Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 537
- Thread Author
- #1
இருவரும் முதல் தீண்டலில் உலகை மறந்து அவர்கள் லோகத்தில் இருக்க கதவு தட்டும் சத்தம் கேட்டது.
அனேகமாக உன் அண்ணன் கரடி பயலா தாண்டி இருப்பான் என்றவன் மனமேயின்றி மனைவியை விலக்கியவன் கலைந்திருந்த தாமரையின் தலைமுடியை கோதி விட்டு உள்ளே போய் கதவை திறக்க வேலு தான் நின்றான்.
என்னடா என்க...
மிலிட்ரியும் அத்தையும் வந்துருக்காங்களென்கவும், அப்படியா என்றவன் உன் தங்கச்சி பாத்ரூம் போயிருக்கா சொல்லிட்டு வரேன் என்றவன் தாமரை..லாரன்ஸ் அப்பாவும் ஜூலி அம்மாவும் வந்துருக்காங்க சீக்கிரம் வா என்று சொல்லி விட்டு கதவை சாத்தியபடி வேலுவோடு கீழே வந்தான்.
எங்கப்பா மருமகளென்று லாரன்ஸ் கேட்க இதோ மாமா என்றவாறு கீழே வந்தவள் கணவனோடு சேர்ந்து இருவர் காலில் விழ காட் பிளஸ்யூ என்றனர்.
நல்லா இருக்கீங்களா மாமா,அத்தை என்று தாமரை கேட்க,நல்லா இருக்கோம் மா.பெருமாள் நீ வந்துருக்கனு சொன்னான் அதான் உன்னை பார்த்துட்டு போகலானு வந்தோமென்றனர்.
அப்பாடி உன் மருமவள் எங்கையும் ஓடிட மாட்டாள் சாப்புட்டு பொறுமையா பேசுங்களென்று வள்ளி அப்பாயி சொல்ல...
இதுக்கு தான் என் செல்லம் வேண்டும்னு சொல்லுறது. இப்படி சரியான நேரத்திற்கு சரியான பாயிண்டை புடிப்பதால் சகலை உன்னை இந்த வீட்டில் பிரகிணென்ட் ஆக்கியிருக்காரு செல்லமென்க...
அடேய் அறிவுகெட்டவனே என்ன பேச்சுடா என்று முத்து குரல் கொடுக்க...
மற்றவர்கள் வேலு சொன்னதை கேட்டு சத்தமாக சிரித்துவிட்டனர்.
ஏய்யா அப்பு உன் அத்தை மவன் என்ன சொல்லுறான்யா என்று வள்ளி அப்பாயி கேட்க...
நான் சொல்லுறேனென்ற குரல் கேட்டு எல்லாரும் வாசல் பக்கம் பார்த்தனர். அங்கே நான் வந்துட்டேனென்று நிகிலன் நின்றான்.
சின்னைய்யா வா வா என்ன கண்ணு வரேண்ணு சொல்லவேயில்லை என்று அப்பாயி சின்ன பேரனை நோக்கி கையை நீட்டினார்.
வேகமாக வந்து தனது பாட்டியை அணைத்தவனை கிள்ளி முத்தமிட்டவர் எய்யா கண்ணு பரிட்சை நல்லா எழுதியிருக்கியா ராசா என்றார்.
நல்லா எழுதியிருக்கேன் அப்பாயி. இன்னும் ரெண்டு மாசம் வரைக்கும் உன் உசுர வாங்கிட்டு தான் நான் போவேன் என்று நிகிலன் சொல்ல தாராளமா வாங்கு கண்ணு.நீ வாங்காம வேற யாரு கண்ணு வாங்கவா என்றவர் பாரு யார்லாம் வந்துருக்காங்களே என்று காட்ட..
தாமரையை பார்த்து அதிர்ந்தான்.
பின்னர் அனைவரிடமும் நலம் விசாரித்தவனை கை கால் கழுவிட்டு வா கண்ணு சாப்டலாமென்றனர்.
ஆமா ஆமா முதல்ல சோத்தை கண்ணுல காட்டுங்கயென்று வேகமாக மாடியில் இருக்கும் தனது ரூமிற்கு போனவன் ப்ரஷாகி சிறிது நிமிடத்தில் கீழே வந்து எல்லாரோடும் சேர்ந்து உட்கார தாமரை சீதா-ராதா மூவரும் ஆண்களுக்கு பரிமாறினார்.
சிறிது நிமிடத்தில் பேச்சோடு அவர்கள் சாப்பிட்டு திண்ணைக்கு போக பெண்கள் ஒன்றாய் உட்கார்ந்து பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.
அப்புறம் தாமரை அடுத்து உன்னுடைய பிளான் என்னம்மா என்று ஜூலி கேட்க இனிமே இங்க தானுங்கத்தை என்று சிரித்தாள்.
அப்படியா தாமரை ரொம்ப சந்தோஷம் சீக்கிரம் பேரனையும் பேத்தியையும் பெத்து கொடு எங்களுக்கு என்று சொல்ல, சரிங்கத்தை என்று வெட்கப்பட்டவளை தூரத்தில் இருந்து பார்த்த கதிருக்கு என் பொண்டாட்டி எவ்வளவு மென்மையா இருக்காளென்று மனதிற்குள் சொல்லினான்.
மேலும் சிறிது நேரம் பேசி இருந்து விட்டு லாரன்ஸ் ஜூலியும் அங்கிருந்து வீட்டிற்கு செல்ல தாமரையும் கதிரும் நீலகிரிக்கு செல்ல தயாரானார்கள்.
ஐயோ பஸ்லயும் புடவையை கட்டிக்கிட்டு போறதா என்று முணுமுணுத்துக் கொண்டே பேக்கிங் பண்ணிக் கொண்டிருந்தவளை பின்பக்கமாய் அணைத்தவன் சுடிதார் போட்டுக்கோ.ஆனால் வீட்ல இருக்கும்போது மட்டும் புடவை கட்டிக்க என்று சொல்ல நன்றியோடு அவனை அன்னார்ந்து பார்த்தவளை ஏய் முட்டகண்ணி இப்படிலாம் பாக்காதடி.
அப்புறம் நீலகிரி பயணம் கேன்சல் ஆகிவிடும் சொல்லிட்டேன் என்று பிடியை இறுக்க ம்ம் என்றாள்.
சரி ரெடியாகி கீழே வா நான் பேகை கொண்டு போய் கீழே வைக்குறேன்.
10.30 க்கு பஸ் டி என்றான்.
சரி,விட்டா தானே ரெடியாக என்றவளிடம் ஏண்டி ரெண்டு வருஷம் கழித்து இன்னைக்கு தான் டி என் கையில வந்து சேர்ந்துருக்க. இனி ஆயுசு முழுவதும் இவன் கிட்ட இருந்து உனக்கு விடுதலை இல்லடி என்று தாமரையின் தலையில் முட்ட...
நானும் விடுதலை வேண்டுமென்று கேட்கவில்லையே என்றாள்.
ஓஓஓ...
கேட்டு பாருடி அப்புறம் தெரியுமென்க,அதான் கேட்கலைனு சொல்லுறேனே பிறகென்ன வாதமென்றவளை இது வாதம் இல்லடி அச்சாரமென்றவன் உனக்கு தாலிகூட இன்னும் பிரிச்சி போடலை இல்லையா என்று கேட்டான்.
ஹம் இப்போவாது இந்த கொய்யாக்கு ஞாபகம் வந்துச்சே என்றவள் கயிறும் நஞ்சி போய் தான் இருக்கு மாம்ஸ் என்றாள்.
ஏய் இது எனக்கு ஞாபகம் இல்லாமல் இருக்குமாடி என்றவன் ரொம்ப நஞ்சி போய்டாடி என்றவாறு தாமரையின் கழுத்தில் இருந்த தாலிகயிற்றை எடுத்து பார்க்க அங்கங்கே நஞ்சுபோய் தான் இருந்தது.
சரிடி நீலகிரி போய்ட்டு வந்த உடனே மாத்திடலாமென்றவன் தாமரை பேக் பண்ணிய டிராலியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான்.
கணவன் போனதும் கதவை அடைத்து அதன் மேல் சாய்ந்து நின்றவள் ஹப்பாடா என்று மூச்சுவிட்டாள்.
இவங்க பக்கத்தில் வந்தாவே ஒரு வேலையும் புரியமாட்டேங்குது. சரியான ராட்சசனா இருப்பார் போலயென்று சொல்லியபடியே எடுத்து வைத்த சுடிதாரை மாற்றி தயாரானவள் மீண்டும் சரியாக இருக்கிறதாயென்று கண்ணாடியை பார்த்துவிட்டு,பின்னர் ரூம் கதவை சாற்றிக்கொண்டு கீழே வந்தாள்....!
வீட்டில் உள்ளவர்களிடம் இருவரும் சொல்லிக்கொண்டு வெளியே வர அங்கே சிவாவும் வளவனும் காரின் முன்னிருக்கையில் உட்கார்ந்து இருந்தனர்
இருவரும் பின் சீட்டில் போய் உட்கார்ந்ததும் தேனுரை நோக்கி கார் சென்றது. அரைமணி நேரத்தில் பஸ் ஸ்டாப்பிற்கு வந்து சேர அவர்கள் செல்லும் பஸ்ஸூம் அங்கே தயாராக இருந்தது.
சரிடா நீங்க கிளம்புங்களென்றவாறு கதிர் தன் மனைவியோடு பஸ்ஸில் ஏற சரி பார்த்து போங்களென்று இருவரும் வீட்டிற்கு கிளம்பினர்.
லக்கேஜை தலைக்கு மேல் இருக்கும் இடத்தில் வைத்தவன் ம்ம் உட்காரு என்க ஜன்னல் பக்கம் போய் தாமரை உட்கார மனைவியின் அருகில் கதிர் உட்கார்ந்தான்.
அங்கங்கே பேருந்தில் சிலர் ஜோடியாகவும் தனித்தனியாகவும் உட்கார்ந்திருந்தனர்.தாமரைக்கு தான் கொஞ்சம் படபடப்பாக இருந்தது.
இது தான் கணவனோடு செல்லும் முதல் பேருந்து பயணம் என்பதால் அவளின் மனதிற்குள் ஏனோ இனம்புரியாத உணர்வு வந்தது.
கதிரோ இன்னும் ஏன் பஸ் எடுக்கவில்லை என்று சுற்றி பார்த்தவாறு இருந்தவன் மனைவியை கவனிக்கவில்லை.
நேரம் வந்ததும் பஸ்ஸூம் தேனூரிலிருந்து கோவையை நோக்கி கிளம்பியது.
டிக்கெட் டிக்கெட் என்று நடத்துனர் வர இரண்டு கோவை என்று பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து கொடுத்தான். அவரும் இரண்டு டிக்கெட்டை கொடுத்து விட்டு மீதி பணத்தை கொடுத்து செல்ல அதை பாக்கெட்டில் வைத்தவன் அப்பறம்டி என்று சிறிது சாய்ந்து உட்கார தாமரைக்கோ பேரவஸ்தையாக இருந்தது
அனேகமாக உன் அண்ணன் கரடி பயலா தாண்டி இருப்பான் என்றவன் மனமேயின்றி மனைவியை விலக்கியவன் கலைந்திருந்த தாமரையின் தலைமுடியை கோதி விட்டு உள்ளே போய் கதவை திறக்க வேலு தான் நின்றான்.
என்னடா என்க...
மிலிட்ரியும் அத்தையும் வந்துருக்காங்களென்கவும், அப்படியா என்றவன் உன் தங்கச்சி பாத்ரூம் போயிருக்கா சொல்லிட்டு வரேன் என்றவன் தாமரை..லாரன்ஸ் அப்பாவும் ஜூலி அம்மாவும் வந்துருக்காங்க சீக்கிரம் வா என்று சொல்லி விட்டு கதவை சாத்தியபடி வேலுவோடு கீழே வந்தான்.
எங்கப்பா மருமகளென்று லாரன்ஸ் கேட்க இதோ மாமா என்றவாறு கீழே வந்தவள் கணவனோடு சேர்ந்து இருவர் காலில் விழ காட் பிளஸ்யூ என்றனர்.
நல்லா இருக்கீங்களா மாமா,அத்தை என்று தாமரை கேட்க,நல்லா இருக்கோம் மா.பெருமாள் நீ வந்துருக்கனு சொன்னான் அதான் உன்னை பார்த்துட்டு போகலானு வந்தோமென்றனர்.
அப்பாடி உன் மருமவள் எங்கையும் ஓடிட மாட்டாள் சாப்புட்டு பொறுமையா பேசுங்களென்று வள்ளி அப்பாயி சொல்ல...
இதுக்கு தான் என் செல்லம் வேண்டும்னு சொல்லுறது. இப்படி சரியான நேரத்திற்கு சரியான பாயிண்டை புடிப்பதால் சகலை உன்னை இந்த வீட்டில் பிரகிணென்ட் ஆக்கியிருக்காரு செல்லமென்க...
அடேய் அறிவுகெட்டவனே என்ன பேச்சுடா என்று முத்து குரல் கொடுக்க...
மற்றவர்கள் வேலு சொன்னதை கேட்டு சத்தமாக சிரித்துவிட்டனர்.
ஏய்யா அப்பு உன் அத்தை மவன் என்ன சொல்லுறான்யா என்று வள்ளி அப்பாயி கேட்க...
நான் சொல்லுறேனென்ற குரல் கேட்டு எல்லாரும் வாசல் பக்கம் பார்த்தனர். அங்கே நான் வந்துட்டேனென்று நிகிலன் நின்றான்.
சின்னைய்யா வா வா என்ன கண்ணு வரேண்ணு சொல்லவேயில்லை என்று அப்பாயி சின்ன பேரனை நோக்கி கையை நீட்டினார்.
வேகமாக வந்து தனது பாட்டியை அணைத்தவனை கிள்ளி முத்தமிட்டவர் எய்யா கண்ணு பரிட்சை நல்லா எழுதியிருக்கியா ராசா என்றார்.
நல்லா எழுதியிருக்கேன் அப்பாயி. இன்னும் ரெண்டு மாசம் வரைக்கும் உன் உசுர வாங்கிட்டு தான் நான் போவேன் என்று நிகிலன் சொல்ல தாராளமா வாங்கு கண்ணு.நீ வாங்காம வேற யாரு கண்ணு வாங்கவா என்றவர் பாரு யார்லாம் வந்துருக்காங்களே என்று காட்ட..
தாமரையை பார்த்து அதிர்ந்தான்.
பின்னர் அனைவரிடமும் நலம் விசாரித்தவனை கை கால் கழுவிட்டு வா கண்ணு சாப்டலாமென்றனர்.
ஆமா ஆமா முதல்ல சோத்தை கண்ணுல காட்டுங்கயென்று வேகமாக மாடியில் இருக்கும் தனது ரூமிற்கு போனவன் ப்ரஷாகி சிறிது நிமிடத்தில் கீழே வந்து எல்லாரோடும் சேர்ந்து உட்கார தாமரை சீதா-ராதா மூவரும் ஆண்களுக்கு பரிமாறினார்.
சிறிது நிமிடத்தில் பேச்சோடு அவர்கள் சாப்பிட்டு திண்ணைக்கு போக பெண்கள் ஒன்றாய் உட்கார்ந்து பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.
அப்புறம் தாமரை அடுத்து உன்னுடைய பிளான் என்னம்மா என்று ஜூலி கேட்க இனிமே இங்க தானுங்கத்தை என்று சிரித்தாள்.
அப்படியா தாமரை ரொம்ப சந்தோஷம் சீக்கிரம் பேரனையும் பேத்தியையும் பெத்து கொடு எங்களுக்கு என்று சொல்ல, சரிங்கத்தை என்று வெட்கப்பட்டவளை தூரத்தில் இருந்து பார்த்த கதிருக்கு என் பொண்டாட்டி எவ்வளவு மென்மையா இருக்காளென்று மனதிற்குள் சொல்லினான்.
மேலும் சிறிது நேரம் பேசி இருந்து விட்டு லாரன்ஸ் ஜூலியும் அங்கிருந்து வீட்டிற்கு செல்ல தாமரையும் கதிரும் நீலகிரிக்கு செல்ல தயாரானார்கள்.
ஐயோ பஸ்லயும் புடவையை கட்டிக்கிட்டு போறதா என்று முணுமுணுத்துக் கொண்டே பேக்கிங் பண்ணிக் கொண்டிருந்தவளை பின்பக்கமாய் அணைத்தவன் சுடிதார் போட்டுக்கோ.ஆனால் வீட்ல இருக்கும்போது மட்டும் புடவை கட்டிக்க என்று சொல்ல நன்றியோடு அவனை அன்னார்ந்து பார்த்தவளை ஏய் முட்டகண்ணி இப்படிலாம் பாக்காதடி.
அப்புறம் நீலகிரி பயணம் கேன்சல் ஆகிவிடும் சொல்லிட்டேன் என்று பிடியை இறுக்க ம்ம் என்றாள்.
சரி ரெடியாகி கீழே வா நான் பேகை கொண்டு போய் கீழே வைக்குறேன்.
10.30 க்கு பஸ் டி என்றான்.
சரி,விட்டா தானே ரெடியாக என்றவளிடம் ஏண்டி ரெண்டு வருஷம் கழித்து இன்னைக்கு தான் டி என் கையில வந்து சேர்ந்துருக்க. இனி ஆயுசு முழுவதும் இவன் கிட்ட இருந்து உனக்கு விடுதலை இல்லடி என்று தாமரையின் தலையில் முட்ட...
நானும் விடுதலை வேண்டுமென்று கேட்கவில்லையே என்றாள்.
ஓஓஓ...
கேட்டு பாருடி அப்புறம் தெரியுமென்க,அதான் கேட்கலைனு சொல்லுறேனே பிறகென்ன வாதமென்றவளை இது வாதம் இல்லடி அச்சாரமென்றவன் உனக்கு தாலிகூட இன்னும் பிரிச்சி போடலை இல்லையா என்று கேட்டான்.
ஹம் இப்போவாது இந்த கொய்யாக்கு ஞாபகம் வந்துச்சே என்றவள் கயிறும் நஞ்சி போய் தான் இருக்கு மாம்ஸ் என்றாள்.
ஏய் இது எனக்கு ஞாபகம் இல்லாமல் இருக்குமாடி என்றவன் ரொம்ப நஞ்சி போய்டாடி என்றவாறு தாமரையின் கழுத்தில் இருந்த தாலிகயிற்றை எடுத்து பார்க்க அங்கங்கே நஞ்சுபோய் தான் இருந்தது.
சரிடி நீலகிரி போய்ட்டு வந்த உடனே மாத்திடலாமென்றவன் தாமரை பேக் பண்ணிய டிராலியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான்.
கணவன் போனதும் கதவை அடைத்து அதன் மேல் சாய்ந்து நின்றவள் ஹப்பாடா என்று மூச்சுவிட்டாள்.
இவங்க பக்கத்தில் வந்தாவே ஒரு வேலையும் புரியமாட்டேங்குது. சரியான ராட்சசனா இருப்பார் போலயென்று சொல்லியபடியே எடுத்து வைத்த சுடிதாரை மாற்றி தயாரானவள் மீண்டும் சரியாக இருக்கிறதாயென்று கண்ணாடியை பார்த்துவிட்டு,பின்னர் ரூம் கதவை சாற்றிக்கொண்டு கீழே வந்தாள்....!
வீட்டில் உள்ளவர்களிடம் இருவரும் சொல்லிக்கொண்டு வெளியே வர அங்கே சிவாவும் வளவனும் காரின் முன்னிருக்கையில் உட்கார்ந்து இருந்தனர்
இருவரும் பின் சீட்டில் போய் உட்கார்ந்ததும் தேனுரை நோக்கி கார் சென்றது. அரைமணி நேரத்தில் பஸ் ஸ்டாப்பிற்கு வந்து சேர அவர்கள் செல்லும் பஸ்ஸூம் அங்கே தயாராக இருந்தது.
சரிடா நீங்க கிளம்புங்களென்றவாறு கதிர் தன் மனைவியோடு பஸ்ஸில் ஏற சரி பார்த்து போங்களென்று இருவரும் வீட்டிற்கு கிளம்பினர்.
லக்கேஜை தலைக்கு மேல் இருக்கும் இடத்தில் வைத்தவன் ம்ம் உட்காரு என்க ஜன்னல் பக்கம் போய் தாமரை உட்கார மனைவியின் அருகில் கதிர் உட்கார்ந்தான்.
அங்கங்கே பேருந்தில் சிலர் ஜோடியாகவும் தனித்தனியாகவும் உட்கார்ந்திருந்தனர்.தாமரைக்கு தான் கொஞ்சம் படபடப்பாக இருந்தது.
இது தான் கணவனோடு செல்லும் முதல் பேருந்து பயணம் என்பதால் அவளின் மனதிற்குள் ஏனோ இனம்புரியாத உணர்வு வந்தது.
கதிரோ இன்னும் ஏன் பஸ் எடுக்கவில்லை என்று சுற்றி பார்த்தவாறு இருந்தவன் மனைவியை கவனிக்கவில்லை.
நேரம் வந்ததும் பஸ்ஸூம் தேனூரிலிருந்து கோவையை நோக்கி கிளம்பியது.
டிக்கெட் டிக்கெட் என்று நடத்துனர் வர இரண்டு கோவை என்று பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து கொடுத்தான். அவரும் இரண்டு டிக்கெட்டை கொடுத்து விட்டு மீதி பணத்தை கொடுத்து செல்ல அதை பாக்கெட்டில் வைத்தவன் அப்பறம்டி என்று சிறிது சாய்ந்து உட்கார தாமரைக்கோ பேரவஸ்தையாக இருந்தது