
“சரி இப்படியே அழுதுட்டு இருந்தா என்ன ஆகறது. வா வந்து பிஸ்கட் எதாவது சாப்பிடு. ஜூஸ் குடிக்கிறியா?”
“வேணாம்.”
“சரி ஏன் கீழ உட்காந்து இருக்க? என்கூட வா நான் உனக்கு ஒன்னு காட்டுறேன்.”
“எங்க கதிர்?”
“நான் உன்ன எந்த அளவுக்கு காதலிக்கிறேன்னு வந்து பாரு” என்று ஒரு அறைக்கு அழைத்துச் செல்ல, “இந்த ரூம் யாருது?”
“இது தான் நம்ம பெட்ரூம்” என்றான்.
“படுக்குற அறையா?”
“ம் ஆமா. வா உள்ள.” முல்லையை கதிர் அறைக்குள் அழைத்து செல்ல, அவன் அறை முழுவதும் முல்லையின் புகைப்படம் ஒட்டி இருந்தது.
“என்ன கதிரு இது என்னோட படமா இருக்கு? இதெல்லாம் நீ எப்போ எடுத்த?”
“ஏன் எடுத்தனு கேளு.”
“ம்... சரி ஏன் எடுத்த?”
“நான் உன்ன பாத்துகிட்டே இருக்கணும். அதுக்காக தான் எடுத்தேன். நல்லா இருக்கா?”
“ம்...” என தலையசைத்தாள்.
“சரி எதாவது சாப்பிடுறியா?”
“வேணாம். ஆங் இந்த வேஷ்டி என் இடுப்பில நிற்கவே மாட்டுது.”
“குடு நான் கட்டி விடுறேன். ம்... முல்லை பேசாம நீ என்னுடைய பேன்ட் போட்டுக்கோ.”
“இல்ல பாவாடை தாவணி காஞ்சதும் நான் அதை மாத்திக்கிறேன். இப்ப இதோட இருக்கிறேன். ஏன் இது நல்லா இல்லையா?”
“யார் சொன்னது? நீ எல்லா டிரெஸ்லையும் அவ்ளோ அழகா இருக்க. ஏன்னா என்னைக்குமே நீ என் அழகி” என்று புகழ்ந்தான்.
“முல்லை தூங்கலாமா. ரொம்ப அசதியா இருக்கு.”
“ம்... கதிர்”
“வா வந்து படு” என்றதும் அவள் கீழே படுக்க, “ஏய் ஏன் கீழ படுக்குற?”
“வேற எங்க படுக்க கதிர்?” முழித்தாள் முல்லை.
“இங்க வா. வந்து என்கூட மெத்தையில படு.”
“ஹ்ம் வேணாம். நான் இங்கேயே படுத்துக்குறேன்.”
“முல்லை.” அவளின் ம்ம்..ல் “நான் சொன்னா கேப்ப இல்ல.”
“ஆமா கதிர்.”கதிர் : அப்போ வா..
“என்கிட்ட வந்து படு” என்றதும் அவன் அருகில் படுக்க, “ஹேய் விழ போற. நல்லா படு” என்றவன் அவள் கொஞ்சம் நெருங்கிப் படுத்ததும், “உன்கூட இப்படி ஒண்ணா படுக்க நான் எத்தனை நாள் ஏங்கி இருக்கேன் தெரியுமா?” என்றான்.
“ஹ்ம் தெரியாது.”
“சரி நான் உனக்கு யாருன்னு தெரிதா?”
“நீ கதிர்.”
“அது இல்ல. உனக்கு நான் யாருன்னு கேட்டேன்.”
“நீ தான் என் அப்பாக்கு பதிலா எனக்காக இருக்கன்னு சொன்னியே கதிர்.”
“அது உண்மை தான்.”
“பின்ன என்ன?”
“ம் சரி எனக்கு நீ என்னனு உனக்கு தெரியுதா?”
“ம் தெரியும்.”
“ஓ... என்ன தெரியும்” என்றவன் குரலில் ஆர்வம்.
“உனக்கு அம்மா இல்லல்ல. அப்போ நான் உனக்கு அம்மா மாதிரி.”
“உண்மை தான் என் அம்மா முகத்தை உன் மூலமா தான் நான் நிறைய முறை உணர்ந்தேன்.”
“கதிர் இனிமே அப்பா வர மாட்டாரா?”
“ஏன் உனக்கு என்கூட இருக்கிறது பிடிக்கலையா?”
“இல்ல அப்பாவை பாக்கனும் போல இருந்துச்சு. கண்ணை மூடுனா அப்பாவை அவங்க எரிச்சது தான் தெரியுது.”
“நீ கொஞ்சம் கொஞ்சமா அதையெல்லாம் மறக்க முயற்சி பண்ணு.”
“எப்படி மறக்குறது கண்ணை மூடுனாலே, யாரோ என் முடியை பிடிச்சி இழுக்குற மாதிரி இருக்கு. ரொம்ப பயமா இருக்கு.”
“நான் தான் உன்கூட இருக்கேன் இல்ல. பயப்படாத.”
“ம்...”
“முல்லை உனக்கு பயமா இருந்தா என்னை, என்னை வேணா கட்டிப் பிடிச்சிகிட்டு படுத்துக்கோ.”
“இல்ல வேணாம். இதோ தலையணை இருக்கு இல்ல நான் அதை கட்டிக்கிறேன்.”
கதிர் அதை தூக்கி தூரம் வீசினான்.
“ஏன் கதிர் அதை தூக்கி போட்ட?”
“உனக்கும் எனக்கும் நடுவுல ஒண்ணுமே இருக்க கூடாது புரியுதா?” என்றதும் அவள் தலையசைக்க, “என்னாச்சு. தலை மட்டும் அசையுது.”
“அப்போ இந்த போர்வை.” அவன் சிரிக்க, “ஏன் சிரிக்கிற?”
“அதுவும் வேணாம். அதையும் தூக்கி தூற வீசு.”
“ம்... போட்டுட்டேன்.”
“ம்... நல்ல பொண்ணு. சரி தூங்கு.”
“நீ நான் தூங்குனதும் எங்கேயும் போயிடாத.”
“போக மாட்டேன். நீ தூங்கு.” கதிர் முல்லை கரங்களை பற்றிக்கொண்டு கண்ணுறங்க, முல்லையும் அவள் வலிகளை மறைத்து கொண்டு கண்கள் மூடினாள்.
மாலை நேரம் இவர்கள் வீட்டு கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டு முல்லை தூக்கத்தில் இருந்து பயந்து போய் கண் விழித்து, “கதிர் கதிர் யாரோ வராங்க. எழுந்திரு” என்றாள்.
“ஏய் இரு இரு பயப்படாத. மணியா தான் இருப்பான். நீ இரு நான் பாக்குறேன்.” கதிர் வாசல் கதவை திறக்க, வாசலில் சவிதா மற்றும் அவளின் கணவன் பீட்டர் மற்றும் இவர்களின் நண்பன் மணி ஆகியோர் உள்ளே நுழைந்தனர்.
“ஹாய் கதிர். என்னாச்சு சவி என்னென்னமோ சொல்றா” என பீட்டர் கேட்க,
“ம் ஆமா பீட்டர் அவ சொன்னது உண்மை தான்.”
“முல்லை எங்க?”
கதிர், “முல்லை” என்றழைக்க, “ம் கதிர் இதோ வரேன்” என்றாள்.
“பீட்டர் இவங்க தான் முல்லைப்பூ. நம்ம கதிர் மனைவி. முல்லை இவரு தான் பீட்டர். என்னோட புருஷன்” என்று அறிமுகம் செய்தாள் சவீதா.
“உங்களுக்கு கல்யாணம் ஆச்சா?”
“ம் ஒருமுறை ஆச்சே” என்று சிரித்தாள்.
“அப்புறம் கதிர் மேற்கொண்டு என்ன ப்ளான்?”
“பர்ஸ்ட் அப் ஆல் முல்லைய வச்சு போலீஸ் ஸ்டேசன்ல ஒரு கம்ப்ளைன்ட் தர சொல்லனும். அண்ட் நம்மளே இந்த கேசை புரசீட் பண்ணுவோம்.”
“மச்சான் வேற எதாவது பிரச்சனை வர போகுது.
“என்ன வந்தாலும் சரி மணி. நம்ம இந்த கேசை நடத்தியே ஆகணும். இந்த வெறி பிடித்த மிருகங்களை பற்றி இந்த ஊர் உலகத்துக்கு சொல்லியே ஆகணும்.”
“சரி நீ முடிவு பண்ணிட்ட. என்னமோ பண்ணு.”
“மாமா இந்தா டின்னர்.”
“நீ பண்ணியா? என்றான் கதிர்.
“ம்க்கும் கிழிப்பா. இவள கட்டினதுல இருந்து பீட்டர் ஜான்தான் எல்லாமே பண்ணுறாரு போல. பாவம் பீட்டர் ஒரு ஜான் குறைந்து வேற போயிட்டாரு பாத்தியா.”
“டேய்! நீ அடேங்கவே மாட்டியா. சரி மாமா நீங்க சாப்பிடுங்க. இப்போதைக்கு நம்ம யாரும் வெளிய ரொம்ப போக வேணாம். பீட்டர் மட்டும் நமக்கு தேவையானதை பண்ணட்டும்.”
“அவன் உனக்கு மட்டும் தான் பண்ணுவான். எங்களுக்குமா பண்ணுவான்..
“டேய்! வீணா போனவனே நீ அடங்கவே மாட்டல்ல. சரி சவி நீ சொல்றதும் சரி தான். நம்ம ஒரு பத்து நாளைக்கு வெளிய ரொம்ப போக கூடாது” என்று கதிர் சொன்னான்.
அடுத்த பத்து நாட்களுக்கு இவர்கள் அடிக்கடி வெளியே போவதை தடுக்க, கதிர், முல்லை அப்பா மீது திருட்டு பழி போட்டு அவரைக் கொலை செய்த, அவனின் மாமன்கள் இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தேவையான ஆவணங்களை தயார் செய்தவன், அதை தபால் மூலம் அவனின் கிராமத்துக்கு அனுப்பி வைத்தான்.