Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 128
- Thread Author
- #1
தீமையே
வெ[கொ]ல்லும்.
படலம் - 5
கதிருக்கும் முல்லைக்கும் எப்படி பழக்கம் என்று சித்ரா யோசிக்கும் நேரம்,'பாப்பா பாப்பா' என்று மாறன் பதற...
'முல்ல...' என்று கதிரும் பதறி தான் போனான்.
'அக்கா ரத்தம் வருது' என்று கந்தன் துடிக்க,'வா வா உடனே ஹாஸ்பிடல் போகலாம்' என்ற கதிர் முல்லையை கை தாங்கலாக தூக்கினான்.
தன் நெற்றியில் வடிந்த ரத்தத்தை கூட பொருட்படுத்தாமல் முல்லை கதிரை ஆச்சிரியமாக பார்த்து இருக்க...
'ஈஷா...' என்று அந்த இடமே அதிரும்ப்படி கத்தினாள் சித்ரா.
'மேடம் நீங்க இருங்க நான் பார்த்துக்குறேன்' என்ற ஈஷா வேகமாக அவள் இயக்கும் காரில் இருந்து முதல் உதவி பெட்டியை எடுத்து முல்லைக்கு முதலுதவி கொடுக்க,'முல்ல வா ஹாஸ்பிடல் போகலாம்' என்றான் கதிர்.
'ஆமா பாப்பா... வா ஹாஸ்பிடல் போகலாம்' என்று மாறனும் சொல்ல,
'இன்னும் 10 minsல டாக்டர் இங்க வருவாரு. இப்போ நீங்க மூணு பேரும் உள்ள போகலாம்' என்று சித்ரா..முல்லை மாறன் கந்தனை பார்த்து சொன்னவள்,'ஹே யூ... ஜஸ்ட் கெட் அவுட்' என்றவளின் கண்கள் கதிரை சுட்டேரித்தது.
'ஏய்... நீ யாருடி என்னை வெளியே போக சொல்ல... முல்லை நீ வா நம்ம ஹாஸ்பிடல் போகலாம்' என்ற கதிர் முல்லையின் வலது கையை பிடித்து தன்னோடு அழைத்ததும், அவன் பின்னே பூனைக் குட்டியை போல முல்லை செல்ல... சட்டென்று அவளின் இடது கையை பிடித்து தன் வசம்
இழுத்தாள் சித்ரா.
சித்ரா இழுத்த வேகத்தில் முல்லை சுருண்டுப்போய் ஈஷா மீது மோதி நின்று விட..' ஏய்... அவளை என்கூட அனுப்பு' என்றான் கதிர்.
கதிரின் பேச்சைக்கேட்டு அடி மேல் அடி வைத்து அவனை நெருங்கி,'இன்னும் ஒரு நிமிஷத்துல உன்கூட வந்த அல்லு சில்லை எல்லாம் அழைச்சிக்கிட்டு இங்க இருந்து நீ போகலைனு வையேன்!!' என்று சித்ரா தன் வார்த்தையை நிறுத்தினாள்.
சித்ரா மீது ஏற்கனவே கோவமாக இருந்த கதிர்,'என்னடி... என்ன பண்ணுவ!?' என்று அவளிடம் மீண்டும் சண்டைக்கு நிற்க,
'முழுசா வீடு போய் சேர மாட்ட' என்றவளை பார்த்து கதிர் நக்கலாக சிரித்தான்.
'கதிர் கதிர்... இங்க என்னமோ சரியில்ல.நீ வா நம்ம போய் அப்பாவை அழைச்சிட்டு வரலாம். அங்க பாரு உதயா வேற வலியால துடிக்கிறான்' என்று ரம்யா கன்னம் வீங்கிய நிலையில் கதிரை தன்னோடு அழைக்க.
'போங்க போங்க... வீட்டுல யாராவது பெரியவுங்க இருந்தா அழைச்சிட்டு வாங்க' என்றாள் சித்ரா.
'ஏய்... நான் யாருன்னு தெரியாம நீ என்கிட்ட மோதி பாக்குற டி' என்று கதிர் பல்லை கடித்துக்கொண்டு சித்ராவை முறைக்க,
'ஹேய்... நீ எல்லாம் என் லிஸ்ட்லையே இல்ல...வீனா என்கிட்ட முறுக்கிகிட்டு நிக்காத. அப்புறம் முடிச்சு விட்டு போய்கிட்டே இருப்பேன்' என்ற சித்ரா
'உள்ள போங்க' என்று மாறனை பார்த்து கர்ஜித்தாள்.
சித்ராவின் கோவத்தை கண்டு மாறன் சற்று பயந்து போனவன் முல்லையை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல... முல்லையோ கதிரை ஏக்கமாக பார்த்தப்படி வீட்டுக்குள் போனவளின் மொத்த கோவமும் சித்ரா மீது தான் இருந்தது.
கதிர் ரம்யா என்று இருவரும் சித்ராவை முறைத்து பார்க்க,'Mr. செல்வா' என்று வாட்ச் மேனை மரியாதையுடன் அழைத்தவள், 'இனி இவங்க யாரும் இந்த பங்களாக்குள்ள வர கூடாது. மீறி வந்தா' என்று வார்த்தையை நிறுத்தி... கதிரை முறைத்து பார்த்தவள்,'பரமனுக்கு நீ மகனா இருக்க மாட்ட' என்றவள் ரெண்டே அடியில் பங்களாக்குள் சென்று இருந்தாள்.
'சார்.... ஏன் இப்படி தேவையில்லாம எங்க மேடமை கோவப்படுத்தி பார்க்குறிங்க. இந்த பங்களாவை அவங்க காலையில தான் வாங்குனாங்க. உங்களுக்கு எதாவது பேசணும்னா XMla சம்பத் சாரை போய் கேளுங்க' என்ற ஈஷாவும் சித்ராவை தொடர்ந்து பங்களாக்குள் நுழைந்து இருந்தாள்.
'கதிர் இங்க என்னமோ சரியில்லை...நீ வா நம்ம அப்பாகிட்ட போய் பேசி இவளை இந்த ஊரை விட்டே அடித்து துரத்துவோம்' என்று ரம்யா சொல்ல...
'ஆனா முல்லை எப்படி இங்க இருக்குறா?' என்று வாய் விட்டு புலம்பிய கதிர் அதே யோசனையோடு கீழே சரிந்து கடந்த உதயாவை காரில் தூக்கி போட்டான்.
'கதிர் யாரு அந்த பொண்ணு!?' என்று ரம்யா முல்லையை பற்றி விசாரிக்க... அதே தருணம் வெள்ளை நிற காரில் பெண் மருத்துவர் ஒருவர் அந்த பங்களாவின் வாசலில் வந்து இறங்கினார்.
'கதிர் இவங்க Dr.சீதா ஆன்ட்டி தானே!?' என்ற ரம்யா வேகமாக அந்த மருத்துவரை நெருங்கியவள்.'ஆன்ட்டி... நல்ல நேரத்துல வந்திங்க நீங்க... வாங்க வாங்க...காருல உதயா பேச்சு மூச்சு இல்லாம இருக்கான்'என்ற ரம்யா அந்த மருத்துவரின் கையை பிடித்து தன்னோடு அழைத்தாள்.
'ஹாங் ரம்யா... இரு இரு.. ஒரு பத்து நிமிஷத்துல நான் CR மேடம் ஏன் போன் பண்ணாங்கன்னு கேட்டுட்டு வந்து உதயாவை பார்க்குறேன்' என்ற மருத்துவர் தலைத்தெரிக்க பங்களாக்குள் ஓடியதும்.
'ஏய் கதிர்... யாருடா அவ!?. அவ ஒரு ஆளுன்னு இந்த டாக்டர் X mla பையனை கூட பார்க்காம போறாங்க' என்ற ரம்யாவின் கேள்வி தான் கதிரின் மனதிலும் எழுந்து இருந்தது.
'கதிர் அங்க பாரு உதயா வலியில துடிக்கிறான்' என்று ரம்யா சொல்ல...
திரும்பி அந்த பங்களாவை அழுத்தமாக பார்த்த கதிர், புருவம் இடுங்கி உதயாவின் காரில் ஏறி அமர்ந்தவன் பல குழப்பதோடு ரம்யாவை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று இருந்தான்.
கதிருக்கும் முல்லைக்கும் எப்படி பழக்கம் என்று சித்ரா யோசிக்கும் நேரம்,'பாப்பா பாப்பா' என்று மாறன் பதற...
'முல்ல...' என்று கதிரும் பதறி தான் போனான்.
'அக்கா ரத்தம் வருது' என்று கந்தன் துடிக்க,'வா வா உடனே ஹாஸ்பிடல் போகலாம்' என்ற கதிர் முல்லையை கை தாங்கலாக தூக்கினான்.
தன் நெற்றியில் வடிந்த ரத்தத்தை கூட பொருட்படுத்தாமல் முல்லை கதிரை ஆச்சிரியமாக பார்த்து இருக்க...
'ஈஷா...' என்று அந்த இடமே அதிரும்ப்படி கத்தினாள் சித்ரா.
'மேடம் நீங்க இருங்க நான் பார்த்துக்குறேன்' என்ற ஈஷா வேகமாக அவள் இயக்கும் காரில் இருந்து முதல் உதவி பெட்டியை எடுத்து முல்லைக்கு முதலுதவி கொடுக்க,'முல்ல வா ஹாஸ்பிடல் போகலாம்' என்றான் கதிர்.
'ஆமா பாப்பா... வா ஹாஸ்பிடல் போகலாம்' என்று மாறனும் சொல்ல,
'இன்னும் 10 minsல டாக்டர் இங்க வருவாரு. இப்போ நீங்க மூணு பேரும் உள்ள போகலாம்' என்று சித்ரா..முல்லை மாறன் கந்தனை பார்த்து சொன்னவள்,'ஹே யூ... ஜஸ்ட் கெட் அவுட்' என்றவளின் கண்கள் கதிரை சுட்டேரித்தது.
'ஏய்... நீ யாருடி என்னை வெளியே போக சொல்ல... முல்லை நீ வா நம்ம ஹாஸ்பிடல் போகலாம்' என்ற கதிர் முல்லையின் வலது கையை பிடித்து தன்னோடு அழைத்ததும், அவன் பின்னே பூனைக் குட்டியை போல முல்லை செல்ல... சட்டென்று அவளின் இடது கையை பிடித்து தன் வசம்
இழுத்தாள் சித்ரா.
சித்ரா இழுத்த வேகத்தில் முல்லை சுருண்டுப்போய் ஈஷா மீது மோதி நின்று விட..' ஏய்... அவளை என்கூட அனுப்பு' என்றான் கதிர்.
கதிரின் பேச்சைக்கேட்டு அடி மேல் அடி வைத்து அவனை நெருங்கி,'இன்னும் ஒரு நிமிஷத்துல உன்கூட வந்த அல்லு சில்லை எல்லாம் அழைச்சிக்கிட்டு இங்க இருந்து நீ போகலைனு வையேன்!!' என்று சித்ரா தன் வார்த்தையை நிறுத்தினாள்.
சித்ரா மீது ஏற்கனவே கோவமாக இருந்த கதிர்,'என்னடி... என்ன பண்ணுவ!?' என்று அவளிடம் மீண்டும் சண்டைக்கு நிற்க,
'முழுசா வீடு போய் சேர மாட்ட' என்றவளை பார்த்து கதிர் நக்கலாக சிரித்தான்.
'கதிர் கதிர்... இங்க என்னமோ சரியில்ல.நீ வா நம்ம போய் அப்பாவை அழைச்சிட்டு வரலாம். அங்க பாரு உதயா வேற வலியால துடிக்கிறான்' என்று ரம்யா கன்னம் வீங்கிய நிலையில் கதிரை தன்னோடு அழைக்க.
'போங்க போங்க... வீட்டுல யாராவது பெரியவுங்க இருந்தா அழைச்சிட்டு வாங்க' என்றாள் சித்ரா.
'ஏய்... நான் யாருன்னு தெரியாம நீ என்கிட்ட மோதி பாக்குற டி' என்று கதிர் பல்லை கடித்துக்கொண்டு சித்ராவை முறைக்க,
'ஹேய்... நீ எல்லாம் என் லிஸ்ட்லையே இல்ல...வீனா என்கிட்ட முறுக்கிகிட்டு நிக்காத. அப்புறம் முடிச்சு விட்டு போய்கிட்டே இருப்பேன்' என்ற சித்ரா
'உள்ள போங்க' என்று மாறனை பார்த்து கர்ஜித்தாள்.
சித்ராவின் கோவத்தை கண்டு மாறன் சற்று பயந்து போனவன் முல்லையை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல... முல்லையோ கதிரை ஏக்கமாக பார்த்தப்படி வீட்டுக்குள் போனவளின் மொத்த கோவமும் சித்ரா மீது தான் இருந்தது.
கதிர் ரம்யா என்று இருவரும் சித்ராவை முறைத்து பார்க்க,'Mr. செல்வா' என்று வாட்ச் மேனை மரியாதையுடன் அழைத்தவள், 'இனி இவங்க யாரும் இந்த பங்களாக்குள்ள வர கூடாது. மீறி வந்தா' என்று வார்த்தையை நிறுத்தி... கதிரை முறைத்து பார்த்தவள்,'பரமனுக்கு நீ மகனா இருக்க மாட்ட' என்றவள் ரெண்டே அடியில் பங்களாக்குள் சென்று இருந்தாள்.
'சார்.... ஏன் இப்படி தேவையில்லாம எங்க மேடமை கோவப்படுத்தி பார்க்குறிங்க. இந்த பங்களாவை அவங்க காலையில தான் வாங்குனாங்க. உங்களுக்கு எதாவது பேசணும்னா XMla சம்பத் சாரை போய் கேளுங்க' என்ற ஈஷாவும் சித்ராவை தொடர்ந்து பங்களாக்குள் நுழைந்து இருந்தாள்.
'கதிர் இங்க என்னமோ சரியில்லை...நீ வா நம்ம அப்பாகிட்ட போய் பேசி இவளை இந்த ஊரை விட்டே அடித்து துரத்துவோம்' என்று ரம்யா சொல்ல...
'ஆனா முல்லை எப்படி இங்க இருக்குறா?' என்று வாய் விட்டு புலம்பிய கதிர் அதே யோசனையோடு கீழே சரிந்து கடந்த உதயாவை காரில் தூக்கி போட்டான்.
'கதிர் யாரு அந்த பொண்ணு!?' என்று ரம்யா முல்லையை பற்றி விசாரிக்க... அதே தருணம் வெள்ளை நிற காரில் பெண் மருத்துவர் ஒருவர் அந்த பங்களாவின் வாசலில் வந்து இறங்கினார்.
'கதிர் இவங்க Dr.சீதா ஆன்ட்டி தானே!?' என்ற ரம்யா வேகமாக அந்த மருத்துவரை நெருங்கியவள்.'ஆன்ட்டி... நல்ல நேரத்துல வந்திங்க நீங்க... வாங்க வாங்க...காருல உதயா பேச்சு மூச்சு இல்லாம இருக்கான்'என்ற ரம்யா அந்த மருத்துவரின் கையை பிடித்து தன்னோடு அழைத்தாள்.
'ஹாங் ரம்யா... இரு இரு.. ஒரு பத்து நிமிஷத்துல நான் CR மேடம் ஏன் போன் பண்ணாங்கன்னு கேட்டுட்டு வந்து உதயாவை பார்க்குறேன்' என்ற மருத்துவர் தலைத்தெரிக்க பங்களாக்குள் ஓடியதும்.
'ஏய் கதிர்... யாருடா அவ!?. அவ ஒரு ஆளுன்னு இந்த டாக்டர் X mla பையனை கூட பார்க்காம போறாங்க' என்ற ரம்யாவின் கேள்வி தான் கதிரின் மனதிலும் எழுந்து இருந்தது.
'கதிர் அங்க பாரு உதயா வலியில துடிக்கிறான்' என்று ரம்யா சொல்ல...
திரும்பி அந்த பங்களாவை அழுத்தமாக பார்த்த கதிர், புருவம் இடுங்கி உதயாவின் காரில் ஏறி அமர்ந்தவன் பல குழப்பதோடு ரம்யாவை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று இருந்தான்.