• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
7


நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே!


அட நீயும் பெண்தானே!


பெட்டில் தலைக்கு இரு கைகளையும் கொடுத்து, கால்மேல் கால்போட்டு உதட்டில் புன்னகையுடன் திறந்திருந்த கண்களில் கனவுகளுடன் நம் அரிச்சந்திரன். இன்றைய அவளுடனான சந்திப்பு இல்லாமல் போயிருந்தால், ஒருவேளை வீட்டில் பார்த்திருந்த பெண்ணை திருமணம் செய்திருப்பானாயிருக்கும். இப்பொழுது? “நதீரா! ஹவ் ஸ்வீட் நேம். கண்டிப்பா நீ எனக்குதான். என் வீட்ல யாரைப் பார்த்தாலும் இனி நோதான்” என்றான் முனகலாக.

அங்கே டேபிளில் இருந்த கவரில் நட்சத்திரா புன்னகைத்துக் கொண்டிருந்தாள் என்றால் அருகில் குட்டியாக வீற்றிருந்த முருகரோ அவனின் விதியை எண்ணி புன்னகைத்தார்.

“கொடி சிக்ஸ் தேர்ட்டி ப்ளைட்கு அப்பா டெல்லி கிளம்புறாங்க. நாம அப்பாவை ஏர்போர்ட்ல விட்டுட்டு வர்ற வழியில ஜோசியரைப் பார்த்து ஜாதகம் கேட்டுட்டு வரலாம். அதுக்கப்புறம் நீ வேலைக்குக் கிளம்பு.”

“ஏன்பா அதுக்குள்ள கிளம்புறீங்க?”

“அதுக்குதான் உன்னை என்னோட வரச்சொல்றேன். நீதான் அண்ணனோட இருக்கேன்னு சொல்லிட்ட. நான் என்னடா பண்றது?”

“சேர்ந்தாப்ல ஒன் வீக் எங்களோட இருக்கிறதில்லப்பா நீங்க” என்று முகம் திருப்பி வந்த அழுகையைக் கட்டப்படுத்த,

மகளின் குரலில் வித்தியாசத்தை உணர்ந்தவர் அவளை சமாதானப்படுத்தும் விதமாக “ஒரே நாள்தான்டா. நாளைக்குக் காலையில வந்திடுறேன். வேலை முடிஞ்சிருச்சினா இன்னைக்கு நைட்டே ப்ளைட் பிடிச்சிடுறேன். அதுக்குள்ள நீங்க ஜாதகம்லாம் பார்த்து பொண்ணு பார்க்க தேதி குறிச்சி வாங்கி வைங்க” என்றார்.

“கண்டிப்பா நைட் வந்திருவீங்கள்ல?”

“முடியாதுன்னா சொல்லிருவேன்லடா மின்னல். சிரிச்ச முகத்தோட அனுப்பணும். ஓகே” என்றதும் அவள் ஈஈஈஈஈ.. என்று பற்களைக் காட்ட, “இதுதான் என் மின்னல் பொண்ணுக்கு அழகு” என்றார் பதிலுக்கு புன்னகைத்து.

ஏர்போர்ட்டிலிருந்து வீடு வரும் வழியில் ஜோசியரின் வீட்டிற்கு தாயும் மகளும் செல்ல அவர்களைப் பார்த்து அறிமுகப் புன்னகை கொடுத்த ஜோசியர், “ரெண்டு நிமிஷம் இருங்கம்மா வர்றேன்” என்று பஞ்சாங்கத்துடன் வந்து, “பொண்ணுக்குப் பார்க்கப் போறீங்களா? பையன் எந்த ஊரு உள்ளுரா? வெளிநாடா?” என்று அடுக்கிக்கொண்டே போனார்.

“ஜோசியரே போதும் உங்க கற்பனை. கல்யாணம் எனக்கில்ல என் அண்ணனுக்கு. விட்டா எனக்கு நீங்களே பார்த்து முடிச்சி வச்சிருவீங்க போலிருக்கு” என்றாள் கேலியாக.

“அதுக்கென்னமா? பார்த்துட்டா போச்சி. உனக்கென்ன மாதிரி வேணும்னு சொல்லு தாராளமா பார்த்திடலாம்” என்றார் அவளைப்போலவே.

“நான் இந்த விளையாட்டுக்கு வரலை. அம்மா ஜாதகம் குடுங்க” என்றதும் அவரிடம் கொடுத்து இருவரும் அமைதியாக இருந்தார்கள்.

ஒவ்வொரு கட்டமாகக் கணித்தபடி வந்தவர் தனக்குத் தெரிந்த சிலதைக் கேட்டுத் தெளிவுபடுத்தி ஆராய்ந்து முடிக்க... அவர்களை வித்தியாசமாய் ஒரு பார்வை பார்த்து “இரண்டு ஜாதகமும் அமோகப் பொருத்தம். வாழ்க்கையில எந்தப் பிரச்சனையும் இல்லாம ரொம்பவே சிறப்பா வாழ்வாங்க. ஆனா..” என்று நிறுத்த...

“என்னாச்சி ஜோசியரே?” சகுந்தலாவின் இதயத்துடிப்பு அதிகரிக்க மின்னலுக்கு அவர் சொல்ல வருவது புரிந்து போனது.

“அது பொண்ணுக்கு இரு தாலி யோகம்னு இருக்கு” என்றார் தயங்கியபடி.

அதிர்ச்சியில் “என்ன சொல்றீங்க? இப்பதான நல்லாயிருப்பாங்க சொன்னீங்க?” என்றார் சகுந்தலா.

“அதுவும் நிஜம்! இதுவும் நிஜம்மா!”

“புரியுற மாதிரி சொல்லுங்க ஜோசியரே?”

“இந்தப் பொண்ணுக்கு சின்ன வயசிலேயே தாலி ஏறி இறங்கியிருக்கணும். உண்டா இல்லையான்னு பொண்ணு வீட்ல கேளுங்க” என்று அடித்துப் பேசியவரிடம் தர்க்கம் பண்ணத் தோன்றவில்லை சகுந்தலாவிற்கு.

“ஜாதகம் பார்த்தது போதும் ஜோசியரே” என்ற தாயை அதிர்ச்சியாய் பார்த்து “அம்மா ஒரு நிமிஷம் நான் சொல்ல வர்றதைக் கேளுங்க” என்றாள் தயக்கத்துடன்.

“ஏன் உன் ஃப்ரண்டுன்றதால பண்ணலாம்னு சொல்றியா? சின்னப்பொண்ணு சின்னப்பொண்ணாவே இரு. உன்னை இந்த இடத்துக்குக் கூட்டிட்டு வந்தேனே என்னைச் சொல்லணும்” என்று தன் கோபத்தை மகள்மேல் காட்டினார்.

“அம்மா அவசரப்படாதீங்க கொஞ்சம் வாங்க சொல்றேன்” என்று தாயை எழுப்பி அருகிலிருந்த கோவிலுக்கு சென்றாள்.

“அப்ப உனக்கு எதோ தெரிஞ்சிருக்கு. என்ன சொல்லணும்?”

“அம்மா நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க. நிறைய மனுஷங்களைப் பார்த்தவங்க நீங்க. நதி இடத்திலிருந்து ஒரு நிமிஷம் நியாயத்தைச் சொல்லணும்” என்று ஆரம்பித்து அவள் வாழ்வில் நடந்தவற்றைச் சொல்லி முடித்து “இதுல அவளோட தப்புன்னு எதுவும் இல்லதானம்மா?” என்றாள்.

“நீ சொல்றது புரியுதுமா. அதுக்காக...”

“ம்மா ப்ளீஸ் மாட்டேன்னு சொல்லிடாதீங்க. அவளை அண்ணனுக்கு முடிக்க இன்னொரு காரணமும் இருக்கு. என்னைவிட அவள் ரொம்ப நல்ல பொண்ணுமா. இதனால எந்தப் பிரச்சனை வந்தாலும் நான் சமாளிச்சிக்கிறேன்மா. அப்பாகிட்ட கூட நானே பேசி சம்மதம் வாங்குறேன்மா” என்று கெஞ்சலில் இறங்க...

‘தன்னைக் குறைத்து அவளைத் தூக்கிவைத்துப் பேசுகிறாளா என் பெண்!’ ஆச்சர்யம்தான் அவருக்கும். இதையெல்லாம் பிரச்சனையாக்க வேண்டுமா என்றெண்ணி “அப்பா வந்ததும் காலையில அண்ணன்கிட்ட பேசிக்கலாம். இப்ப வா ஜோசியரைப் பார்த்து தேதி குறிச்சிட்டு வரலாம்” என்றார் முழுமனதுடன்.

“ம்மா ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்மா.” தாயை சந்தோஷமாகக் கட்டிக்கொண்டாள் மின்னல் பெண்ணவள்.

“ஹேய் நதிமா! என்னென்னவோ கேள்விப்பட்டேன். நிஜமாவா? ஒருவழியா நேர்ல மீட் பண்ணிட்டபோல?” வரும்பொழுதே அவளைக் கிண்டலடித்தபடி வந்தான் சஞ்சித்.

“ஐயோ! ஏன் இவ்வளவு சத்தம்? அம்மாவுக்குத் தெரிஞ்சா கேள்விமேல கேள்வி கேட்பாங்க” என பதறியவளை இன்னும் சீண்டும் எண்ணம் வர.. அவனின் பார்வையில் அதைப் புரிந்தவளோ “வேண்டாம் அத்தான். நீங்க கோர்த்து விடுற அளவுக்கு பெருசா எதுவுமில்ல.”

“ஆனா ஏதோ இருக்கு.” அவனின் ஆழ்ந்த பார்வையில் நட்சத்திராவின் அமைதியினுடனான வெட்கம் ஏதோ சொல்ல “பார்த்துப் பேசுனியா?” என்றான் சஞ்சித்.

“ம்...” அவள் சொன்னதும்... “அவருக்கு நீதான் பொண்ணுன்னு தெரிஞ்சிருச்சா?” என்று யோசனையுடன் கேட்டான்.

“இன்னும் இல்ல அத்தான். என்னைப்போல் அவங்களுக்கும் என்னைப் பிடிச்சிருக்குன்னு அவங்க பார்வையில் தெரிஞ்சது.”

“எப்படிச் சொல்ற? வீட்ல பெண்பார்க்க கொடுத்த போட்டோவையே இன்னும் பார்க்கலைன்றப்ப அது நீதான்னு எப்படி வந்து உன்கிட்ட பேசினார்?”

“என்னை மாதிரி அவங்களும் லவ் அட் பர்ஸ்ட் சைட்டா இருக்கலாமே அத்தான். என் போட்டோவைப் பார்த்தா மறுக்கமாட்டாங்கன்ற நம்பிக்கை எனக்கிருக்கு.”

அவளின் உறுதியில் எல்லாம் சரியாக நடக்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. “மறுப்பா எதாவது சொல்லட்டும் வீடு புகுந்து தூக்கிடுறேன் அவனை” என்று சஞ்சித் தன் வீரவசனத்தை அள்ளிவிட...

“ஹலோ! மரியாதை சார்.”

“சரிங்க மேடம். உங்க அவரைத் தூக்கிடுறேன்” என்றான் பவ்யமாய்.

“அதுக்கெல்லாம் நீங்க வளரணும் அத்தான்” என்றாள் சிரித்தபடி.

“ஏன்? என் வளர்த்திக்கென்ன குறை?”

“என்னவா? அவங்க ஹேண்ட்சம் பாய். நீங்க ஒரு பால்டப்பா.”

“ஓய்...!!” என்றலற..

“என்ன சத்தம் மிஸ்டர்.சஞ்சித்? அவங்க பேச ஆரம்பிச்சா அந்த இடமே அதை ரசிக்கும். நீங்க ஆரம்பிச்சா நாங்கள்லாம் ஓடிருவோம்.”

“அது அவரோட தொழில். கோர்ட்ல பேசும்போது எழுந்துபோக முடியாததால எல்லாரும் உட்கார்ந்திருப்பாங்க. அதுக்காக உங்காள் பேசுறதை ரசிச்சி கிடையாது” என்றான் நக்கலாக.

அவனை முறைத்து “அவங்க ஆறடியைத் தொடப்போற உயரம். நீங்க...”

“அவர் தொடப்போற உயரம்தான் நான் ஐந்தரை அடியைத் தொட்டுத் தாண்டின உயரம். ஒத்துக்குறேன் உங்காளைவிட நான் பெஸ்ட் கிடையாதுதான். அதுக்காக நான் ஒர்ஸ்டும் கிடையாது.”

“நீங்களும் நல்லவர் அத்தான். அவங்க ஒரு டிசைன்னா நீங்க ஒரு டிசைன்” என்று புன்னகைக்க..

“அடப்பார்றா! பேச்செல்லாம் ஓவர் தெளிவாயிருக்கு. காதல்னு வந்துட்டா எல்லாரும் பைத்தியமாதான ஆவாங்க. நீ மட்டும் எப்படி நதிமா புத்திசாலியா மாறின?” என்றான் ஆச்சர்ய பார்வையில்.

“அதெல்லாம் அப்படித்தான்” என்று புன்னகைத்து “என்னை அவங்களுக்குப் பிடிக்கும்ல அத்தான்?” எனக்கேட்டாள்.

“உன்னைப் பிடிக்கலைன்னு யாராவது சொல்ல முடியுமா. நீங்க ரெண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதரா ரொம்பவே பொருத்தமா இருக்கீங்க. அதுசரி இப்பதான உன்னை அவருக்குப் பிடிச்சிருக்கிறதா சொன்ன?”

“அப்படித்தான தெரிஞ்சது. இருந்தாலும் என்னன்னு சொல்லத்தெரியாத ஒரு பயம் உள்ளுக்குள்ள முரண்டுது.”

“கல்யாணம் உறுதியானா எல்லாமே சரியாகிரும் நதி.”

“வாடா சஞ்சித். என்ன காலையிலேயே வந்திருக்க?” என்று மருமகனை வரவேற்றார் யசோதா.

“வேலைக்குக் கிளம்பிட்டேன் அத்தை. நதி ஏதோ வாங்கணும்னு சொல்லியிருந்தா. அதான் என்னன்னு கேட்டுப்போக வந்தேன்.”

“நதிமா அவனை ஏன் அலையவிடுற? ஏற்கனவே உடம்பு சரியில்ல. கூட்டத்துல போனா நல்லாயிருக்காது” என்று மகளைத் திட்டி “அவளோட தேவைக்கு அவளே வாங்கிப்பா. நீ சாப்பிட்டியா? சாப்பிடலைனா டிபன் வைக்கிறேன் சாப்பிட்டுக் கிளம்பு.”

“அத்தை என்னை ஒரேயடியா நோயாளி ஆக்கிடாதீங்க. நான் ஸ்ட்ராங் பாடி.”

“ஆமாம்மா. இந்த பால்டப்பா செம பாடிதான்” என கிண்டலடித்த மாமன் மகளின் தலையில் தட்டி “நான் கிளம்புறேன் அத்தை. மாப்பிள்ளை வீட்டிலிருந்து தகவல் வந்ததும் சொல்லுங்க.”

“இன்னைக்கு இல்ல நாளைக்குள்ள தெரிஞ்சிரும்பா. தகவல் வந்ததும் சொல்றேன்” என்று அவனை அனுப்பிவைத்தார்.

மகளின் ஆசையை நிறைவேற்ற இரவே வந்துவிட்டார் ரவிச்சந்திரன்.

காலையில் வேலைக்குக் கிளம்பி வந்த மகனிடம் “இன்னைக்கு லீவ்தான அரி? இப்ப எங்க கிளம்பிட்ட?” என சகுந்தலா கேட்க..

“கேஸ் விஷயமா போக வேண்டியிருக்குமா. வர நைட்டாகிரும்.”

“நான் உன்கிட்ட பேசணும்னு நினைச்சேன்.”

“எதைப் பற்றிப் பேசணும்மா?”

“பொண்ணு போட்டோ தந்தோமே. அதைப்பற்றிப் பேசத்தான்ணா?” மின்னல் ஆர்வமாய் இடையிட்டாள்.

“அதான் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் சொன்னேனே. முதல்ல உனக்குப் பார்க்கலாம் மின்னல்.”

“அண்ணா! என்ன சொல்ற? விளையாடாம பொண்ணு ஓகேவான்னு பார்த்துச் சொல்லு?” என்றாள் கோவமாக.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
“ஹேய் வாலு! நான்தான் முஸ்லீம் பொண்ணை லவ் பண்றேன்னு சொன்னேன்ல. அப்புறமும் என்ன கேள்வி இது?” தங்கை தனக்குத் திருமணமாக வேண்டுமென்று ஆர்வத்தில் கேட்கிறாளென்று சாதாரணமாகவே சொன்னான். அவளின் ஆர்வம் அண்ணனைவிட தோழிக்காக என்பதை அறியவில்லை அவன்.

“அண்ணாஆஆ...” என அதிர்ந்து “நேத்து கூட...”

“யா... நேத்து கூட அவளைப் பார்த்தேன். அதுக்கு முன்ன உங்க இஷ்டத்துக்கே விடணும்னு தோணிச்சி. அந்த மீட்டிங் பிறகு அவளைத் தவிர யாரையும் என்னால அந்த இடத்துல வச்சிப் பார்க்க முடியாது” என்றான் உறுதியாக.

“அரீ...”

“ம்மா... சா...சாரிமா. ஜாதி மதம் நீங்க பார்ப்பீங்க. இந்த மனசு அதைக் கேட்கமாட்டேன்னுது. எனக்கே வேற வழி தெரியலம்மா.”

“பொ...பொண்ணு வீட்டுக்காரவங்க...” அதற்குமேல் சொல்ல முடியாமல் மகளைப் பாவமாய் பார்க்க, அவளோ தோழியை எண்ணி கண்கள் கலங்க நின்றிருந்தாள்.

“உன் முடிவு இதுதானாடா?”

“ஆமாம்மா. இதான் பைனல். இனி மாற்றவும் முடியாது. திட்டுறதோ அடிக்கிறதோ எதுவாயிருந்தாலும் திரும்பி வந்ததும் பண்ணுங்க” என்று நிற்காமல் சென்றுவிட்டான்.

“என்னடி இவன் காதல் அது இதுன்னு சொல்லிட்டுப் போறான். அப்பா பாட்டிகிட்ட எப்படிச் சொல்றது? அதைவிட அந்தப் பொண்ணுகிட்ட...” மகளின் மௌனம் கண்டு “என்னாச்சிமா?” என்றார்.

“உங்க பையன்மேல நான் வச்ச நம்பிக்கையை பொய்யாக்கிட்டான்மா. ஐயோ! இதை எப்படி அவள்கிட்ட...” தரையில் மடிந்தமர்ந்து அழும் மகளின் கண்ணீர் அவரைத்தாக்க அவளின் தலைவருடி “அழாதடா செல்லம். நாம இன்னும்முறையா பொண்ணு பார்க்கலையேமா. அப்புறமென்ன? விட்றா உன் ஃப்ரண்ட்கு நல்ல பையன் கிடைப்பான்” என்றார் ஆறுதலாய்.

“அவளுக்குக் கிடைப்பான்மா. ஆனா அவள் விரும்பின உங்க பையன் கிடைக்க மாட்டானேம்மா” என்றாள் அழுகை குறையாமல்.

“என்ன சொல்ற மின்னல்?” என்றார் அதிர்வாய்.

“ஆமாம்மா. நேத்து கோவில்ல வச்சி சொன்ன இன்னொரு காரணம் இதுதான். அவளுக்கு உங்க பையன்னா உயிர். நானும் இவன் மேல உள்ள நம்பிக்கையில்... இது தெரிஞ்சா அவ தாங்கிக்கமாட்டாள்மா. நான் எப்படி அவள்கிட்ட...”

மகளை ஆறுதலாய் அணைத்தபடி “அவன் வந்ததும் பேசிக்கலாம்டா. நீ முதல்ல அழுகையை நிறுத்து” என்றார்.

“உங்க பையன் தெளிவா இருக்கான்மா. அப்புறம் எப்படி?”

“அவன் உன் அண்ணன். ஏதோ தப்பையே தொழிலா செய்ற எதிரி மாதிரி உங்க பையன்னு சொல்லிட்டிருக்க?” என்றார் அதட்டலாய்.

“ம்மா... நான் இருக்கிற நிலையில் இது ஒண்ணுதான் முக்கியம். ந..நதிக்கு என்ன சொல்றது தெரியலைமா?”

“அப்பாவும் பாட்டியும் அவன் இஷ்டத்துக்கு விடமாட்டாங்கடா. நம்ம வீட்ல எல்லாம் சரிபண்ணிட்டு அப்புறமா பொண்ணு வீட்டுல பேசலாம்.”

“அண்ணன் சம்மதிச்சிருவான்லமா? அவன் நோ சொன்னா அப்புறம் நானும்...”

“அவன்தான் புரியாமல் பேசிட்டுப் போறான்னா, நீயும் ஏன்டா?”

அழுதபடியே தன் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டவளை, “மின்னல்! ஏய்.. சொல்றதைக் கேளுமா?” தாய் என்ன அழைத்தும் வெளியே வரவில்லை. அவளின் கண்முன் கனவுகளுடன் பேசிய, சிரித்த, வெட்கப்பட்ட நட்சத்திராவே வந்து நின்றாள்.

“கொடி அவ்வளவு காலையில அம்மா கூப்பிட்டாங்கன்ற காரணத்துக்காகக் குளிச்சிட்டு தனக்கு இஷ்டமே இல்லைன்னாலும் கூடவே கடைசிவரை நின்னு எவ்வளவு பாசம் தெரியுமா?”

“ஏன் அன்னைக்கு வயசுப்பசங்களே கோவிலுக்கு வரலையா?”

“ஏன் வரலை? நிறைய வந்திருந்தாங்க. பக்திதான் முக்கியம்னு சொல்லி வளர்ந்த ஐயர் பசங்கள்ல இருந்து தன்னோட ஆளை சைட்டடிக்க வந்த பசங்கன்னு இருக்கத்தான் செஞ்சாங்க. அம்மா கூட வர நேரிட்ட பசங்ககூட தொல்லையா நினைச்சபடி நின்னாங்களே தவிர யாரும் அம்மாவை பாசமா பார்த்துக்கலை.”

“அப்ப உன் கண் முழுக்க பசங்க ஏரியாவுல இருந்திருக்கு? அப்ப நீ சைட்டடிச்சிருக்க?” என்று தோழியை வார.

“ச்சீ... போ மயிலு. அவங்களைப் பார்த்த பிறகுதான் மத்த பசங்களைக் கவனிச்சேன். அந்த மார்கழி ஒண்ணு! ஆண் ஒருத்தன் என் வாழ்க்கையிலேயே வரக்கூடாதுன்னு நினைச்சிருந்தேன். அந்த முதல் தேதி என் எல்லாத்தையும் மாத்திருச்சி. அவங்கம்மா கூட ஜாலியா அரட்டையடிச்சது பிடிச்சிருந்தது. சாமி என்னை சம்சாரியாக்க வரவழைச்சிருக்கலாம்னு அவங்க சொன்னப்ப நான்தான் அந்த சம்சாரம் என்ற வார்த்தை தொண்டை வரை வந்திருச்சி. அதெப்படி முடியும்னு பழைய நினைவு வந்து அதட்டி ஒதுக்கிருச்சி.”

“மேக்சிமம் அவங்க கண்லபடுற மாதிரிதான் இருந்தேன். பார்த்தாங்களா.. கேட்டா தெரியாது. அவங்க கிளம்பும்போது நான் அங்கதான் இருந்தேன். அவங்களை நான் பார்க்கிறதைக் கண்ட சஞ்சித் அத்தானுக்கு ஏதோ சந்தேகம். ஆர்த்தியும் துளைச்சி எடுத்திட்டா. குறுக்கு விசாரணையில் நான் எஸ்கேப்.”

அன்று மாலை தன்னைச் சந்தித்து கண்களில் ஒளிர்வுடன் தன்னிடம் பகிர்ந்தது. அதற்கடுத்து தொடர்ந்த நாட்களும் அவனுடைய குணத்தையே புகழ்ந்து தள்ள, அவன் நல்லவனாக இருக்க வேண்டுமென்ற கவலைதான் தனக்கு. இருபது நாட்கள் கடந்த வேளையில்தான், தன் அண்ணனும் பாட்டி அம்மாவுடன் நிதமும் அதே கோவிலுக்குப் போவது தெரிந்தது. ஒரு சந்தேகம் எழுந்தாலும், அப்படி நடந்தால் அதைவிட பெரிய சந்தோஷம் தனக்குக் கிடையாதென்று எண்ணி, மறுநாள் தன் சந்தேகத்தைத் தீர்க்கவென்று அவர்களுடன் தானும் கிளம்பினாள்.

பாட்டி அம்மா அண்ணன் மூவரின் ‘நீயா!’ என்ற வியந்த பார்வையைக் கண்டுகொள்ளாமல் அவர்களுடன் சென்றவள் தன்னைக் குடும்பத்தோடு நட்சத்திரா பார்த்துவிடக்கூடாதென்று கார் நின்றதும் கோவிலுக்குள் தோழியைத் தேடிச்சென்றாள்.

ஆச்சர்யத்தில் விழிவிரித்த நட்சத்திரா சந்தோஷத்தில் துள்ள, “டெய்லி என் காதுல ப்ளட் வரவைக்கக் காரணமான உன் ஆளைப் பார்க்கதான் வந்தேன்” என்று புன்னகைத்தாள்.

“ஹேய் நிஜமாவா? நம்பவே முடியல கொடி. அவங்க வர்ற நேரம்தான்” என்றவள் சற்று மறைவாக நின்று பார்க்கையில் அவர்கள் உள்ளே வர, “ஹேய் கொடி! அதோ அவங்கதான்” என்று கைகாட்டிய இடத்தில் தன் குடும்பத்தைப் பார்த்தவளுக்குப் பெரிதாக அதிர்ச்சி ஏதுமில்லை. தான் நினைத்தது சரியே என்று புன்னகையுடன் தோழியைப் பார்க்க, “எப்படி என் செலக்ஷன்?” என்றாள் அவனிடமிருந்து பார்வையை விலக்காது.

“என்னை உன் ஃப்ரண்டா செலக்ட் பண்ணினதுலயே உன்னோட செலக்ஷனை புரிஞ்சிருக்கமாட்டேனா?”

தோழியின் கிண்டலில் “விளையாடாம சொல்லு மயிலு?” என்று சிணுங்கினாள்.

“நீ எங்க குடும்பத்தை நேர்ல பார்த்ததில்லைதான நதி?”

“எங்க கொடி. வீட்டை விட்டு வெளியில சுத்துற நிலையிலயா இருக்கேன். நம்ம ஏரியா பார்க் விடுறதே பெரிய விஷயம். ஆமா நீ யார்கூட வந்த?”

“அம்மா பாட்டி அண்ணன்கூட வந்திருக்கேன்.”

“ஏன்டி என்கிட்ட சொல்லலை? எனக்கு அம்மாவைப் பார்க்கணும். வா பார்க்கலாம்” என்றழைத்தாள்.

“இப்ப வேண்டாம் நதி. நான் போய் பேசுறேன். சூழ்நிலை சரியா அமைஞ்சா அவங்களோட நீ தினமும் பேசலாம். இதோ வர்றேன்” என்று எதையோ மறைமுகமாக உணர்த்தி நகர்ந்தவளை புரியாமல் பார்த்திருந்தவள் அவள் சென்ற இடம் பார்த்து வியப்பா! அதிர்ச்சியா! சொல்ல முடியாத ஆனந்தமா! எதுவும் புரியா நிலையில் நின்றிருந்தாள் நட்சத்திரா.

“நட்டுமா எவ்வளவு நேரம் அப்படியே ஃப்ரீஸாகி நிற்ப? நிஜ உலகுக்கு வா” என்று அவளின் தோள்தட்ட,

“கொ...கொடி அது உன் குடும்பமா? உன் அண்ணனா அவங்க?”

“அப்படிதான் சொல்லிட்டுப் போனதா நியாபகம்.”

“சா...சாரி. உன் வீட்டுல உள்ளவங்கன்னு தெரியாமலே தினமும் பார்த்திருந்திருக்கேன்.”

“எதுக்கு சாரி? உன் பேச்சைக் கேட்டு ஒரு சந்தேகத்துலதான் இங்க வந்தேன். இப்ப நான் எவ்வளவு ஹேப்பி தெரியுமா? உன்னோட அன்பு கிடைக்க என் அண்ணன் கொடுத்து வச்சிருக்கணும்.”

“இல்ல கொடி. உன் அண்ணாவோட அன்பு கிடைச்சா நான்தான் லக்கி.”

“சரிமா. லக்கி நீயாவே இருந்துட்டுப் போ. எங்க வீட்டுல உன்னைப்பற்றி எப்படிப் பேச்சை ஆரம்பிக்கிறது தெரியல? அப்பாகிட்ட சொல்லிடலாம். லவ் மேரேஜ்னா எப்படி எடுத்துப்பாங்க தெரியல. விடு நான் பார்த்துக்கறேன்” என்று பொறுப்பை தானே எடுத்துக்கொள்ள அவளை அணைத்து “தேங்க்ஸ் கொடி” என்றாள்.

அதற்கடுத்து இரண்டு நாட்கள் எப்படி வீட்டில் பேசுவதென்று தெரியாத நிலையில்தான் சஞ்சித் அவளைச் சந்தித்து, ‘முறைப்படி தரகர் மூலம் பார்க்கலாம். உங்க வீட்டுல வசதி வாய்ப்புன்னு பார்த்தா, இப்போதைக்கு நதி நடுத்தரக் குடும்பம்னாலும், அவங்களோட பூர்வீக சொத்து கணக்கெடுத்தா உங்க அளவு இல்லைன்னாலும் நிறையவே வரும். தரகர்கிட்ட அதையும் சொல்லி அனுப்பலாம்” என்றிருக்க, அவன் சொன்னபடியே அனைத்தும் நடந்தது.

ஆனால் இன்று?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top