• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

SS25 - 'பிரியமுடன்' சிறுகதைப் போட்டி அறிவிப்பு

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
550
ஓம் சரவண பவ!

WhatsApp Image 2025-01-19 at 18.54.41_4ad2eb96.jpg


வணக்கம்!

sornasandhanakumar.com தளத்தில் அடுத்த சிறுகதைப்போட்டி அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி.

SS25 - "பிரியமுடன்" சிறுகதைப் போட்டி!

ஜனவரி 20-ல் ஆரம்பித்து, பிப்ரவரி 20 வரை நடைபெற உள்ளது.

போட்டிக்கான விதிமுறைகள்.

1. போட்டிக் காலம் - வரும் ஜனவரி 20 முதல் பிப்ரவரி 20, 2025 வரை.

2. வார்த்தை அளவு:
சிறுகதைகள் 1,500 முதல் 2,000 வார்த்தைகள் மிகாமல் இருக்க வேண்டும்.

3. காதல் கதை மட்டுமே இதில் இடம்பெற வேண்டும். அதுவும் ரசனைக்குரிய மென்மையான, அழகான காதல் கதை நலம்.

4. காதலில் திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் பாகுபாடு கிடையாது. அதேநேரம் பள்ளிப்பருவக் காதல், திருமண உறவைத் தாண்டிய உறவு சார்ந்த கதைகளைத் தவிர்க்க வேண்டும்.

5. காதல் கதைகளில் வார்த்தைப் பிரயோகங்கள் எல்லை மீறிவிடக்கூடாது. அதாவது, ரொமான்ஸ் இருக்கலாம். அதீத ரொமான்ஸ் இருக்கக்கூடாது.

6. எழுத்துப் பிழைகளைத் தவிர்க்கவும். கதையைத் தேர்ந்தெடுக்கும் போது இதுவும் பார்க்கப்படும். கமா, கொட்டேஷன், முற்றுப்புள்ளி இதெல்லாம் சரியாக இருக்க வேண்டும்.

7. போட்டிக்காலம் எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படமாட்டாது. பிப்ரவரி 20-க்குள் உங்கள் சிறுகதைகளை தளத்தில் பதிவேற்றம் செய்துவிடவும்.

8. இங்கு போடப்படும் சிறுகதைகள், இதற்கு முன் வேறெங்கும் பதிவிடப்பட்டிருக்கக் கூடாது.

போட்டி முடிவுகள்

1. போட்டியின்‌ முடிவில் 5 சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்படும்.

2. தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைகள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டு, வெற்றி பெறுபவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

போட்டியில் பங்கு பெற விரும்புபவர்கள், உங்களின் பெயர் விவரங்களுடன், sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். உங்களுக்கான திரி அமைத்துக் கொடுக்கப்படும்.

தளத்தில் எவ்வாறு பதிவு செய்வது மற்றும் கதைகள் பதிவிடுவது பற்றிய விவரங்கள் கீழே உள்ள லிங்கில் உள்ளது.

How to Register in Site - Click Here

How to Post Stories - Click Here

போட்டியின் முடிவு மார்ச் மாதம் அறிவிக்கப்படும்.

கற்பனைகள் என்பது எல்லையில்லாதது. அந்தக் கற்பனைகளுக்கு எழுத்து வடிவம் கொடுக்கலாமே!

நட்புடன்

சொர்ணா சந்தனகுமார்.
 
Last edited:
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
3
சூப்பர் அக்கா. 🥳 போட்டியில் பங்குபெறும் எழுத்தாளர்கள் அனைவருக்கும் 'BEST WISHES' 🫶
 

Latest profile posts

திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top