• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
128
💕முகவரி. 6️⃣

“கதிர் டேய் கதிர் நில்லு.” தூரத்தில் இருந்து கதிர் பெயரை சொல்லி அவன் மாமன் மகள் சவிதா இவனை அழைத்தாள்.
“விடுடி என்னை. இங்க என்ன நடந்து இருக்கு தெரியுமா?”
“டேய் எல்லாம் எனக்கு தெரியும். நீ முதல்ல வந்து காருல ஏறு.” என்று அவன் கையைப் பிடித்தாள்.
“ஏய் கையை விடு. என் முல்லைப்பூ எங்கனே தெரில. அவளை உன் அப்பனும் சித்தப்பனும் என்ன பண்ணி வச்சிருக்காங்கனு புரில. இன்னைக்கு அவனுங்கள நான் கொன்னா கூட என் ஆத்திரம் தீராது” என்று கோபத்தில் கத்தினான்.
“ம்... கொன்னுட்டு? சொல்லு கொன்னுட்டு என்ன பண்ண போற? நீ படிச்சவன் தானே ஆளையும் அவனையும் பாரு. டேய் முதல்ல வா” என்றாள்.
“எங்கடி அவன கூப்பிடுற? பாவம் அவனே முல்லை எங்கன்னு குழம்பிகிட்டு இருக்கான்.”
“உன் முல்லைபூவை என் அம்மாவும், சித்தியும் எங்க தோட்டத்து வீட்டுக்கு தான் இழுத்துகிட்டு போனாங்க. ஆனா அவங்க அரை மணி நேரம் கழிச்சு வெளிய வரும் போது அவங்க கூட முல்லைப்பூ இல்ல. நானும் கொஞ்ச நேரத்துல போய் அந்த வீட்ல முல்லைபூவை தேடினேன் ஆனா அவ அங்க இல்ல” என்றாள்.
“என்னடி சொல்ற அப்போ என் முல்லைப்பூ உங்க தோட்டத்து வீட்ல இருக்காளா?”
“99% அங்க தான் இருக்கணும். பட், நான் பாக்கும் போது இல்ல. எனக்கு ஒன்னும் புரில.”
“ஐயோ என் முல்லைப்பூக்கு என்னாச்சு?”
“நீ முதல்ல வந்து காருல ஏறு. நம்ம வீட்டு ஆளுங்க யாராவது பார்த்தா நம்மை கட்டி வச்சு தோளை உறிச்சிடுவாங்க. வா போலாம். டேய் மணி காருல ஏறு” என்றாள் அவனையும்.
மூவரும் சவிதாவின் தோட்டத்து வீட்டிக்கு செல்ல, அந்த வீட்டுக்குள்ளே நுழைந்து தேட, வீடு முழுதும் இருள் சூழ்ந்து இருந்தது. ஜன்னல்கள் எல்லாம் மூடப்பட்டு காற்று நுழையாதபடி தோற்றமாளித்தது.
“நான் வீடு முழுக்க தேடிட்டேன் கதிர். முல்லைப்பூ இங்க இல்ல. ஆனா என் அம்மாவும் சித்தியும் உன் அழகியை இங்க தான் அழைச்சுட்டு வந்தாங்க.”
“மணி உன்கிட்ட லைட்டர் இருக்குல்ல. அதைக் கொடு” என்று கதிர் கேட்டான்.
சிகரெட் பற்ற வைக்க பயன்படுத்தும் லைட்டர் கொண்டு வெளிச்சத்தை உண்டாக்கியவன், வீட்டின் நான்கு பக்கமும் தன்னவளை தேட. அவள் எங்கு தேடியும் கிடைத்த பாடில்லை.
“என்ன மச்சான் இது? சிஸ்டர் இங்க இல்லையே?”
“எனக்கும் ஒன்னும் புரியலடா. முல்லை முல்லை என்று கத்தினான்.
“கதிர் ஒரு வேளை பின்பக்கம் கிணத்துல...” என்று நிறுத்தினாள்.
“என்னடி சொல்ற?”
“வீட்ல இல்லைனா அங்க தானே இருக்கணும்.”
இருடி நான் போய்ப் பாக்குறேன்” என்று ஓட,
“மச்சான் மாச்சான் ஒரு நிமிடம் நில்லுடா. சவீ அங்க பாரு அது என்ன அவ்வளவு பெரிய பானை?”
“டேய் அது பட்டயம் நெல்லு எல்லாம் கொட்டி வைக்கிறது.”
“மச்சான் எனக்கு என்னமோ உன் முல்லைப்பூ அங்க இருப்பாங்கன்னு தான் தோணுது.”
“ஆமா கதிர். மணி சொல்லுறது சரி. வா போய் பாப்போம்.”
“டேய் பாத்துடா.” மணி பதற,
“பாத்து கதிர் அது ரொம்ப deep டா.”
“முல்லை, முல்ல...” என்று சத்தமாக அழைத்தான். அதில் எக்கோ அடிக்க, திரும்பவும், “முல்லை” என்றான்.
“என்ன மச்சான்? உள்ள இருக்காங்களா?”
“வெளிச்சம் இல்லடா.”
“டேய் இந்தா இந்த தீக்குச்சி புடிச்சு பாரு.”
“டேய் டேய் என் முல்ல உள்ள தான் மயக்கத்துல இருக்காடா.”
“மாமா யாரோ வரும் சத்தம் கேக்குது” என்றாள் சவீ.
“ஏய் நீங்க போய் மறைஞ்சிக்கொங்க. நான் இங்க பட்டயம் பின்னாடி ஒளிஞ்சிக்கிறேன்.”
மணி சவி இருவரும் ஒரு அறையில் ஒழிந்து கொள்ள, கதிர் பட்டயம் பின்னாடி நின்று இருக்க. இருவர், கதிர் இருப்பது தெரியாமல் முல்லை இருக்கும் பட்டயம் அருகில் வந்தவர்கள்
“டேய் இப்ப என்ன பண்ணனும்.” என ஒருவன் கேட்க,
இன்னொருவனோ, “நான் உள்ள போய் அந்த கணேசன் மவள தூக்குறேன் கண்டிப்பா இந்நேரத்துக்கு அவ போய் சேந்துருப்பா. நான் மேல வந்ததும் அவள இதே தோட்டத்துல புதைச்சிடுவோம்
“ம் சரி இறங்கு.”
ஒருவன் பட்டயத்துக்குள் இறங்கி முல்லைபூவை மேலே தூக்க, உயிருள்ள ஜடமாக இருந்த கதிரின் கண்ணனுக்குத் தன் முல்லைபூவை அந்த நிலைமையில் பார்த்ததும், கண்கள் கலங்கி கோவம் தலைக்கு ஏறிய நிலையில், சட்டென்று அந்த இருவரின் முன்பு சென்று நின்றவனை பார்த்து அவர்கள் இருவரும் செய்வதது அறியாமல் விழித்தனர்.
“முல்லை இங்க பாரு. உனக்கு என்னாச்சு?” என்று பதறினான் கதிர்.
“சின்ன ஐயா” என்றான் ஒருவன்.
“டேய் ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து ஓடிடுங்க. இல்ல” என விரல் நீட்டி மிரட்டினான்.
“மச்சான் என்னடா ஆச்சு?” மணி கேட்க,
“டேய் முல்லைடா. இவளுக்கு என்னாச்சு தெரியலைடா. முல்ல முல்ல இங்க பாரு” என்று கன்னம் தட்டினான்.
“மாமா இவங்க மயங்கிட்டாங்க போல. நீ வா நம்ம காருல இவங்கள hospital கொண்டு போலாம்.” என்றாள் சவீ.
“இல்ல நீங்க இவளை தூக்கிட்டு போங்க. நான் என் முல்லைப்பூவை இந்த நிலைக்கு கொண்டு வந்தவங்கள போய்க் கொன்னுட்டு வரேன்.”
“மச்சான் நீ என்ன மாங்கா மடையன் மாதிரி பேசுற. இப்ப நீ உன் பங்களாகுள்ள போனா வெளியே வர முடியாது. ஒழுங்கா வா நம்ம இந்த கிராமத்தை விட்டே போயிடலாம்.”
“ஆமா மாமா. மணி சொல்றது தான் சரி. நீ வா நம்ம சென்னைக்கே போயிடலாம். முதல்ல பக்கத்து ஊருக்கு போய் முல்லைக்கு first aid தரணும். வா மாமா போலாம்.”
“முல்லை! ஏய் என்னடா ஏன் இவ முடி எல்லாம் இப்படி இருக்கு?”
“கதிர் இவ உயிர் பிழைத்ததே பெருசு. நீ கூந்தல் பத்தி பேசுற. ஒழுங்கா காருல வந்து ஏறு சொல்லிட்டேன். கிராமத்துக்கு கூட்டிட்டு வந்து எமலோகம் அனுப்ப பாக்குற போல. வாடா முதல்ல.”
“மாமா நான் கார் எடுக்குறேன் வா போலாம்.”
கதிர் முல்லையை அவன் கரங்களில் ஏந்தியவன், அவளை காரில் ஏற்றி தன் மடி மீது படுக்க வைத்துக்கொள்ள, சவி காரை எடுக்க, மணி அவள் அருகில் அமர்ந்தான்.
“டேய் மச்சான் அங்க பாருடா. உங்க ஆளுங்க எல்லாம நெருப்பு பந்ததோடு நம்ம நோக்கிதான் வராங்க.”
“சவீ சீக்கிரம் காரை எடு.”
“வண்டி ஸ்டார்ட் ஆகலைடா.” என்றவளுக்கும் பயம் அதிகம்.
“அடிப்பாவி சவி. ஒரு சாவி போட தெரிதா உனக்கு. இதுல வேற உன் முகரைக்கு தங்க சாவி போட்டானா ஒருவன். போடி அப்படி.” என்று அவளை நகரச்சொல்லி மணி காரை எடுத்தான்.
தூரத்தில் கதிரின் சொந்தம் முழுதும் கையில் தீப்பந்தம், கத்தி, அருவா என்று பல ஆயுததோடு இவர்களை நெருங்க, மணி காரை பக்கத்து ஊரை நோக்கி விரட்டினான்.
“மணி சீக்கிரம் போடா. இவ பேச்சு மூச்சு இல்லாம இருக்கா. அதுவே பயத்தைக் கொடுக்குது. முல்ல இங்க பாரு. சவி அந்த தண்ணி பாட்டிலை தா” என்று வாங்கிய கதிர் முல்லை முகத்தில் தண்ணியை தெளிக்க, அவள் உடலில் எந்த ஒரு அசைவும் இல்லாமல் இருப்பதை பார்த்து கதிர் மேலும் பயந்தவன் அவளை கட்டி பிடித்து அழுதான்.
“உன் வாழ்க்கைல நான் வராமல் இருந்திருந்தா ஒருவேளை நீ நல்லா இருந்திருப்ப. இப்ப பாரு என்னால, நீ உன் அப்பாவை இழந்து, உன் நிம்மதியை இழந்து, ஐயோ எல்லாம் என்னால தான்.” என்று அழுதான்.
“மாமா அழாத மாமா. உன் முல்லைப்பூக்கு ஒன்னும் ஆகாது.”
“டேய் மச்சான் இந்த ஹாஸ்பிடல் தானேடா?” என மணி கேட்க,
“ம்... ஆமாடா. சவி நீ கதவைத் திற நான் முல்லையை தூக்கிட்டு வரேன்.”
சவி கார் கதவை திறக்க, கதிர் முல்லையை மருத்துவமனைக்குள் தூக்கி செல்ல, அவனை தொடர்ந்து மணியும் சவியும் சென்றனர்.
“டாக்டர் டாக்டர்.” என்று கதிர் கத்த,
“சார் சார் இருங்க. இவங்களுக்கு என்னாச்சு?” என்றார் செவிலி.
“ப்ளீஸ் சிஸ்டர் எமர்ஜென்சி. சீக்கிரம் பாருங்க.”
அங்கு வந்த மருத்துவர், “என்னாச்சு இவங்களுக்கு? ஏன் இவங்க இப்படி இருக்காங்க?”
“நீங்க தானே டாக்டர். நீங்க தான் பாக்கணும்.”
மருத்துவரோ, “இவங்கள பார்த்தா, இது வேற ஏதோ கலவரத்துல அடிபட்டு இருக்குற மாதிரி இருக்கே. எங்க ஹாஸ்பிடல்கு எதாவது பிரச்சனை வர போகுது” என்றார்.
“டாக்டர் நானே வக்கீல் தான். என்ன ப்ராப்ளம் வந்தாலும் நான் பாத்துக்கிறேன். ப்ளீஸ் டாக்டர். என் முல்லைபூவை காப்பாத்துங்க.”
 
Joined
Feb 6, 2025
Messages
128
“சரிங்க சார். நர்ஸ் எமெர்ஜென்சி வார்ட் ரெடி பண்ணி, அட்மிட் பண்ணுங்க.”
கதிர், முல்லையை எமெர்ஜென்சி வார்டில் சேர்த்ததும், அவளுக்கு முதலுதவி நடந்து கொண்டிருக்க, சில மணி நேரம் கடந்த நிலையில் டாக்டர் வெளியே வந்ததார்.
“டாக்டர் என்னாச்சு என் முல்லைக்கு?” பதற்றம் குறையாது கேட்டான்.
“அவங்க ரொம்ப பயந்திருக்காங்க. அண்ட் உடம்புல ரத்த காயம் வேற அங்கங்க இருக்கு. அதனால சிகிச்சை தந்துருக்கோம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
“டாக்டர் வேற ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே?”
“அவங்க கண் விழிக்கட்டும். அப்புறம் பேசிப்போம்.”
“மச்சான் நீ உக்காருடா. நான் போய் உனக்கு தண்ணி பாட்டில் வாங்கிட்டு வரேன்” என்று மணி கிளம்ப, “டேய் எனக்கும்” என்றாள் சவீ.
“என்ன சவி தம்மு வேணுமா?”
“கிண்டலடிச்சது போதும் லூசு.”
“அதானே நீ சரக்குக்கூட தானே தம்மு அடிப்ப.”
“டேய் புண்ணாக்கு, எனக்கு கூட தண்ணி வேணும்னு சொன்னேன்.”
“சரி கத்தாத. வாங்கிட்டு வரேன் இரு.” மணி மருத்துவமனையில் இருந்து கடைக்கு செல்ல, கதிர் கண்கள் கலங்கிய நிலையில் ஒரு இருக்கையில் அமர்ந்து இருந்தான்.
“மாமா அழாதடா உன் ஆளுக்கு ஒன்னும் ஆகாது. “ஐயோ மாமா அங்க பாரு நம்ம ஊரு ஆளுங்க. வா மாமா போய் ஒளிஞ்சுக்கலாம்.”
“நம்ம ஏன் ஒழியனும்? இரு வரேன்.”
“ஐயோ சொல்றத கேளு. இப்ப கோவப்பட எல்லாம் நேரம் இல்ல. வா முதல்ல இங்க இருந்து கிளம்பலாம்.”
“ஏய் என் முல்லைபூவை விட்டுட்டு எங்க போக சொல்ற?”
“அவ அங்கதானே இருக்கா. நீ வா நம்ம அந்த பக்கம் போய் மறைஞ்சிக்கலாம்.”
“நம்ம என்ன தப்பு பண்ணோம்” என்றான் திரும்பவும்.
“டேய் லூசு. இப்ப நம்ம இந்த ஊரை விட்டு போகணும்னா அதுக்கு ஒரே வழி நம்ம இவங்க கண்ணுல படக்கூடாது புரியுதா. வா போலாம்.”
கதிர், சவிதா இருவரும் அவர்களின் ஊர் ஆட்கள் கண்ணில்படாமல் ஒளிந்து கொள்ள, இவர்களை தேடி வந்த சிலரில் ஒருவன், “என்ன இங்க யாரும் இல்ல போல” என்றான்.
“பேசாம வைத்தியம் பாக்குற அறைக்குள்ள போய் பாப்போம் வாங்க” என்றான் இன்னொருவன்.
“டேய் அங்க பாரு சின்ன ஐயாவோட நண்பன்” என்று கைநீட்ட,
“அட பாவிங்களா தண்ணி வாங்கிட்டு வரதுக்குள்ள எனக்கு பால் ஊத்த ஏற்பாடு பண்ணிட்டிங்களா?” என்று அலறினான் மணி.
“டேய் பிடிடா அவனை.”
இங்க பாருங்க சார். ஓடிப் பிடிச்சு விளையாட எல்லாம் எனக்கு தெம்பு இல்ல. எதுவா இருந்தாலும் இப்படியே பேசிக்கலாம் சொல்லுங்க.”
“கணேஷன் பொண்ணு எங்கடா” எனக் கேட்டான் ஒருவன்.
“அத நீங்க கணேஷன்கிட்ட போய் கேளுங்க.” மணி மாசாக பதிலளிக்க,
“டேய் பேசாம இவன நம்ம கிராமத்துக்கு தூக்கிட்டு போயிடலாம். அப்போ தான் சின்ன ஐயா அங்க வருவாரு.”
“அடேய் நான் செத்தா கூட அவன் வரமாட்டான். எனக்கு அவ்வளவு சீன் எல்லாம் இல்லடா.”
“அப்போ எங்க சின்ன ஐயா எங்கன்னு சொல்லு?”
“அவன் முல்லையை கூட்டிகிட்டு எப்பவோ உங்க கிராமத்துக்கு போயிட்டான். இது தெரியாம நீங்க இங்க தேடுறீங்க.” என்றான் மணி.
“கிராமத்துக்கா? எதுக்கு?”
“என்னைக் கேட்டா எனக்கு என்ன தெரியும்.”
“அப்ப நீ இங்க என்ன பண்ற?
“தண்ணி வாங்க வந்தேன்.”
“தண்ணி வாங்க மருத்துவமனைக்கு வருவியா? நம்புற மாதிரி சொல்லு.”
“டேய் முட்டாள் தண்ணின்னா சாராயம் வாங்க வந்தேன்.” அவர்கள் முறைக்கவும், “என்ன முறைக்கிற? இங்க பாருங்க நீங்க எல்லாம் உங்க கிராமத்துக்கு போய்ப்பாருங்க. கதிரும் முல்லையும் அங்க தான் போய் இருக்காங்க.”
“உன்ன எப்படி நம்புறது?”
“அப்போ கதிரு சொன்னா நம்புவியா. டேய் கதிரு இவன்கிட்ட வந்து இவன் நம்புற மாதிரி சொல்லுடா” என்று கத்தி அழைத்தான்.
“அட லூசு பயலே” என்று சவீ தலையில் கை வைக்க,
“இவன போய் நம்புனோம் பாரு” என்று கதிர்புறம் கைநீட்டினான்.
“டேய் சின்ன ஐயா இங்கதான்டா இருக்காரு. ஐயா என்ன காரியம் பண்ணிட்டிங்க. வாங்க நம்ம ஊருக்கு போலாம். கணேஷன் மக எங்க இருக்கா?”
“இங்க பாருங்க ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து ஓடிடுங்க சொல்லிட்டேன். இல்ல நான் என்ன செய்வேன் தெரியாது.”
“ஐயா உங்க மாமாங்க உங்கள எங்க இருந்தாலும் கையோட அழைச்சிட்டு வர சொன்னாங்க. வாங்க போலாம்.”
“டேய் கையை விடு. எடுடா கையை” என்று கையை உதற,
“மச்சான் அங்க பாருடா உன் மாமாங்க வந்துட்டாங்க” என்றான் மணி.
“மாப்பிள்ள என்ன காரியம் பண்ணிட்ட” என்று ராஜசேகரன் வர,
“என்ன, நம்ம குடும்ப மானம், கௌரவம், ஜாதிப் பெருமை இதை எல்லாம் தோண்டி புதைக்க முடிவு பண்ணிட்டியா” என்று வந்தார் தனசேகரன்.
கதிருக்கு ஆத்திரம் வர கோவமாக இவர்கள் அருகில் சென்றவன், பளார் என்று தனா கன்னத்தில் ஒரு அரைவிட்டான். அதை பார்த்து ராஜா கதிரிடம் ஏதோ சொல்ல வர, சற்றும் தாமதிக்காமல் கதிர் ராஜா கன்னத்திலும் ஒரு அரைவிட்டு, “நீங்கெல்லாம் என்ன ஜென்மம்டா” என்றான்.
“மாப்பிள்ள என்ன இப்படிப் பேசுறீங்க?” ராஜசேகரன் கேட்க,
“ஏய் வாயை மூடு” என்று கதிர் சத்தம் போட,
“உனக்கு என்ன தைரியம் இருந்தா என் அண்ணன் மேல கை வைப்ப?”
“ஆமா உங்க மேல எல்லாம் கைவைக்க கூடாது. காலை தான் வைக்கணும்.”
“டேய்” என்று தனசேகரன் எகிறியபடி வர,
“வாயை மூடு. இந்த கைதானே என் முல்லைப்பூவை அடிச்சது.” கதிர் தனசேகர் கையை முறுக்க,
“ஐயோ ஐயோ வலிக்குது” என்று அலறினார்.
சத்தம் கேட்டு வந்த டாக்டர்,”ஹலோ இங்க என்ன நடக்குது? இங்க சண்டை எல்லாம் போடக்கூடாது” என்றார்.
அங்கு வந்த செவிலி, “அந்த பொண்ணு கண் முழிச்சிட்டாங்க. ஆனா பயங்கரமா அழுவுறாங்க. நாங்க யாரு அவங்ககிட்ட போனாலும் அவங்க ரொம்ப பயப்படுறாங்க.” என்றாள்.
“என்ன, என் முல்ல கண் விழிசிட்டாளா” என்று கதிர் முல்லை இருக்கும் அறைக்குள் நுழைய, முல்லை தேம்பித் தேம்பி அழுதுக்கொண்டு இருக்க.. கதிர் அவள் அருகில் சென்றவன் அவளை கட்டிப்பிடித்து கண்கள் கலங்கியபடி, முல்லை உனக்கு ஒன்னும் ஆகலடி. அழாத.”
“கதிரு அப்பா. அப்பாவ எரிச்சிட்டாங்க கதிரு. அப்பா நெருப்புல எரிஞ்சி...” சொல்ல வார்த்தையில்லாது அழ,
“அழாதடி.”
“அவர நான் கடைசியா பாக்ககூட இல்ல கதிர்.”
“அழாத முல்ல.”
இனிமே அப்பா வர மாட்டாரா? சொல்லு கதிரு. என் அப்பா வர மாட்டாரா?”
“இனி உனக்கு அம்மா அப்பா எல்லாமே நான் தான்டி. அழாத ப்ளீஸ்.”
“ஆ... வயிறு வலிக்குது.”
“முல்லை என்னடி ஆச்சு?”
“ஹ்ம் ஹ்ம்.. வயிறு ரொம்ப வலிக்குது கதிரு.” என்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு அழுதாள்.
“சார் அவங்கள ஸ்டைன் பண்ணா விடாதீங்க. அவங்க வயத்துல யாரோ பலமா அடிச்சு இருக்காங்க.”
“யாரு முல்லை யாரு உன்ன அடிச்சது?” என்று கோவமாகக் கேட்டான்.
“உன் அத்த தான் என் முடியை எல்லாம் வெட்டி, என் கன்னத்துல அடிச்சி என்னை வயித்துல மிதிச்சு... ஹ்ம்... ஹ்ம்...”
“அழாத முல்ல.”
“கதிரு அவங்க என்னை ரொம்ப அசிங்கமா பேசுனாங்க. அப்பாவை கூட திட்டுனாங்க. எனக்கு பயமா இருக்கு. என்னை பட்டயத்துக்குள்ள இறங்க சொல்லி வேற அடிச்சாங்க. அது எவ்வளவு இருட்டா இருந்துச்சு தெரியுமா.”
“அழாத முல்ல.”
“நான்... நான்... நான் செத்துடுவேன்னு நினைச்சேன்.”
“ஏய் என்ன பேச்சு பேசுற. உனக்கு ஒன்னும் ஆகாது. நான் இருக்கேன்.”
“டேய் கதிரு! உனக்கு மானம் இல்ல. நம்ம ஜாதி அந்தஸ்து என்ன, நீ என்னடா இவகிட்ட உக்காந்து காதல் வசனம் வாசிச்சுகிட்டு இருக்க. அடியே நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா இரு உன்ன...”
“ஐயோ கதிரு” என்று அலறினாள் முல்லை.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top