Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 128
- Thread Author
- #1
பாகம்-4
அன்றைய நாள் முழுவதும் கதிர் எதிரில் வந்தால், அவனை பெரிதாகக் கண்டுகொள்ளாமல் முல்லையின் தந்தை கணேஷன் அவர் வேலைகளை செய்து கொண்டிருக்க, நேரம் சரியாக காலை பதினோரு மணி அளவில் கதிர், சவிதாவின் பெயரில் குலதெய்வ கோவிலில் பூசை செய்து பொங்கல் வைக்க ஏற்பாடு நடக்க இருந்தது.
ஏனோ கதிரின் அப்பா, அவரின் மச்சான்கள் இருவரிடமும் கோவமாக பேசிக்கொண்டு இருந்ததை கவனித்த கதிர் அவர்கள் அருகில் சென்று, “அப்பா என்ன பிரச்சனை?” என்றான்.
“ஒன்னும் இல்லப்பா நீ போய்க் கோவிலுக்கு கிளம்பு.”
“இல்லப்பா. காலையில இருந்து ஏதோ சத்தமா பேசிகிட்டு இருக்கீங்க. என்ன ஆச்சு?
“கதிர் இந்த அநியாயத்தை நீயே கேளு. நேத்து இரவு இதோ என் தம்பி தனசேகரன் வீட்டில் இருந்து அம்மனுக்கு சாத்த வைர நகைகள் எல்லாம் எடுத்துட்டு வந்தோம். இப்போ அதுல வைர ஒட்டியாணத்தைக் காணோம்” என்றார் ராஜசேகரன்.
தனசேகரனோ, “இல்ல தம்பி. அத காணோம்னு சொல்வதை விட யாரோ திருடிட்டாங்கன்னு தான் சொல்லணும்” என்ற தகவலைக் கொடுத்தார்.
“என்ன சின்ன மாமா சொல்றீங்க? திருட்டா?”
“ஆமாடா. என் வீட்டில் நகை பத்திரமா தான் இருந்துச்சு. இங்க வந்துதான் அந்த நகை திருட்டு போய் இருக்கும்.”
“வாய மூடு மச்சான். இங்கே யாரு திருட போறாங்க” என்றார் சேரன்.
“வேற யாரு. இங்க வீட்ல வேல செய்றவங்களா தான் இருக்கும்.” தனசேகரன் சொல்ல,
“என்ன விளையாடுறீங்களா. இந்த வீட்ல வேலை செய்ற எல்லாருமே என் விசுவாசிகள். எனக்காக உயிரையும் கொடுப்பாங்க” என்று சத்தம் போட்டார் சேரன்.
“சும்மா இருங்க மாமா. பணம் பத்தும் செய்யும். பணத்துக்கு மயங்காதவர்கள் யாருமே இல்ல. கண்டிப்பா உங்க வீட்ல வேலை செய்யுற யாரோ ஒரு ஆள் தான், அம்மனுக்கு சாத்த வேண்டிய வைர ஒட்டியாணத்தை திருடி இருப்பாங்க” என்று அடித்துப் பேசினார் தனசேகரன்.
“மாமா அப்பா சொல்றதுதான் சரி. இந்த வீட்ல வேலை செய்றவங்க எல்லாரையுமே எனக்கு பிறந்ததிலிருந்தே தெரியும். யாரும் பணத்துக்கு ஆசைப்பட்டவங்க இல்ல. அதுவும் அம்மன் நகையை எடுக்க சான்சேயில்லை.”
“அப்போ அந்த நகை எங்க போச்சு தம்பி?”
“அப்பா நீங்க மாமா வீட்ல இருந்து நகை பெட்டியை எடுத்துட்டு வரும்போது அந்த நகை இருந்துச்சா?”
அ...அது. இல்ல கதிர். நாங்க எந்த நகையையும் தனியா பார்க்கல. அப்படியே அந்த பெட்டியை இங்கே எடுத்துட்டு வந்து விட்டோம்.”
“அப்போ ஒருவேளை நீங்க வரும்போது அந்த பெட்டியில் அந்த நகை இல்லாமல் இருந்திருக்கலாம் இல்ல” என்றான் கதிர்.
“அப்ப அந்த நகையை திருடியது நான்னு சொல்றியா?” கோவமாகக் கேட்டார் தனசேகரன்.
“மாமா நான் எங்க அப்படி சொன்னேன். ஒருவேள உங்க வீட்டுல தவறுதலாக அது இருக்கலாம். இல்ல போன் பண்ணி அத்தைகிட்ட அலமாரியில் தேட சொல்லுங்க.”
“அவளுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நகையை அலமாரியில் வைக்கிறதும் நான் தான். எடுக்குறதும் நான் தான். மாமா எப்படிக் கொடுத்தாறோ அப்படியே உள்ள வச்சு, அப்படியே எடுத்துட்டு வந்து இருக்கிறேன். அதனால் அந்த நகையை கண்டிப்பா இந்த பங்களாவில் வேலை செய்யுற வேலைக்காரங்க தான் திருடி இருப்பாங்க” என்றார் திரும்பவும்.
“மறுபடியும் என் விசுவாசிகளை திருடன்னுங்கன்னு சொன்னீங்கன்னா, அப்புறம் நம்ப உறவுமுறையே தூண்டிச்சுடும் சொல்லிட்டேன்.” கொஞ்சம் கண்டிப்புடனே சொன்னார் சேரன்.
“இப்போ கொஞ்ச நேரத்துல பதினெட்டு பட்டி கிராமமும் ஒன்று சேரும். அவங்க எதிரில் அம்மனுக்கு அந்த நகையை சாத்தியே தீரனும். இப்ப வைர ஒட்டியாணம் காணும்னு சொன்னா, நம்பல கிராமத்து தலைவருங்க காரி துப்புவாங்க” என்றார் ராஜசேகர்.
“இப்ப என்ன பண்ண சொல்றீங்க மாமா?”
தனசேகரோ, “இங்க வேலை செய்ற எல்லாருடைய வீட்டிலும் சோதனை போடுங்க” என்றார்.
“இங்க பாருங்க நான் மறுபடியும் சொல்றேன் எங்களுடைய விசுவாசிகள் அவங்க. அவங்க இதை பண்ணியிருக்கமாட்டாங்க.”
“என்ன மாமா நீங்க? அப்போ அந்த நகை எங்க?”
“இல்ல எனக்கு என்னமோ அந்த நகையை இந்த வீட்ல வேலை செய்றவங்க தான் திருடி இருப்பாங்கன்னு தோணுது.” திரும்பத் திரும்ப அவர்களையே சொன்னார் ராஜசேகர்.
“சும்மா அதையே சொல்லாதீங்க. நேத்து நம்ப நகை எடுத்துட்டு வரும்போது இந்த வீட்ல யாருமே இல்ல. நானு நீனு இதோ தனசேகரன் அப்புறம் கணேசன்னு நம்ம நாலு பேர்தான் இருந்தோம்.”
“அப்ப சரி கணேசன் தான் எடுத்து இருப்பான்” என்றார் தனசேகரன்.
“மரியாதை கெட்டுவிடும் சொல்லிட்டேன். என்ன பேச்சு இது? கணேசன் யாரு தெரியுமா? அவன் என் விசுவாசி. எனக்காக உயிரை குடுக்குறவன் மட்டும் இல்ல. யாரு உயிரை வேணாலும் எடுக்கிறவன்” என்று கொதித்தார் சேரன்.
“மாமா போதும் நிறுத்துங்க. எனக்கு என்னமோ அவன் மேல தான் சந்தேகமா இருக்கு. நேத்து நைட்டு கூட அவன் இங்க தங்கலை. இதோ இப்ப அவன் பொண்ணு கூட இங்கே இல்லையே” என்று தனசேகரன் சொல்ல,
ராஜசேகர், “ஆமா அவன் பொண்ணு நேத்து கூட இருந்தா. ஆனா இன்னைக்கு இங்க இல்ல” எனவும்,
“சரியா போச்சு. அப்ப நான் சந்தேகப்பட்டது தான் சரி. அவன் தான் அந்த நகையை எடுத்து இருக்கணும்” என்று அண்ணனுக்கு ஒத்து ஊதினார்.
“என்ன பேச்சு பேசுறீங்க? கணேசன் அப்படியெல்லாம் செய்யக் கூடிய ஆள் இல்ல. அதுவும் இல்லாம நீங்க தொலைச்சது வைர ஒட்டியாணமா இருக்கலாம். ஆனா முல்லை அந்த வைரத்தை காட்டிலும் புனிதமானவ.” என்றான் கதிர்.
“அந்த நகை தொலைந்து போச்சுன்னா அதுக்கு இந்த வீட்டில இருந்து நாலு பேரு தான் காரணம். ஒன்று நான் இன்னொன்னு என் தம்பி. அப்புறம் உங்க அப்பா. நாங்க மூணு பேருமே எடுக்கலைன்னா அப்போ யார் எடுத்திருப்பாங்க கண்டிப்பா அந்த கணேசன்தான் எடுத்திருப்பான். ஊரைக் கூட்டி பஞ்சாயத்து முன்னாடி அவனை நிப்பாட்டி சவுக்கால நாலு போடு போட்டா உண்மை தானா வரும்.”
“அதுக்கெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன்.”
“கதிர் நீ சும்மா இருப்பா. இங்க பாருங்க கணேசன் அப்படிப்பட்ட ஆள் இல்ல. நீங்களா ஏதாவது பேசக்கூடாது.”
“மாமா நீங்க சும்மா இருங்க. டேய் யாரு அங்க. கணேசனை கூப்பிடுங்க” என்றார் தனசேகர்.
“ஐயோ மாமா கொஞ்சம் சும்மா இருங்க” என்றான் கதிர்.
“நீ சும்மா இரு கதிர்” என்று ராஜசேகரன் கதிரை மிரட்ட,
கணேசன் இவர்கள் அழைக்கும் குரலைக் கேட்டு ஓடி வந்தவர், “ஐயா கூப்பிட்டீங்களா?” எனக் கேட்க.
“டேய் அந்த வைர ஒட்டியாணம் எங்கடா? சொல்லு எங்க திருடி வச்சிருக்க?”
“ஐயா என்ன சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியலையே” கணேசன் கேட்க,
சேரன், “ஒன்னும் இல்ல கணேஷா. நீ போ” என்றார்.
“டேய் நில்லுடா. நேத்து நான், என் அண்ணன், அப்புறம் மாமா மூணு பேரும் வரும்போது நீ மட்டும்தான் வீட்டில் இருந்த. நகை பெட்டியை நாங்க உள்ளே வைச்சுட்டு அதுக்கப்புறம் நாங்க தோட்டத்துக்கு போய் விட்டோம். அப்போ தான் நீ அந்த நகையை திருடி இருக்கணும்” என தனசேகரன் சொல்ல,
“என்ன நானா? ஐயா என்ன வார்த்தை பேசிட்டிங்க. நான் இந்த வீட்டு உப்பு தின்னு வளர்ந்தவன். நான் சத்தியமா அதெல்லாம் பண்ணமாட்டேன்.”
“கணேசன் நான் சொல்றேன் நீ போ” என்றார் சேரன்.
“மாமா கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா. இன்னும் ஒரு மணி நேரத்துல ஊர் கூடி அம்மனுக்கு அந்த நகையை சாத்தியே தீரணும் .இந்த நேரத்தில ஒட்டியானம் காணம்ன்னு சொன்னா என்ன ஆகறது. கண்டிப்பா கணேசன் தான் திருடி இருப்பான்.” உறுதியாக நிற்க,
“டேய் உன் பொண்ணு எங்க? உன் பொண்ணை வர சொல்லு?” என்றார் ராஜசேகர்.
“இல்ல ஐயா என் பொண்ணு நேத்து நைட்டு அவங்க பாட்டி வீட்டுக்கு போய்ட்டா.”
“இதோ வெட்ட வெளிச்சமாகிடுது. நேத்து நைட்டு நீ தான் நகையை திருடி உன் பொண்ணுகிட்ட கொடுத்து, அவள அவ பாட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்ட?”
“ஐயோ சத்தியமா இல்ல ஐயா” என்று பதறினார் கணேசன்.
“அப்போ திடுதிப்புன்னு உன் பொண்ணு அவ பாட்டி வீட்டுக்கு போக காரணம் என்ன?”
“அது வந்து... அது வந்து...” திணறி நிற்க,
“இங்க பாருங்க முல்லைப்பூக்கு உடம்பு சரி இல்ல. இங்க இருந்தா அவள பார்த்துக்க ஆள் இல்லைன்னு தான் கணேஷன் அவங்க பாட்டி வீட்டுக்கு அனுப்பி வச்சாரு.”
“உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?” சின்ன மாமன் கேட்க,
“நான் கணேஷன்கிட்ட காலையில முல்லை எங்க என்று கேட்டதற்கு அவர் சொன்ன விளக்கம் இதுதான்.”
“அதெல்லாம் நம்பாத மாப்பிள்ளை. இவன் நேற்று இரவு வைர ஒட்டியாணத்தை திருடி இவன் பொண்ணு கையில கொடுத்து. இந்த ஊரை விட்டே அனுப்பி வச்சிருக்கான். டேய் இப்ப உன் பொண்ணு எந்த ஊர்ல இருக்கா?” என்றார் விடாது.
“ஐயா பக்கத்து கிராமத்துல தான் இருக்காள்.”
“டேய் யார் அங்க” என்று அங்கிருந்த ஒருவனை அழைக்க, “ஐயா சொல்லுங்க” என்று வந்தான் ஒருவன்.
“கணேசனுடைய பொண்ணு எங்க இருந்தாலும், அவளை இன்னும் ரெண்டு மணி நேரத்துல ஊர் பஞ்சாயத்தில் கொண்டு வந்து நிறுத்துங்க” என்றார் தனசேகர்.
அன்றைய நாள் முழுவதும் கதிர் எதிரில் வந்தால், அவனை பெரிதாகக் கண்டுகொள்ளாமல் முல்லையின் தந்தை கணேஷன் அவர் வேலைகளை செய்து கொண்டிருக்க, நேரம் சரியாக காலை பதினோரு மணி அளவில் கதிர், சவிதாவின் பெயரில் குலதெய்வ கோவிலில் பூசை செய்து பொங்கல் வைக்க ஏற்பாடு நடக்க இருந்தது.
ஏனோ கதிரின் அப்பா, அவரின் மச்சான்கள் இருவரிடமும் கோவமாக பேசிக்கொண்டு இருந்ததை கவனித்த கதிர் அவர்கள் அருகில் சென்று, “அப்பா என்ன பிரச்சனை?” என்றான்.
“ஒன்னும் இல்லப்பா நீ போய்க் கோவிலுக்கு கிளம்பு.”
“இல்லப்பா. காலையில இருந்து ஏதோ சத்தமா பேசிகிட்டு இருக்கீங்க. என்ன ஆச்சு?
“கதிர் இந்த அநியாயத்தை நீயே கேளு. நேத்து இரவு இதோ என் தம்பி தனசேகரன் வீட்டில் இருந்து அம்மனுக்கு சாத்த வைர நகைகள் எல்லாம் எடுத்துட்டு வந்தோம். இப்போ அதுல வைர ஒட்டியாணத்தைக் காணோம்” என்றார் ராஜசேகரன்.
தனசேகரனோ, “இல்ல தம்பி. அத காணோம்னு சொல்வதை விட யாரோ திருடிட்டாங்கன்னு தான் சொல்லணும்” என்ற தகவலைக் கொடுத்தார்.
“என்ன சின்ன மாமா சொல்றீங்க? திருட்டா?”
“ஆமாடா. என் வீட்டில் நகை பத்திரமா தான் இருந்துச்சு. இங்க வந்துதான் அந்த நகை திருட்டு போய் இருக்கும்.”
“வாய மூடு மச்சான். இங்கே யாரு திருட போறாங்க” என்றார் சேரன்.
“வேற யாரு. இங்க வீட்ல வேல செய்றவங்களா தான் இருக்கும்.” தனசேகரன் சொல்ல,
“என்ன விளையாடுறீங்களா. இந்த வீட்ல வேலை செய்ற எல்லாருமே என் விசுவாசிகள். எனக்காக உயிரையும் கொடுப்பாங்க” என்று சத்தம் போட்டார் சேரன்.
“சும்மா இருங்க மாமா. பணம் பத்தும் செய்யும். பணத்துக்கு மயங்காதவர்கள் யாருமே இல்ல. கண்டிப்பா உங்க வீட்ல வேலை செய்யுற யாரோ ஒரு ஆள் தான், அம்மனுக்கு சாத்த வேண்டிய வைர ஒட்டியாணத்தை திருடி இருப்பாங்க” என்று அடித்துப் பேசினார் தனசேகரன்.
“மாமா அப்பா சொல்றதுதான் சரி. இந்த வீட்ல வேலை செய்றவங்க எல்லாரையுமே எனக்கு பிறந்ததிலிருந்தே தெரியும். யாரும் பணத்துக்கு ஆசைப்பட்டவங்க இல்ல. அதுவும் அம்மன் நகையை எடுக்க சான்சேயில்லை.”
“அப்போ அந்த நகை எங்க போச்சு தம்பி?”
“அப்பா நீங்க மாமா வீட்ல இருந்து நகை பெட்டியை எடுத்துட்டு வரும்போது அந்த நகை இருந்துச்சா?”
அ...அது. இல்ல கதிர். நாங்க எந்த நகையையும் தனியா பார்க்கல. அப்படியே அந்த பெட்டியை இங்கே எடுத்துட்டு வந்து விட்டோம்.”
“அப்போ ஒருவேளை நீங்க வரும்போது அந்த பெட்டியில் அந்த நகை இல்லாமல் இருந்திருக்கலாம் இல்ல” என்றான் கதிர்.
“அப்ப அந்த நகையை திருடியது நான்னு சொல்றியா?” கோவமாகக் கேட்டார் தனசேகரன்.
“மாமா நான் எங்க அப்படி சொன்னேன். ஒருவேள உங்க வீட்டுல தவறுதலாக அது இருக்கலாம். இல்ல போன் பண்ணி அத்தைகிட்ட அலமாரியில் தேட சொல்லுங்க.”
“அவளுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நகையை அலமாரியில் வைக்கிறதும் நான் தான். எடுக்குறதும் நான் தான். மாமா எப்படிக் கொடுத்தாறோ அப்படியே உள்ள வச்சு, அப்படியே எடுத்துட்டு வந்து இருக்கிறேன். அதனால் அந்த நகையை கண்டிப்பா இந்த பங்களாவில் வேலை செய்யுற வேலைக்காரங்க தான் திருடி இருப்பாங்க” என்றார் திரும்பவும்.
“மறுபடியும் என் விசுவாசிகளை திருடன்னுங்கன்னு சொன்னீங்கன்னா, அப்புறம் நம்ப உறவுமுறையே தூண்டிச்சுடும் சொல்லிட்டேன்.” கொஞ்சம் கண்டிப்புடனே சொன்னார் சேரன்.
“இப்போ கொஞ்ச நேரத்துல பதினெட்டு பட்டி கிராமமும் ஒன்று சேரும். அவங்க எதிரில் அம்மனுக்கு அந்த நகையை சாத்தியே தீரனும். இப்ப வைர ஒட்டியாணம் காணும்னு சொன்னா, நம்பல கிராமத்து தலைவருங்க காரி துப்புவாங்க” என்றார் ராஜசேகர்.
“இப்ப என்ன பண்ண சொல்றீங்க மாமா?”
தனசேகரோ, “இங்க வேலை செய்ற எல்லாருடைய வீட்டிலும் சோதனை போடுங்க” என்றார்.
“இங்க பாருங்க நான் மறுபடியும் சொல்றேன் எங்களுடைய விசுவாசிகள் அவங்க. அவங்க இதை பண்ணியிருக்கமாட்டாங்க.”
“என்ன மாமா நீங்க? அப்போ அந்த நகை எங்க?”
“இல்ல எனக்கு என்னமோ அந்த நகையை இந்த வீட்ல வேலை செய்றவங்க தான் திருடி இருப்பாங்கன்னு தோணுது.” திரும்பத் திரும்ப அவர்களையே சொன்னார் ராஜசேகர்.
“சும்மா அதையே சொல்லாதீங்க. நேத்து நம்ப நகை எடுத்துட்டு வரும்போது இந்த வீட்ல யாருமே இல்ல. நானு நீனு இதோ தனசேகரன் அப்புறம் கணேசன்னு நம்ம நாலு பேர்தான் இருந்தோம்.”
“அப்ப சரி கணேசன் தான் எடுத்து இருப்பான்” என்றார் தனசேகரன்.
“மரியாதை கெட்டுவிடும் சொல்லிட்டேன். என்ன பேச்சு இது? கணேசன் யாரு தெரியுமா? அவன் என் விசுவாசி. எனக்காக உயிரை குடுக்குறவன் மட்டும் இல்ல. யாரு உயிரை வேணாலும் எடுக்கிறவன்” என்று கொதித்தார் சேரன்.
“மாமா போதும் நிறுத்துங்க. எனக்கு என்னமோ அவன் மேல தான் சந்தேகமா இருக்கு. நேத்து நைட்டு கூட அவன் இங்க தங்கலை. இதோ இப்ப அவன் பொண்ணு கூட இங்கே இல்லையே” என்று தனசேகரன் சொல்ல,
ராஜசேகர், “ஆமா அவன் பொண்ணு நேத்து கூட இருந்தா. ஆனா இன்னைக்கு இங்க இல்ல” எனவும்,
“சரியா போச்சு. அப்ப நான் சந்தேகப்பட்டது தான் சரி. அவன் தான் அந்த நகையை எடுத்து இருக்கணும்” என்று அண்ணனுக்கு ஒத்து ஊதினார்.
“என்ன பேச்சு பேசுறீங்க? கணேசன் அப்படியெல்லாம் செய்யக் கூடிய ஆள் இல்ல. அதுவும் இல்லாம நீங்க தொலைச்சது வைர ஒட்டியாணமா இருக்கலாம். ஆனா முல்லை அந்த வைரத்தை காட்டிலும் புனிதமானவ.” என்றான் கதிர்.
“அந்த நகை தொலைந்து போச்சுன்னா அதுக்கு இந்த வீட்டில இருந்து நாலு பேரு தான் காரணம். ஒன்று நான் இன்னொன்னு என் தம்பி. அப்புறம் உங்க அப்பா. நாங்க மூணு பேருமே எடுக்கலைன்னா அப்போ யார் எடுத்திருப்பாங்க கண்டிப்பா அந்த கணேசன்தான் எடுத்திருப்பான். ஊரைக் கூட்டி பஞ்சாயத்து முன்னாடி அவனை நிப்பாட்டி சவுக்கால நாலு போடு போட்டா உண்மை தானா வரும்.”
“அதுக்கெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன்.”
“கதிர் நீ சும்மா இருப்பா. இங்க பாருங்க கணேசன் அப்படிப்பட்ட ஆள் இல்ல. நீங்களா ஏதாவது பேசக்கூடாது.”
“மாமா நீங்க சும்மா இருங்க. டேய் யாரு அங்க. கணேசனை கூப்பிடுங்க” என்றார் தனசேகர்.
“ஐயோ மாமா கொஞ்சம் சும்மா இருங்க” என்றான் கதிர்.
“நீ சும்மா இரு கதிர்” என்று ராஜசேகரன் கதிரை மிரட்ட,
கணேசன் இவர்கள் அழைக்கும் குரலைக் கேட்டு ஓடி வந்தவர், “ஐயா கூப்பிட்டீங்களா?” எனக் கேட்க.
“டேய் அந்த வைர ஒட்டியாணம் எங்கடா? சொல்லு எங்க திருடி வச்சிருக்க?”
“ஐயா என்ன சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியலையே” கணேசன் கேட்க,
சேரன், “ஒன்னும் இல்ல கணேஷா. நீ போ” என்றார்.
“டேய் நில்லுடா. நேத்து நான், என் அண்ணன், அப்புறம் மாமா மூணு பேரும் வரும்போது நீ மட்டும்தான் வீட்டில் இருந்த. நகை பெட்டியை நாங்க உள்ளே வைச்சுட்டு அதுக்கப்புறம் நாங்க தோட்டத்துக்கு போய் விட்டோம். அப்போ தான் நீ அந்த நகையை திருடி இருக்கணும்” என தனசேகரன் சொல்ல,
“என்ன நானா? ஐயா என்ன வார்த்தை பேசிட்டிங்க. நான் இந்த வீட்டு உப்பு தின்னு வளர்ந்தவன். நான் சத்தியமா அதெல்லாம் பண்ணமாட்டேன்.”
“கணேசன் நான் சொல்றேன் நீ போ” என்றார் சேரன்.
“மாமா கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா. இன்னும் ஒரு மணி நேரத்துல ஊர் கூடி அம்மனுக்கு அந்த நகையை சாத்தியே தீரணும் .இந்த நேரத்தில ஒட்டியானம் காணம்ன்னு சொன்னா என்ன ஆகறது. கண்டிப்பா கணேசன் தான் திருடி இருப்பான்.” உறுதியாக நிற்க,
“டேய் உன் பொண்ணு எங்க? உன் பொண்ணை வர சொல்லு?” என்றார் ராஜசேகர்.
“இல்ல ஐயா என் பொண்ணு நேத்து நைட்டு அவங்க பாட்டி வீட்டுக்கு போய்ட்டா.”
“இதோ வெட்ட வெளிச்சமாகிடுது. நேத்து நைட்டு நீ தான் நகையை திருடி உன் பொண்ணுகிட்ட கொடுத்து, அவள அவ பாட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்ட?”
“ஐயோ சத்தியமா இல்ல ஐயா” என்று பதறினார் கணேசன்.
“அப்போ திடுதிப்புன்னு உன் பொண்ணு அவ பாட்டி வீட்டுக்கு போக காரணம் என்ன?”
“அது வந்து... அது வந்து...” திணறி நிற்க,
“இங்க பாருங்க முல்லைப்பூக்கு உடம்பு சரி இல்ல. இங்க இருந்தா அவள பார்த்துக்க ஆள் இல்லைன்னு தான் கணேஷன் அவங்க பாட்டி வீட்டுக்கு அனுப்பி வச்சாரு.”
“உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?” சின்ன மாமன் கேட்க,
“நான் கணேஷன்கிட்ட காலையில முல்லை எங்க என்று கேட்டதற்கு அவர் சொன்ன விளக்கம் இதுதான்.”
“அதெல்லாம் நம்பாத மாப்பிள்ளை. இவன் நேற்று இரவு வைர ஒட்டியாணத்தை திருடி இவன் பொண்ணு கையில கொடுத்து. இந்த ஊரை விட்டே அனுப்பி வச்சிருக்கான். டேய் இப்ப உன் பொண்ணு எந்த ஊர்ல இருக்கா?” என்றார் விடாது.
“ஐயா பக்கத்து கிராமத்துல தான் இருக்காள்.”
“டேய் யார் அங்க” என்று அங்கிருந்த ஒருவனை அழைக்க, “ஐயா சொல்லுங்க” என்று வந்தான் ஒருவன்.
“கணேசனுடைய பொண்ணு எங்க இருந்தாலும், அவளை இன்னும் ரெண்டு மணி நேரத்துல ஊர் பஞ்சாயத்தில் கொண்டு வந்து நிறுத்துங்க” என்றார் தனசேகர்.