• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
3


“இன்னா சாரு ரவுசு வுட்டுக்கினுருக்க? பேஜாரு காமிக்காம அந்தாண்ட போ” என்றாள்.

“என்னமா இப்படிப் பேசுற? பத்து வருஷமா இந்த வழியாதான் தெருவுக்குள்ள போறோம். இதை அடைச்சிட்டா அந்தப்பக்கம் உள்ள குடித்தனங்கள் நிலைமை என்ன ஆகிறது?”

“டக்கரா ட்ருத்து(நிஜம்) பேசுற சாரு. உன் வூட்டுக்கு பேக்காண்ட ஒரு வூடு இர்க்கே அங்கன இன்னா சீன காமிக்கிறானுங்களோ அத்தையே நீயும் காமி.”

“நீ அந்த நித்யன் வச்ச ஆளா? இந்த சலசலப்புக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்” என்றார்.

“ஆகாங்! இன்னாமே மயிலு. இவன் நாம எத்தையோ சொன்னா, இவன் இன்னாத்தையோ பேசிக்கினுருக்கான்.”

“பெருமாள் நான் யாரையும் வைக்கல. எனக்கு பிரச்சனைன்னா சம்பந்தப்பட்டவன்கிட்டயே பேசித் தீர்த்துப்பேன். உன்கிட்ட இன்னும் பேச்சுவார்த்தை நடந்துட்டுதான் இருக்கு” என்றார் நித்யன் என்ற மனிதர்.

“ஓ... அந்த பொற வூட்டுக்காரனா நீயு? உன்ன இப்பதான் சாரு மொத தபா கண்டுகினேன். மயிலு நீ இந்தாளைக் கண்டுகினுகிறியா?” என்றாள் அருகில் இருந்தவளிடம்.

“அட போ நட்டு. நமக்கு எவனையும் தெர்யாது” என்றதும் நட்டு என்றழைக்கப்பட்டவள் கண்கள் மயிலுக்கு கண்டனம் தெரிவிக்க, தலையைச் சொறிந்தபடி அசட்டுத்தனமாய் சிரித்தாள் மயில்.

“சாரே கேட்டுகினியா. இந்தாள பஸ்ட்டு இப்பதான் கண்டுகினோம். இந்த வூட்டுக்கு இன்னிக்குதான் குட்தனம் வந்தோம். எங்க இடத்துல ரோடு இட்டுருக்கானுங்க. அதின்னாத்துக்கு எங்க பெர்மிட்டு இல்லாம இட்டானுங்க தெர்ல. லேடீஸூ இருக்குற வூட்டுல கஸ்மாலம் எவுனாவது பூந்துட்டா பேஜாராகிரும்னுதான் மூடிகினோம்.”

“பஜாரிங்களைத் தேடி... அதுவும் பார்க்க சகிக்காத இந்தக் கேவலமான மூஞ்சிங்களைத் தேடி வர்றானுங்களாம்” என்று பெருமாள் முணுமுணுக்க,

“இன்னா சாரே உன் மவுத்து ஓவரா ரவுசு வுடுது? சவுண்டு வுட்டா உன் வொய்பு நெத்தி பொட்ட தூக்கி, உன் போட்டோக்கு இட்டுக்கணும். அகாங்” என்றாள் குரலை உயர்த்தி.

“ஏய் ச்சீய்... உங்ககிட்டப்போய் வாயைக் குடுத்தேன் பாருங்க” என்று முகம் சுளித்தார் பெருமாள்.

“உன் மவுத்த என்னான்டயா இட்ட? போயா... எங்காத்தா வர்றதுக்குள்ள போயிரு. இல்லாங்காட்டி நாறிப்பூடுவ நாறி” என்ற நட்டு வெத்தலைச் சிவப்பை அவனை நோக்கி துப்புவதாக பாவ்லா செய்து சாலையோரம் துப்பினாள்.

“ஏன்மா பொண்ணுங்களா, இதைத்தாண்டி நாற்பது, ஐம்பது குடித்தனம் இருக்குது. இப்படி நீங்க வழியை அடைச்சிட்டா எப்படிமா நாங்க போறது? எங்களுக்கு இந்த ஒரு வழி மட்டும்தான் இருக்கு. எங்களை கொஞ்சம் யோசிங்க” என்றார் ஒருவர்.

“நீ சொல்றது கரீட்டுதான் சாரே. இத்தோ ட்ருத்து கூவுதே இந்த பெருசு கூடதான் அந்தாண்ட நிக்குதே...” என்று நித்யனைக் காண்பித்து, “அந்த மனுஷன் வூட்டுக்கு ரூட்டு வுடாம மூடிக்கினுச்சு. நீயெல்லாம் அது வூட்டுக்கிட்டனதானே இருக்க? எந்த கஸ்மாலமாவது என்னனு கேட்டுக்குனியா? இப்பக்கி உன் வூட்டுக்கு ரூட்டு இல்லாங்காட்டி சவுண்டு வுடுறியே?” என்றாள் மயில்.

“ஏன்மா அது என் ஒருத்தன் பிரச்சனை மட்டும்தான். நீ இப்படி செய்யுறது எத்தனை குடும்பத்துக்கு பாதிப்பு.”

“அத்து உனக்கு நோவ்வுன்னா, இத்து எங்க நோவ்வு. உன் ஜோலிய பாத்துகினு நகரு சாரே. ஏய் மயிலு வூட்டுக்குள்ளார வா” என்று இருவரும் வீட்டிற்குள் நுழையப்போக,

“ஹலோ இப்படி விட்டுட்டுப் போனா எப்படி? பின்னாடி ட்ராபிக்காகிருச்சி. வழி விடலன்னா போலீஸ்கு போவோம்” என நான்கைந்து குரல்கள் ஒருங்கே எழுந்தது.

“இன்னா உன்க்குதேன் போலீசு தெர்யுமோ? எவன வேணும்னா இட்டுகினு வா. இல்ல இரு நானே வர சொல்றேன்” என்று கைபேசியை எடுத்து காவல்துறைக்கு அழைத்து “சாரே புள்ளையார் கோயிலாண்ட பிராபுளமு. ஜல்தியா வந்து பைசல் பண்ணு. இல்லாங்காட்டி நானே பைசலாக்கினுகிறேன்.” எதிரில் என்ன சொன்னார்களோ “ஆங் சரி சாரே” என பேசி முடித்து, பட்டன் கைபேசியை ஒரு அழுத்து அழுத்தி நிறுத்தி “பை நிமிட்டுல வந்துக்குனாராம்” என்றதும் சலசலப்புகளுடன் காத்திருந்தார்கள்.

கால்மணி நேரத்திற்கெல்லாம் காக்கி சீருடையில் வந்த இன்ஸ்பெக்டர் விஜய், “எனக்கு யார் போன் செய்தது?” என்று கேட்டதும், நட்டு முன் வந்து “நான்தான்” என்றாள்.

“என்ன பிரச்சனைமா? வீட்டு முன்ன ஏன் இவ்வளவு கூட்டம்?” என கேட்க,

“சார் நான் சொல்றேன்” என்ற பெருமாளை கைதூக்கி நிறுத்தி, “முதல்ல யார் கம்ப்ளைய்ண்ட் பண்ணினாங்களோ அவங்க சொல்றதைதான் எடுத்துப்போம். மத்ததை விசாரணையப்ப நீங்க வரலாம்” என்றான் விஜய்.

“சார் நான்தான் போலீஸ் போறேன் சொன்னேன். அதுக்குள்ள இதுங்க போன் பண்ணிருச்சி” என்று பெருமாள் தன் கடுப்பைக் காட்டிட,

“ஏய் இன்னா ஜந்து மாரி, அது இதுனு பேசினுக்கிற? வந்தேனு வையு...” விரல் நீட்டி இரு பெண்களும் மிரட்ட,

அவர்களைத் தடுத்து, “சார் இவங்க புத்திசாலி. அதான் முதல்ல வர்றவங்களுக்கு முதலிடம்னு முந்திக்கிட்டாங்க. நீங்க லேட் பண்ணிட்டீங்க.”

“இன்ஸ்பெக்டர் சார்! அப்ப கொலை பண்ணிட்டு வந்து முதல்ல சொன்னா அவனுக்கு ஆதரவா நிற்பீங்களா?” என்றார் கோபமாக.

“அப்கோர்ஸ். முதல்ல வர்றவங்களோட நியாய அநியாயத்தைக் கேட்டுட்டுதான் அடுத்த மூவ் பண்ணுவோம். இப்ப உங்களுக்கு என்ன சார் பிரச்சனை? இவங்ககிட்ட விசாரிச்சிட்டு உங்ககிட்ட வர்றேன்” என்றதும் நட்டுவும், மயிலும் நடந்தது அனைத்தையும் சொன்னார்கள்.

“நீங்க சொல்றதும் சரிதான்” என்றதும் கோபத்தில் அனைவரும் கத்த, “அமைதி ப்ளீஸ்” என்ற இன்ஸ்பெக்டர் விஜய் பெருமாளைப் பார்த்து, “சார் நீங்கதான, உங்ககிட்ட பாதைவிடச் சொல்லி உங்க வீட்டுக்குப் பின் வீட்டுக்காரன் டார்ச்சர் பண்றான்னு ஸ்டேஷன் வந்தீங்க?” என கேட்க,

“ஆ...ஆமா சார்” என்று தடுமாற,

“இப்ப விட்டுட்டீங்களா?” என்ற கேள்வியில் ‘ஏன் விடவில்லை?’ என்ற கேள்வியும் இருந்தது.

“அதெப்படி சார் என் இடத்தை யாருக்கோ கொடுக்க முடியும்.”

“ஓ... அவர் பணம் தர்றேன். கொஞ்சம் இடம் விடுங்க சொன்னாரா?”

“பணம்லாம் எதுக்குங்க சார். எனக்கு என் இடம்தான் வேணும்” என்று நிற்க, அருகில் இருந்தவர்கள் எல்லாம், “உன்னால்தான்யா” என்று பெருமாளை சத்தம் போட ஆரம்பித்தார்கள்.

“ஏன்மா இது நிஜமாகவே உங்க இடம்தானா? பத்திரம், பட்டா எல்லாத்தையும் காட்டு” என்றதும் உள்ளே சென்று பத்திரங்களை எடுத்து வந்து தர, சில நிமிடங்கள் அதைப் பார்த்து, “சரியாத்தான் இருக்குது. சார் உங்க நியாயம் சரின்னா இவங்க நியாயமும் சரிதான். என்ன நீங்க ஒரு வீட்டை லாக் பண்ணுனீங்க. இவங்க மொத்த இடத்தையும் லாக் பண்ணிட்டாங்க. எங்க எந்த கேஸ் நடத்தினாலும் செல்லாது” என்று இன்ஸ்பெக்டர் விஜய் முடிக்க,

“சார் அப்ப நாங்கள்லாம் எப்படிப் போறது?” என்று தெருக்காரர்கள் கத்த ஆரம்பித்தார்கள்.

“பெருமாள் சார் வீட்டுக்குப் பின்னாடி உள்ள வீட்டுக்காரர் எப்படிப் போனாரோ அப்படிப் போங்க” என்று அலட்சியமாகப் பதிலளிக்கவும், அனைவரும் பெருமாளை வசைபாடினார்கள்.

“அவரை ஏன் திட்டுறீங்க? அது எங்க பிரச்சனை. நாங்க பேசித் தீர்த்துக்கிறோம்” என்று நித்யன் இடையிட்டார்.

“இங்கயே பைசலாக்கு சாரே. அப்பாலிகா நாங்க உன் ரூட்டுல வருவம்” என்று இழுத்துப் பேசினர் பெண்கள்.

பெருமாள் நித்யனின் எதிரில் வந்து, “நான் ஐந்தடி இடம் விடுறேன். பைக் தாராளமா போகலாம். நீங்க பிற்காலத்துல கார் வாங்கினா எங்க வீட்டுக்கு முன்னாடியே பார்க் பண்ணிக்கலாம்” என்று விட்டுக்கொடுக்க, ஒரே சந்தோஷக் கூச்சல் மற்றவர்களிடம்.

“இப்ப நீ என்னமா செய்யப்போற?” இன்ஸ்பெக்டரின் கேள்வியில் ஒரு வெற்றுப் பத்திரத்தை எடுத்து வேகமாக எழுதி பெருமாளிடம் கொடுத்து, “இத்துல கையெழுத்து இடு சாரே. நான் நம்புறேன்” என்றாள்.

வித்தியாசமாய் பார்த்த பெருமாளிடம், “படிச்சினு சொல்லு சாரே. நானு ஜனங்களுக்குனு எங்க எடத்தைக் கொடுக்குறேனு எழுதி கையெழுத்து இட்டு இன்ஸ்பெக்டராண்ட தந்துனுகிறேன். அப்பாலிக்கா உனக்கு வரணுமே அந்த டப்பை” என்று நித்யனைக் காட்டி, “இந்த சாரு ஒன் அவருல தருவாரு” என்றாள்.

“ரொம்ப நன்றிமா. பணத்தை இன்னும் ஒருமணி நேரத்துல பெருமாள்\ சார்கிட்ட கண்டிப்பா தந்திருவேன். நீங்க யாரோ, எவரோ, காலத்துக்கும் ரொம்ப நல்லா இருப்பீங்கமா” என்றார் மனதார.

“இன்னாத்துக்கு சாரே டாங்ஸ் எல்லாம். போ சாரே போயி ஜோலியை கண்டுக்கோ. பியூச்சருக்கா வாங்குற எடத்தையாவது, ரவுசு இருக்கா இல்லையான்னு பார்த்து வாங்கு. ஏய் மயிலு உன் அண்ணாத்தையாண்ட சொல்லி இந்த சுவத்தை க்ளியர் பண்ணு” என்றாள் நட்டு.

அவள் காதோரம் குனிந்து, “என் அண்ணாத்த ஒனக்கு மச்சாந்தான நட்டு” என்றாள் நக்கலாக.

“போடி அந்தாண்ட” என்று மயிலை முறைத்தாள் நட்டு.

இன்ஸ்பெக்டரின் தலைமையில் அந்த காம்பௌண்ட் செட்டிங் நகர்த்தப்பட, பெண்கள் இருவரும் வீட்டினுள் செல்ல, அனைத்தையும் அரிச்சந்திரன் வீடியோ கவர் செய்தான்.

இதை தங்களின் கைபேசியில் வீடியோ எடுத்த சில இளவட்டங்கள், “இங்கேயும் ஒரு கூவம்” என்ற தலைப்புடன்முகநூல், வாட்சப், ட்விட்டரில் போட்டுவிட, நாடறிந்த பிரபலமானார்கள் பெண்கள் இருவரும்.

பெருமாளிடம் வந்த அரிச்சந்திரன், “உங்களைப் பார்க்கதான் சார் மேம் அனுப்பினாங்க. இன்னைக்கே கேஸ் பைல் பண்ணிடலாம் சொன்னாங்க. என்னோட ஆபீஸ் வாங்க சார். மற்றதை அங்க வச்சிப் பேசிக்கலாம்” என்றான்.

“நான் கேஸ் போடுறதாயில்ல லாயர் சார். எங்களுக்குள்ளயே பேசித் தீர்த்துக்கிட்டோம். உங்களைத் தொந்தரவு பண்ணினதுக்கு மன்னிக்கணும்” என்றார் மனதார.

“அதுக்கென்ன சார். நீங்க மனசு மாறுனீங்களே அதுவே போதும். ஒருத்தருக்கு விட்டுக்குடுக்கிறதால நாம கெட்டுப்போயிட மாட்டோம் சார். இதெல்லாம் கூட ஒருவகை புண்ணியம்தான். உங்க வாரிசுங்களுக்கு அது கிடைக்கட்டும்.”

“சரிங்க லாயர் சார். அப்படியே உங்க மேடம்கிட்டேயும் சொல்லிடுங்க” என்று பெருமாள் செல்ல, பின்னால் வந்த நித்யன் “நன்றி லாயர் சார்” என்றார்.

“எதுக்கு சார் நன்றி?” ‘நம்ம ஆடின நாடகம் தெரிஞ்சிருச்சோ’ என்ற குழப்பம் அவனுள்.

“எனக்கென்னவோ இந்த ஏற்பாடெல்லாம் உங்களோடதுன்னு தெரியுது. அதுக்கான நன்றிதான்.”

மெல்லிய புன்னகை வெளியிட்டானே தவிர, ஆம் இல்லையென்று எதுவும் சொல்லவில்லை. சில உதவிகள் சம்பந்தப்பட்டவருக்கு தெரிந்திருப்பது நல்லதென்று நினைப்பவன் அவன். அதனால்தான் அவராகவே உணர்ந்து கூறியபொழுது மறுக்கவில்லை.

“அந்த இடத்துக்கு சரியான அமௌண்ட் எவ்வளவுன்னு விசாரிச்சி கொடுத்திருங்க சார். இதோ அதற்கான பத்திரம். பெருமாள் சாரே பேக்கடிச்சாலும் சட்டப்படி செல்லாது. இனிமேல் வாங்குற இடத்தை நல்லா விசாரிச்சிக்கோங்க.”

“தேங்க்யூ லாயர் சார். உங்களுக்கான ஃபீஸ் எவ்வளவு சொன்னா தந்திடுறேன்.”

“கண்டிப்பா தந்தே ஆகணும்ன்ற எண்ணமிருந்தா, எதாவது அநாதை ஆசிரமத்துக்கு இரண்டு வேளை சாப்பாடு போட்டுருங்க சார்” என்றதும் திரும்பவும் நன்றி சொல்லி அவர் செல்ல, கைபேசியை எடுத்தவன் “தெருவின் கடைசியில் நிற்கிறேன். வந்துவிடு” என்று மின்னலுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி காத்திருக்கலானான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
“என்ன மயிலு? உங்க சீனியர் அண்ணனோட அன்பு அழைப்பா?”

“ஆமா வெய்ட் பண்றேன் வான்னு சொல்றாங்க. தேங்க்ஸ் நட்டு.” தோழியை முறைத்து “நட்டுன்ற வாயை ஒருநாள் இல்ல ஒருநாள் உடைக்கிறேனா இல்லையா பாரு” என்றாள் மிரட்டலாய்.

“ஹா... அப்புறம்! நீ மட்டும் மூச்சுக்கு முன்னூறு தடவை மயிலு சொல்வ அப்ப மட்டும் நான் கேட்டிட்டிருக்கணுமா? நீ மயிலுன்றப்பலாம் அந்த பதினாறு வயதினிலே படமும் ஸ்ரீதேவியோட செந்தூரப்பூவே பாட்டும் சப்பாணி கேரக்டர் கமலும் கண்முன்ன வந்து வந்து போறாங்க தெரியுமா? நடுவுல அந்த பரட்டை ரஜினி வேற” என்றாள் சடைப்பாக.

“ஹா...ஹா முடியலையா. ஸ்ரீதேவி மாதிரி மரத்து மேல நீ ஏறிப்படுத்துட்டு அந்தப் பாட்டைப் பாடினா செம்ம காமெடியா இருக்கும். உன் ஹைட்டுக்கு ரேவதிதான் கரெக்ட் சாய்ஸ்.”

ஆடியில சேதி சொல்லி


ஆவணியில் தேதி வச்சி

சேதி சொன்ன மன்னவருதான்

உனக்கு...

“ஏய் உன்னைக் கொல்றேனா இல்லையா பாரு. அந்த லூசும் ஆ... ஊனா குள்ளம் சொல்லி கிண்டலடிக்கிறான். நீயும்...” என்று முகம் திருப்ப,

“ஹேய் ரேவதி கேரக்டர் ஆர்டிஸ்ட். மௌனராகம் படத்துல எவ்வளவு அழகாயிருப்பாங்க தெரியுமா? என்னவோ உன்னை சில்க்ஸ்மிதா ரேஞ்சில இறக்கி சொன்ன மாதிரி ஃபீலைக் கொட்டுற?”

“ஏன்டி இப்ப உள்ள யாரும் கண்ணுக்குத் தெரியலையா?”

“இப்பலாம் ஹீரோயின்ஸே க்ளாமராதான் நடிக்கிறாங்க. இன்னொன்னு...” என்று நிறுத்தி தோழியை அருகே வரவழைத்து, “லிப்லாக் சீன் அப்படியே க்ளோஸப்ல நமக்குக் காட்டுறாங்கடி” என்று சிரித்தாள்.

ஏதோவென்று ஆர்வமாய் அருகில் சென்றவள், அவளின் வார்த்தையில் கோவம் ஏற விரட்டிப்பிடித்து அடித்து என விளையாடி, பின் அங்கேயே தங்களது மேக்கப்பைக் கலைத்து வெளியே வந்தவர்கள், தங்களுக்கு உதவிய அக்கம் பக்கத்தினருக்கு நன்றி சொல்லி, அரிச்சந்திரன் இருக்கும் இடம் நோக்கி நட்டுவின் ஸ்கூட்டியை தள்ளிக்கொண்டு நடந்தார்கள்.

“ஹேய் நட்டுமா! எங்க சீனியர் அங்க நிற்கிறார் பார்.”

ரோட்டில் பார்வையைச் செலுத்தியபடி கருப்பு நிற கூலர் கண்ணாடியை கண்களுக்குப் பொருத்தி, பைக்கில் சாய்வாக நின்றிருந்தவனைப் பார்த்த பாவையின் பார்வை சில வினாடிகள் அவனிடமே நிலைத்திருந்தது.

“வா என் சீனியர்கிட்ட உன்னை இன்ட்ரோ கொடுக்குறேன்.”

அவளை தடுத்து, “இன்னொரு நாள் பார்க்கலாம்டி” என்றாள்.

“ஏய் உனக்கு ஹெல்ப் பண்ணின இன்னொரு பொண்ணு யார்னு கேட்டா நான் என்ன சொல்றது?”

“ப்ச்... ப்ரண்ட்லி ஹெல்ப்னு சொல்லு போதும். ஏற்கனவே வீட்டுக்கு தெரியக்கூடாதுன்னு பயத்துல இருக்கேன். இதுல நடுரோட்டுல ஒரு ஆண் கூட நின்னு பேசுறதை யாராவது பார்த்தா அவ்வளவுதான். ஓகே பை” என்று ஸ்கூட்டியில் ஏறிச் சென்றாள்.

செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அரிச்சந்திரன். மேக்கப் கலைத்து வாசல் வரும்போதுதான் பார்த்தான் அவளை. விடிந்ததில் இருந்து இத்துடன் மூன்றாவது முறை பார்க்கிறான். அதுவும் தன் திட்டத்தில் நடிக்கும் பெண்ணாக நினைத்துக்கூட பார்க்கவில்லை அவன்.

சட்டென்று சற்றுமுன் எடுத்த சேரிக்கார உருவத்தை தன் செல்லில் பார்க்க பயங்கர சிரிப்பு வந்தது அவனுக்கு. ‘யம்மாடி என்னமா கலக்குதுங்க பொண்ணுங்க’ என்று மனதுக்குள் அவர்களை பலமுறை பாராட்டிவிட்டான்.

அவர்கள் இருவரும் தன்னை நோக்கி வருவது தெரிய சாதாரணமாக வேடிக்கை பார்ப்பதாய் சீன் செய்து பைக் கண்ணாடியை அவர்கள் பக்கம் திருப்பி அதன் வழியே அவளைக் கண்டான். மின்னல் ஏதோ பேச அவளோ மறுத்து வேறு வழி சென்றாள்.

‘எப்பப்பாரு அதென்ன பர்தா மாதிரி சுடிதார் சாலைப் போட்டு மூடிட்டிருக்கா. பர்தான்னா கருப்பு நிறத்துல முகம் முழுவதுமே மூடிருமே. இது அப்படியும் இல்லை. ம்... இப்படிகூட போட்டிருக்கும் இஸ்லாமியப் பெண்களைப் பார்த்திருக்கிறேன். அவங்களும் பப்ளிக்ல... என்னடா ஆராய்ச்சி பண்ணிட்டிருக்க?’ என்று மனசாட்சி கேட்க,

‘என்ன பார்த்து என்ன செய்றது. அவள் எனக்கில்லையே!’ பெருமூச்சொன்று தன்னாலயே வெளி வந்தது அவனிடமிருந்து.

“என்ன பிரதரு, ஏக்கப் பெருமூச்சா இருக்கு? அப்படி என்ன ஆசைப்பட்டு கிடைக்காமல் போச்சி? சொன்னா கிடைக்க ரெடி செய்வோம்ல” என்றாள் கிண்டலாய்.

“ஒண்ணுமில்ல சும்மாதான்” என்றவன், “ஆமா உன்னோட வந்தது உன் ஃப்ரண்டா? முஸ்லீம் பொண்ணா இருக்காங்க. அவங்கள்ல ரொம்ப ஸ்ட்ரிக்டாச்சே. எப்படி விட்டாங்க?” என்றான் கேள்வி மேல் கேள்வியாய்.

சில நொடி யோசித்தவள், “ஆமாங்க பிரதர். நான் கேட்டுக்கிட்டதாலதான் அனுப்பினாங்க. என்மேல அம்புட்டு பாசம் அவங்களுக்கு.”

முகம் வாடினாலும் சாதாரணமாக, “என் சார்பா தேங்க்ஸ் சொல்லிரு. ஆனாலும் இவ்வளவு லோக்கலா எப்படி? காலேஜ்ல முழுக்க இதான் நடக்குதா?” என்று கிண்டலாகக் கேட்டான்.

“ஏதோ ஹெல்ப் பண்ணினா எங்களையே கிண்டலடிக்கிறியா? இரு மேம்கிட்ட சொல்றேன்.”

“அங்கதான போறோம். பாய்ண்ட் பாய்ண்ட்டா செக்ஷன் போட்டு சொல்லு.”

‘வெவ்வெவ்வே... என்று உதட்டை சுளித்துக்காட்ட,

“இதுதான் நல்லாயிருக்கு. வந்து உட்காரு. இல்ல பஸ்லதான் வரணும்” என்று தன் இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்தான்.

“இப்படி மிரட்டுறதுக்கு நல்லா வாங்கிக்கட்டுவ பாரு.” முணுமுணுத்தபடி ஏறி அமர அலுவலகம் வந்ததும் அனைவரும் வாழ்த்து சொன்னார்கள்.

“தேங்க்ஸ் சந்துரு. பெருமாள் கேஸ் எங்க நம்மை ஒரு வழி பண்ணிருமோ நினைச்சேன். மனுஷன் ஏகப்பட்ட லாஜிக் பேசி, ஷப்பா கொலையா கொன்னுட்டார்” என்றாள் தன்யா.

“இனிமேல் யார்கிட்டேயும் இப்படி நடந்துக்கமாட்டார் மேம். எது செய்யணும்னாலும் ஆயிரம் முறை சரியான்னு யோசிச்சே செய்வார்.”

அங்கு வந்த இன்ஸ்பெக்டர் விஜய், “என்னோட பேமெண்ட் செட்டில் பண்ணுங்க” என்று நின்றான்.

“என்ன இன்ஸ்? நீ பார்த்த பத்து நிமிட வேலைக்கு பேமெண்ட் வேற வேணுமா? போ போய் லைசன்ஸ் இல்லாத யாராவது வருவான். அவன்கிட்ட போய் ஆட்டைய போடு” என்றான் அரிச்சந்திரன்.

“ஹான்! அப்புறம்! சில்லறைக் காசுக்காகவா இவ்வளவு பாடுபடுறோம். உன்கிட்ட எனக்கென்ன பேச்சு” என்று தன்யாவிடம் வர, அவள் அருகில் நின்றிருந்தவளைப் பார்த்து, “ஹாய் மின்னல் பெண்ணே! இன்னைக்கு செம கலக்கல் போ. அந்த காஸ்ட்யூமும் கறைபடிந்த பல்லும் அந்த சென்னைத் தமிழும், அட... அட அடடடடா பார்க்கவே கண்கொள்ளாக் காட்சி” என்று கிண்டலாக சிலாகித்தான்.

அதில் மற்றவர்கள் சிரிக்க, அவளோ விஜய்யை முறைத்து, “இதை ப்ளான் பண்ணினவனைக் கேலி பண்ணுங்க. நீங்க போட்டிருக்கிற ட்ரஸ்கான மரியாதை கொஞ்ச நேரம்தான் இருக்கும். எனக்கு வேலையிருக்கு” என்று மிரட்டி நகர்ந்தாள்.

“ஏய்! சும்மா கேலி பண்ணினா ஓவரா பேசுற? போ...” அடுத்த வார்த்தை பேசுவதற்குள் அரிச்சந்திரன் இடையிட்டு, “வந்த வேலையை மட்டும் பார்த்துட்டுப் போ இன்ஸு” என்று தன்னுடைய இடத்தில் அமர்ந்தான்.

“ஃபாத்தி அந்த செக் எடு” என தன்யா கேட்டதும், அவள் எடுத்து வர, அவளைத் தடுத்து, “சும்மாதான் கேட்டேன் தனு. இதுங்கதான் விளையாட்டை வினையாக்கிருச்சிங்க” என்று கோவத்தில் சென்றான்.

“குழந்தைகளா நீங்கள்லாம்? அர்த்தமில்லாத சண்டை போட்டுட்டு இருக்கீங்க. சரி மதியம் சாப்பிட்டீங்களா?”

“வர்ற வழியில் ஹோட்டல்ல சாப்பிட்டு வந்தாச்சி மேம்” என்றார்கள்.

“வருக வருக சாதனைப் பெண்ணே!” கிண்டலாக அழைத்த சஞ்சித்தைப் பார்த்து சிரித்தபடி, “எப்படி அத்தான் இருந்தது?” என்றாள் ஆர்வமாக.

சஞ்சய், நட்சத்திராவை விட ஐந்து வயது பெரியவன் என்பதாலோ என்னவோ நன்றாகப் பேசினாலும் அனைத்தையும் பேசுமளவு நெருக்கம் கிடையாது. அதிலும் தன்னுடன் படித்த தோழி ஆர்த்தியுடன் திருமணம் நடந்த பின்புதான் ஓரளவாவது பேசுவான். கரிசனத்தில் அவனை மிஞ்ச முடியாது.

சஞ்சித்திற்கு எதுவும் கணக்கில்லை. அவளைவிட மூன்று வயது பெரியவன். ஏ டூ இசட் அவனுக்கு அவளிடமும் அவளுக்கு அவனிடமும் பேச நிறைய இருக்கும். சின்ன வயதிலிருந்து ஆண் பெண் பாகுபாடில்லாது சொந்தம் தாண்டிய நட்பிருந்தது இருவருக்கும். அவள் எது ஆசைப்பட்டாலும், ஆசைப்பட்டதாக நினைத்தாலும் அதை முதலில் நடத்திக் கொடுப்பவன் சஞ்சித்தாகதான் இருப்பான்.

“நீயே பாரு” என்று யூட்யூப்பில் வைரலாகும் கலக்கலான வீடியோ என்ற தலைப்பில் இருந்த வீடியோவை அவளுக்குக் காண்பிக்க, ‘தானா இது’ என்பதாய் அவள் முழிக்க, அவன் சிரிக்க, “அத்தான் ப்ளீஸ். அப்பா அம்மாவுக்குச் சொல்ல வேண்டாம். அம்மா பார்த்தா திட்டுவாங்க” என்றாள் சற்று பயத்தில்.

செய்யும் பொழுது தெரியாத பயம் செய்து முடித்ததும் தலைவிரித்தாடுவதுதான் மனிதனின் சுபாவம்.

“வேற நீ செய்த காரியத்துக்கு கொஞ்சுவாங்களா? சொல்லாம செய்துட்டு நல்ல பிள்ளையா வர்ற? ப்ரண்ட்கு ஹெல்ப் பண்றதுக்கும் ஒரு லிமிட் இருக்கு நதி” என்று அவளின் தாய் வர,

“ம்மா... நம்ம கொடிக்காகமா.”

“நம்ம கொடிதான்டா. ரொம்ப நல்ல பொண்ணு கூட. உனக்கு நிறைய ஹெல்ப் பண்ணியிருக்காதான். இல்லைன்னு சொல்லலை. இருந்தாலும் உன்னை அவன் அடையாளம் தெரிஞ்சிக்கிட்டா அதோட பின் விளைவு தெரியும்தான?” விஷயம் அறிந்ததும கவலையுடன் சொன்னார் யசோதா.

“அடையாளம் தெரியக்கூடாதுன்னுதான் முக்காடு போடுறேன். இருந்தாலும் சாரிம்மா” என்று அமைதியாக நின்றாள்.

“சரி விடு யசோ. இனி அப்படி செய்யமாட்டா. என் பொண்ணு அங்க விட்ட சௌண்டுக்கு ரொம்ப டயர்டாகிருக்கும். தொண்டைக்கு இதமா எதாவது செய்து கொடு” என்றார் நந்தகுமார்.

“ஆமாங்க இப்படிக் கண்டிக்க வேண்டிய நேரத்துல கண்டிக்காம, நான் கண்டிச்சாலும் விடாம இருங்க. விளங்கிரும். கணவனைக் கடிந்தார் யசோதா.

“அம்மா அதான் சாரி சொல்லிட்டேன்ல. மேக்கப்லாம் போட்டதாலதான்மா தைரியமா நின்னேன். இனிமேல் அந்தப் புள்ளைகிட்ட பேசமாட்டேன் போதுமா” என்றதும் அழைப்பு வர, “சொல்லுடி மயிலு” என்ற உற்சாகக்குரலில் மற்றவர்கள் முறைக்க, அவளோ நாக்கைக் கடித்துக்கொண்டு மெல்ல அவ்விடம் விட்டு விலகினாள்.

“உங்க ரெண்டு பேரையும் திருத்தவே முடியாது. அவள் வரட்டும் பார்த்துக்கறேன்.” திட்டியபடியே கிச்சனுக்குள் நுழைந்தார் யசோதா.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
Learned so many Chennai Tamil words.👏👏👌👌
இந்த ஒரு எபிசோட் மட்டும் தான்பா. அதுவும் கதையில் நடக்கும் ஒரு வழக்கு சம்பந்தமான சீனுக்காக.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top