• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
128
முகவரி.. 1️⃣

"அப்பா அப்பா" என்று அழைத்தாள் முல்லை.

"என்னமா?" என கணேஷன் கேட்க,

"ஆயிரம் லட்டு பிடிச்சாச்சு. வேற என்ன பண்ணனும்?"

"மணி பனிரெண்டு ஆச்சுமா. நீ இரு நான் போய் சாப்பாடு மேசையில எல்லாமே ஒழுங்கா இருக்கான்னு பாத்துட்டு வரேன்."

"சரிப்பா. நான் போய் பூனைக்கு பால் ஊத்திட்டு வரேன். பாவம் அது கத்திகிட்டே இருக்கு" என்றாள்.

"சீக்கிரம் வந்துடுமா. பெரிய ஐயாவோட மச்சான் ராஜசேகரன் வர நேரம். அவரு எதிரில எல்லாம் நம்ம ஜாதி காரங்க வரவே கூடாது."

"ஏன் வர கூடாது?" என கேட்டாள் முல்லை.

"அது அப்படி தான்மா. சரி சரி நீ பின் பக்கமா போயிட்டு வா."

'ம்... சரிப்பா. ஆனா ஏன் ராஜசேகர் ஐயா வந்து இருக்காரு?" என்று தன் சந்தேகத்தைக் கேட்டாள்.

"என்னமா நீ சின்ன பிள்ளை மாதிரி கேள்வி கேக்குற? நாளைக்கு ராஜசேகர் ஐயாவோட பொண்ணு சவிதாவுக்கும், நம்ம சின்ன ஐயாக்கும் நிச்சயம் நடக்க போகுதுமா."

"என்னப்பா சொல்றிங்க? கதிருக்கா நிச்சயம் நடக்க போகுது? அவன் என்கிட்ட சொல்லவே இல்ல."

"ஏய் கழுத என்ன நீ சின்ன ஐயாவை பெயர் சொல்லி கூப்பிடுற?"

"உனக்கு தான் அவரு சின்ன.... ஐ....யா... எனக்கு அவன் எப்பவுமே கதிர் தான்."

"அம்மாடி முல்ல. இப்படி எல்லாம் பேசாத கூடாது. அவரு பெரிய பணக்காரரு. இந்த ஊர் தலைவரின் ஒரே பையன். நீ பாட்டுக்கு அவருகிட்ட வெகுளி தனமா எதையும் பேசி வைக்காத. இனி நீ அவர பாத்தா ஐயான்னு தான் கூப்பிடனும் சரியா?" என்றார் கண்டிப்புடன்.

"ம்... சரிப்பா"
என்று சொன்னவள், பின் பக்க வாசல் வழியே தோட்டதுக்கு சென்று அங்கே இருந்த பூனை குட்டிகளை எடுத்து கொஞ்சி கொண்டு இருந்த சமயம், முன் வாசல் வழியாக ஜீப் ஒன்று அந்த பங்களாவின் வாசல் வழியே நுழைந்தது.

அதே சமயம் முல்லை கையில் இருந்த பூனை குட்டி குதித்து ஜீப்பில் அடிப்பட இருக்க, அதை ஓடிப் போய் முல்லை தூக்க முயல, அதே சமயம் ஜீப் சடன் break போட்டு நிறுத்திய படி அந்த ஜீப்பில் இருந்து ராஜசேகர் கீழே இறங்க, அவரை தொடர்ந்து அதே வண்டியில் இருந்து ராஜாசேகரின் மகள் சவிதாவும் இறங்கினாள்.


"ஏய் இந்தா பொண்ணே யாரு நீ?" ராஜசேகர் கேட்க,

"நான் முல்லை பூ."

"இங்க என்ன பண்ற? உன்னை பாத்தா .......... தெரியுது.?

"அப்படினா?" புரியாது கேட்டாள்.

"ஐயா ஐயா இவ என் மக தான் ஐயா. நான் தான் எனக்கு உதவி பண்ண அழைச்சிட்டு வந்தேன்." என்றார் கணேஷன்.

"என்ன இங்க சத்தம்" என்று சேரன் வர,

"என்ன மாமா இது இந்த ஜாதி ஆளுங்க எல்லாம் நம்ம எதிரிலேயே வர கூடாது. ஆனா நீங்க என்னடானா இதுங்கள வீட்டுக்குள்ள எல்லாம் விட்டு வைக்கிறிங்க?"

"மச்சான் இந்த விஷயத்துல மட்டும் நீ வேற நான் வேற தான். எனக்கு ஜாதி மதம் இதெல்லாம் நம்பிக்கை இல்ல. என் மகனும் அப்படி தான். அதனால நீ இங்க வரும் போது மட்டும் உன் மூட நம்பிக்கையை மூட்டை கட்டி வச்சிடு சரியா?"

"என்ன பண்றது? என் மகள உங்க மருமகளா ஆக்கிக்க போறீங்க. அதனால இதெல்லாம் சகிச்சுக்க தானே வேண்டி இருக்கு. சரி நான் உள்ள போறேன்."

"மருமகளே உள்ள வாமா" என்றார் சேரன்.

"ம்... ஆங் மாமா சின்ன மாமா எங்க?"

"உங்க நிச்சியதுக்காக கதிர் friends எல்லாம் வந்து இருக்காங்க. அதனால அவன் பண்ணை வீட்ல இருக்கான்மா."

"சரி மாமா. நான் போய் சின்ன மாமாவை பாத்துட்டு வரவா?"

"உன் மாமனை நீ பாக்க போற. அதை ஏன் என்கிட்ட கேக்குற? போமா போய் பாத்துட்டு வா."

"பண்ணை வீடு எங்க இருக்கு?"

"அது அப்படியே நேரா போய்கிட்டே இருக்கணும்."

"ம்... மாமா. நான் இந்த பொண்ணை கூட அழைச்சிட்டு போகவா? என கேட்டாள்.

"முல்ல" என்று அழைத்தார் அவளை.

"ம்... என்ன பெரிய ஐயா?" அன்று அங்கு வர,

"நீ என் மருமக கூட போய் பண்ணை வீடு எங்க இருக்குன்னு காட்டிட்டு வா."

"ம்... சரி ஐயா. வாங்க போலாம்."

"காருல ஏறு போகலாம்" என்றாள்.

"ஐயோ நான் pleasure ல எல்லாம் வர கூடாது. நீங்க இதுல வாங்க நான் நடந்து போறேன்."

"சரி நானும் நடந்தே வரேன்."

"ம் சரி வாங்க. அப்பா போயிட்டு வரேன்" என்று தகப்பனிடம் சொன்னாள்‌

"அம்மாடி பாத்து போமா."

"பாத்து தான் போவாங்க. பாக்காம எப்படி போக முடியும்? நீங்க வாங்க நம்ம போலாம். இந்த அப்பா எப்பயும் இப்படி தான் பேசும்" என்று சொன்ன முல்லை சவிதாவை அழைத்து கொண்டு பொடி நடையாக பண்ணை வீட்டுக்கு போனாள்.

முல்லை வழியெல்லாம் பேசி கொண்டே வர சவிதா அவளை ரசித்த படி வந்து இருக்க, பெண்களே ரசிக்கும் மனதிற்கு சொந்தமானவள் தான் நம் முல்லை பூ.

சில நிமிடங்கள் கடந்த நிலையில் பண்ணை வீடு இருக்கும் தெருவை வந்தடைந்தார்கள்.

"சரி நீங்க போங்க. நான் வீட்டுக்கு போறேன்."

"நீயும் உள்ள வா."

நான் வந்து என்ன பண்ண. நீங்க போங்க."

"அட வா" என்றாள்.

சவிதாவும் முல்லையும் பண்ணை வீட்டுக்குள் நுழைய,

"என்ன இங்க யாரையும் காணோம்?"

"மாடியில இருப்பாங்க போல. இருங்க நான் போய் பாக்குறேன்"

என்று சொன்ன முல்லை மாடிக்கு செல்ல, அங்கே ரத்த வெள்ளத்தில் தரையில் துடித்து கொண்டு இருந்தவனை பார்த்து அலறியப்படி முல்லை அவனை நோக்கி ஓடியனாள்.

"ஐயோ கதிர். கதிரு உனக்கு என்னாச்சு? கதிர் என்னை பாரு. கதிர் இங்க பாரு. கண்ணை திற கதிர்" என்று முல்லை அலறினாள்.

தொடரும்.
 
New member
Joined
May 2, 2025
Messages
21
😍சூப்பர் சிஸ்டர் ✨✨✨✨
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top