Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 128
- Thread Author
- #1
அத்தியாயம் - 8
மாயனின் பதிலில் வர்மன் மேலும் குழம்பிப் போனான்.
"என்ன மாயா சொல்லுற காதலா!? நானா!? அதுவும் நம்ம மகதியையா!?" என்று புரியாமல் கேட்டான் வர்மன்.
"ஆமா வர்மா! நீ தான் காரணம். நீ மட்டும் இல்ல நானும் தான் காரணம்" என்று மாயன் சொல்ல,"அடேய்... என்னடா உளறுற!"என்று வர்மன் குழப்பத்துடன் கேட்டான்.
தன் மகனின் குழப்பத்தைக் கண்டு ராஜனுக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியாமல் போனது.
"வர்மா... மாயன் சொல்லுறத பொறுமையா கேளு, எனக்குமே இப்போ நடக்குறதை எல்லாம் பார்த்தா மகதியே இந்த வீட்டுக்கு மருமகளாக வரணும்னு ஆசையா இருக்கு" என்ற தன் தந்தையின் வார்த்தையில் உள்ள அர்த்தம் புரியாமல் மேலும் மேலும் வர்மன் குழம்பி போனான்.
"டேய் மாயா...இங்க என்ன டா நடக்குது! நீ பேசுறதே எனக்குப் புரியல! இதுல அப்பா வேற என்னடா மகதியை மருமகள் அது இதுன்னு பேசுறாரு" என்று வர்மன் சொல்லும் போதே அருணை தூங்க வைத்த மகதி சரியாக இவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்து வந்தாள்.
மகதியை பார்த்ததும் அப்படியே இவர்கள் பேச்சைத் திசை மாற்றினான் மாயன்.
"என்ன பாப்பா! அருண் தூங்கிட்டானா"என மாயன் கேக்க,"தூங்கிட்டான் அண்ணா. தம்பிக்கு மருந்து மாத்திரை எல்லாம் எப்போ தரணும்?"என்ற மகதியின் பார்வை வர்மன் மீது கோவமாகப் படிந்தது.
"அதெல்லாம் நான் கொடுத்துக்குறேன், உனக்கு ஏன் சிர்மம்!" என்று வர்மன் கேக்க,
"அண்ணா... குழந்தையைப் பார்த்துக்க தான் நான் மூணு மாசம் இங்க தங்கிக்கொள்ள முடிவு பண்ணி இருக்கேன், அதனால அருணை பற்றி இனி இவருக்கு எந்தக் கவலையும் வேணான்னு சொல்லுங்க"என்ற மகதி, மேசைமேல் இருந்த பையை எடுத்துக்கொண்டு மீண்டும் வர்மனின் அறைக்குள் நுழைந்தாள்.
மகதி தன்னை எதிர்த்துப் பேசுவதை கூடப் பெரிதாக எடுத்துகொள்ளாத வர்மனுக்கு அவளின் அருவருப்பான பார்வைக்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் மண்டை காய்ந்து போனான்.
சிறுவன் அருணுக்காக மட்டுமே வர்மனின் இல்லத்தில் தங்க சம்மதம் தெரிவித்த மகதிக்கு வர்மன் மீது அவள் கொண்ட காதலை இனியும் தொடர விருப்பம் இல்லை என்றாலும், அவனை மறக்க முடியாமல் வர்மன் மீது வெறுப்பை காட்டியப்படி தான் இருந்தாள்.
மகதி அங்கிருந்து சென்றதும், வர்மன் கோவமாக மாயனின் சட்டை காலரை பற்றியவன்,"இங்க பாருடா! ஒழுங்கு மரியாதையா உன் தங்கச்சி என் மேல கோவப்பட என்ன காரணமுன்னு சொல்லிடு" என்று கர்ஜித்தவனை பார்த்து ராஜன் ஒரு நொடி பயந்தே போனார்.
வர்மனின் சந்தோசம், அழுகை, சிரிப்பு என்று தன் நண்பனின் பல பரிமாணங்களைப் பார்த்த மாயனுக்கு வர்மனின் செய்கையைப் பார்த்துச் சிரிப்பு தான் வந்தது.
"டேய்... நான் கேட்டுகிட்டே இருக்கேன், நீ என்னடா சிரிக்கிற" என்ற வர்மன் மாயனை அடிக்கக் கை ஓங்கியவனின் கரங்களில் தன் கையில் இருந்த சின்னத் துண்டு சீட்டைக் கொடுத்தான் மாயன்.
மகதியின் வருகைக்குப் பின்னே மாயனின் நடவடிக்கையில் எழுந்த மாற்றத்தில் வர்மனுக்கு முன்னதாகவே கோவம் இருந்த நிலையில், இப்போது வர்மன் கேக்கும் கேள்விக்குப் பதிலைச் சொல்லாமல் அவன் கையில் காகிதத்தைக் கொடுத்ததும் கோவத்துடன் வர்மன் அந்தத் தாளைப் பிரித்துப் பார்த்தான்.
வெள்ளை காகிதத்தில் 'என்றும் அன்புடன் உங்கள் அருள்மொழி வர்மன்' என்ற கையப்பத்தை பார்த்து முகம் மாறினான் வர்மன்.
"மாயா! இந்தக் கையெழுத்து!" என்ற வர்மனின் கேள்விக்கு, "உன்னோட கையெழுத்து தான்" என்ற மாயனின் இதழ்களில் புன்னகை ஒட்டி இருந்தது.
"அது எனக்குத் தெரியும் டா, ஆனா இந்த மாதிரி கையெழுத்து எல்லாம் இப்போ நான் போடுறது இல்லையே" என்ற வர்மனை பார்த்து, "பத்து வருஷத்துக்கு முன்னதாக உன் கையெழுத்து இது தானே வர்மா" என்று சொன்னார் ராஜன்.
"ஐயோ அப்பா...நீங்க ரெண்டு பேரும் என்னை ரொம்ப குழப்பி விடுறிங்க, சரி இது என் கையெழுத்து தான், ஆனா இதுக்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்மந்தம்?" என்று வர்மன் கேக்க,
"உன் கேள்விக்கு உண்டான பதிலே இந்தக் கையெழுத்துல இருந்து தான் வர்மா ஆரம்பிச்சது" என்றான் மாயன்.
இந்த நொடிவரை மாயனின் பேச்சில் உள்ள மர்மத்தைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்த வர்மனை கைப்பிடித்துத் தன் காருக்கு அழைத்துச் சென்றான் மாயன்.
"டேய் என்னடா! என்னை எங்க அழைச்சிட்டு போற?" என்ற வர்மனின் கேள்வி முடியும் முன்னே, டேஷ் போர்டிலிருந்து மகதியின் கைக்குறிப்பு புத்தகத்தை எடுத்து வர்மனின் கையில் திணித்த மாயனை கேள்வியாகப் பார்த்த வர்மன், "என்ன டைரி இது?" என்று வினாவினான்.
"உன் கேள்விக்கு உண்டான எல்லா பதிலும் இந்த டைரில தான் இருக்கு, போ! போய்க் காருக்குள்ள உக்காந்து படிச்சு பாரு" என்ற மாயன் தன் நண்பன் கையில் டைரியை கொடுத்தபின்னே வீட்டுக்குள் நுழைந்தான்.
காரின் உள்ளே அமர்ந்த வர்மன்,"என்ன டைரி இது!?" என்று எண்ணியவாரே கைக்குறிப்பு புத்தகத்தின் முதல் பக்கத்தைத் திருப்பியவனுக்கு வர்மனின் முகம் ஓவியமாக அவன் கண்ணில் தெண்பட்டது.
காகிதத்தில் சிரித்த வண்ணமாக இடம் பெற்று இருந்த தன் முகத்தை வர்மன் வருடிப் பார்த்தவனுக்கு 'மன்னவனைத் தேடும் மகரந்தம்' என்ற தலைப்பில் விழிகள் ஆச்சிரியத்தில் மிளிர்ந்தது.
'தினமும் பார்க்க முடியாத காதல் தான் நம் காதல்,
ஆனாலும் இந்த ஓவிய சிரிப்போடு என் உயிர் பிணைந்திருக்கிறது.
எப்போ வர்மா நாம் சந்திப்போம்!?' என்ற மகதியின் எழுத்துக்கள் வர்மனுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
அதே குழப்பத்துடன் வர்மன் அடுத்த பக்கத்தைத் திருப்பியவனுக்கு திடீரென அவன் முகத்தில் பதற்றமும், வியப்பும் தெரிந்தன.
வர்மனின் புகைப்படம் அருகே
'என் மன்னவன்' என்று மகதி எழுதி இருந்ததை வாசித்தவனுக்கு,
"மகதி ஏன் என் பெயரை எழுதணும்?" என்ற கேள்வி அவன் உள்ளத்தில் மிதந்தது.
கேள்விகளைச் சுமந்த வண்ணமாகவே மேலும் அந்தப் புத்தகத்தைப் புரட்டியவனுக்கு இதுநாள் வரை வர்மன் செய்தி தாள்களில் பேட்டி கொடுத்த புகைப்படங்கள்,
சினிமா துறையில் வர்மனுக்கு கிடைத்த அங்கீகார விருதுகள் அடங்கிய புகைப்படம், ஏன்! கடந்த பத்து வருடமாக வர்மனின் பிறந்தநாளான்று அவனுக்காக மகதி வாங்கி வைத்த இதய வடிவை சுமந்து இருக்கும் வாழ்த்து அட்டைகள் என்று பல வகையான விஷயங்களைப் பார்த்து வர்மனுக்கு கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.
"வர்மா... இன்னைக்கு எங்க ஸ்கூல்ல ஒரு பையன் என்னைக் காதலிக்கிறேன்னு சொன்னான், ஆனா நான் என் வர்மனுக்காகக் காத்து இருக்கேன்னு சொல்லிட்டேன்" என்று மகதி அவள் கல்லூரி காலகட்டத்தில் எழுதி இருந்த எழுத்தை வாசித்தான் வர்மன்.
"வர்மா...இன்னைக்கு உங்க பிறந்தநாள்! நான் உங்களுக்காகக் கோவிலுக்குப் போய் உங்க பேர்ல அர்ச்சனை பண்ணேன், ஆனா பாருங்க என்னால ஒரு போன் கூடப் பண்ணி உங்களுக்கு வாழ்த்து சொல்ல முடியல" என்ற மகதியின் கையெழுத்தில் அவள் மனதில் உள்ள ஏக்கத்தை எழுத்தின் வடிவே புரிந்துகொண்டான் வர்மன்.
"வர்மா... இன்னைக்கு நீங்க நடன இயக்குனரா பணியாற்றிய படத்தைப் பிரஸ்ட் ஷோவே போய்ப் பார்த்தேன்,
உண்மையைச் சொல்லனும்னா இப்போ எல்லாம் சில பேரோட நடனமே ஆபாச படம் பார்க்குறது போலத் தான் இருக்கு,
குழந்தைங்க பக்கத்துல உக்காந்து ஒரு பாட்டைக் கூடப் பார்க்க முடியல,
ஆனா என் வர்மன் நீங்க நடனம் அமைக்கிற எல்லா பாடலிலும் பெண்களை ரொம்ப அழகான நடனத்தை ஆட வைக்கிறிங்க,
ரொம்ப கண்ணியமாவே இருக்கு உங்க டான்ஸ் ஸ்டெப்ஸ் எல்லாம்" என்று ஒவ்வொன்றையும் ஆழமாகக் கவனித்து ஆத்மார்த்தமாகப் பாராட்டி எழுதி இருந்தாள் மகதி.
வர்மன் தன்னை மறந்து மகதியின் கைக்குறிப்பு புத்தகத்தை வாசித்துக் கொண்டு இருந்தவனுக்கு மகதியின் மனதில் எப்படி வர்மன் மீது காதல் எழுந்தது என்ற கேள்வியை மறந்து! மகதி எப்படியெல்லாம் தன்னை நேசித்து இருக்கிறாள் என்ற ஆச்சிரியம் தான் எழுந்தது.
தைத்திருநாள், தீப திருநாள், கிறிஸ்துமஸ், ரம்ஜான், காதலர் தினம், நண்பர்கள் தினம், ஏன் அன்னையர் தினம் தந்தையர் தினத்தின்போது கூடக் கடந்த பத்து வருடமாகத் தேதியையும் வருடத்தையும் குறிப்பிட்டு எழுத்தின் வடிவிலேயே வர்மனுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தாள் மகதி.
"வர்மா! உங்களைப் பற்றி டிவில ரூமர்ஸ் வந்துகிட்டே இருக்கு, நான் எதையும் நம்பவே இல்லை, ஏன்னா என் வர்மன் எனக்கு மட்டும் தான்" என்று மகதி வலைத்தளங்களில் வந்த செய்திகளைப் பற்றியும் எழுதி இருந்தாள்.
மகதியின் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் அவள் காதலை வர்மனின் கண் முன்னே க்கொண்டு வந்து நிறுத்தியது.
தன்னை மீறி வர்மன் மகதியின் எழுத்துக்களை வாசித்துப் பெருமிதமாகச் சிரித்துக்கொண்டவனின் இதழ்களில் புன்னகை வாடாத மலராகவே மலர்ந்து இருந்தது.
குறுநகையை உதட்டில் ஏந்திய வண்ணமாகவே அடுத்த பக்கத்தைத் திருப்பியவனுக்கு,"வர்மா... இன்னைக்கு மாரியம்மா கோவில்ல உங்களுக்காகத் தீ மிதித்தேன் வர்மா,
கண்டிப்பா உங்களுக்குத் தான் இந்த முறை சிறந்த நடன இயக்குனருக்காக விருது கிடைக்கும்" என்று அவள் எழுதிய எழுத்துக்களை வாசித்த வர்மனின் விழிகளில் ஒரு துளி கண்ணீரும் கசிந்தது.
மாயனின் பதிலில் வர்மன் மேலும் குழம்பிப் போனான்.
"என்ன மாயா சொல்லுற காதலா!? நானா!? அதுவும் நம்ம மகதியையா!?" என்று புரியாமல் கேட்டான் வர்மன்.
"ஆமா வர்மா! நீ தான் காரணம். நீ மட்டும் இல்ல நானும் தான் காரணம்" என்று மாயன் சொல்ல,"அடேய்... என்னடா உளறுற!"என்று வர்மன் குழப்பத்துடன் கேட்டான்.
தன் மகனின் குழப்பத்தைக் கண்டு ராஜனுக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியாமல் போனது.
"வர்மா... மாயன் சொல்லுறத பொறுமையா கேளு, எனக்குமே இப்போ நடக்குறதை எல்லாம் பார்த்தா மகதியே இந்த வீட்டுக்கு மருமகளாக வரணும்னு ஆசையா இருக்கு" என்ற தன் தந்தையின் வார்த்தையில் உள்ள அர்த்தம் புரியாமல் மேலும் மேலும் வர்மன் குழம்பி போனான்.
"டேய் மாயா...இங்க என்ன டா நடக்குது! நீ பேசுறதே எனக்குப் புரியல! இதுல அப்பா வேற என்னடா மகதியை மருமகள் அது இதுன்னு பேசுறாரு" என்று வர்மன் சொல்லும் போதே அருணை தூங்க வைத்த மகதி சரியாக இவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்து வந்தாள்.
மகதியை பார்த்ததும் அப்படியே இவர்கள் பேச்சைத் திசை மாற்றினான் மாயன்.
"என்ன பாப்பா! அருண் தூங்கிட்டானா"என மாயன் கேக்க,"தூங்கிட்டான் அண்ணா. தம்பிக்கு மருந்து மாத்திரை எல்லாம் எப்போ தரணும்?"என்ற மகதியின் பார்வை வர்மன் மீது கோவமாகப் படிந்தது.
"அதெல்லாம் நான் கொடுத்துக்குறேன், உனக்கு ஏன் சிர்மம்!" என்று வர்மன் கேக்க,
"அண்ணா... குழந்தையைப் பார்த்துக்க தான் நான் மூணு மாசம் இங்க தங்கிக்கொள்ள முடிவு பண்ணி இருக்கேன், அதனால அருணை பற்றி இனி இவருக்கு எந்தக் கவலையும் வேணான்னு சொல்லுங்க"என்ற மகதி, மேசைமேல் இருந்த பையை எடுத்துக்கொண்டு மீண்டும் வர்மனின் அறைக்குள் நுழைந்தாள்.
மகதி தன்னை எதிர்த்துப் பேசுவதை கூடப் பெரிதாக எடுத்துகொள்ளாத வர்மனுக்கு அவளின் அருவருப்பான பார்வைக்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் மண்டை காய்ந்து போனான்.
சிறுவன் அருணுக்காக மட்டுமே வர்மனின் இல்லத்தில் தங்க சம்மதம் தெரிவித்த மகதிக்கு வர்மன் மீது அவள் கொண்ட காதலை இனியும் தொடர விருப்பம் இல்லை என்றாலும், அவனை மறக்க முடியாமல் வர்மன் மீது வெறுப்பை காட்டியப்படி தான் இருந்தாள்.
மகதி அங்கிருந்து சென்றதும், வர்மன் கோவமாக மாயனின் சட்டை காலரை பற்றியவன்,"இங்க பாருடா! ஒழுங்கு மரியாதையா உன் தங்கச்சி என் மேல கோவப்பட என்ன காரணமுன்னு சொல்லிடு" என்று கர்ஜித்தவனை பார்த்து ராஜன் ஒரு நொடி பயந்தே போனார்.
வர்மனின் சந்தோசம், அழுகை, சிரிப்பு என்று தன் நண்பனின் பல பரிமாணங்களைப் பார்த்த மாயனுக்கு வர்மனின் செய்கையைப் பார்த்துச் சிரிப்பு தான் வந்தது.
"டேய்... நான் கேட்டுகிட்டே இருக்கேன், நீ என்னடா சிரிக்கிற" என்ற வர்மன் மாயனை அடிக்கக் கை ஓங்கியவனின் கரங்களில் தன் கையில் இருந்த சின்னத் துண்டு சீட்டைக் கொடுத்தான் மாயன்.
மகதியின் வருகைக்குப் பின்னே மாயனின் நடவடிக்கையில் எழுந்த மாற்றத்தில் வர்மனுக்கு முன்னதாகவே கோவம் இருந்த நிலையில், இப்போது வர்மன் கேக்கும் கேள்விக்குப் பதிலைச் சொல்லாமல் அவன் கையில் காகிதத்தைக் கொடுத்ததும் கோவத்துடன் வர்மன் அந்தத் தாளைப் பிரித்துப் பார்த்தான்.
வெள்ளை காகிதத்தில் 'என்றும் அன்புடன் உங்கள் அருள்மொழி வர்மன்' என்ற கையப்பத்தை பார்த்து முகம் மாறினான் வர்மன்.
"மாயா! இந்தக் கையெழுத்து!" என்ற வர்மனின் கேள்விக்கு, "உன்னோட கையெழுத்து தான்" என்ற மாயனின் இதழ்களில் புன்னகை ஒட்டி இருந்தது.
"அது எனக்குத் தெரியும் டா, ஆனா இந்த மாதிரி கையெழுத்து எல்லாம் இப்போ நான் போடுறது இல்லையே" என்ற வர்மனை பார்த்து, "பத்து வருஷத்துக்கு முன்னதாக உன் கையெழுத்து இது தானே வர்மா" என்று சொன்னார் ராஜன்.
"ஐயோ அப்பா...நீங்க ரெண்டு பேரும் என்னை ரொம்ப குழப்பி விடுறிங்க, சரி இது என் கையெழுத்து தான், ஆனா இதுக்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்மந்தம்?" என்று வர்மன் கேக்க,
"உன் கேள்விக்கு உண்டான பதிலே இந்தக் கையெழுத்துல இருந்து தான் வர்மா ஆரம்பிச்சது" என்றான் மாயன்.
இந்த நொடிவரை மாயனின் பேச்சில் உள்ள மர்மத்தைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்த வர்மனை கைப்பிடித்துத் தன் காருக்கு அழைத்துச் சென்றான் மாயன்.
"டேய் என்னடா! என்னை எங்க அழைச்சிட்டு போற?" என்ற வர்மனின் கேள்வி முடியும் முன்னே, டேஷ் போர்டிலிருந்து மகதியின் கைக்குறிப்பு புத்தகத்தை எடுத்து வர்மனின் கையில் திணித்த மாயனை கேள்வியாகப் பார்த்த வர்மன், "என்ன டைரி இது?" என்று வினாவினான்.
"உன் கேள்விக்கு உண்டான எல்லா பதிலும் இந்த டைரில தான் இருக்கு, போ! போய்க் காருக்குள்ள உக்காந்து படிச்சு பாரு" என்ற மாயன் தன் நண்பன் கையில் டைரியை கொடுத்தபின்னே வீட்டுக்குள் நுழைந்தான்.
காரின் உள்ளே அமர்ந்த வர்மன்,"என்ன டைரி இது!?" என்று எண்ணியவாரே கைக்குறிப்பு புத்தகத்தின் முதல் பக்கத்தைத் திருப்பியவனுக்கு வர்மனின் முகம் ஓவியமாக அவன் கண்ணில் தெண்பட்டது.
காகிதத்தில் சிரித்த வண்ணமாக இடம் பெற்று இருந்த தன் முகத்தை வர்மன் வருடிப் பார்த்தவனுக்கு 'மன்னவனைத் தேடும் மகரந்தம்' என்ற தலைப்பில் விழிகள் ஆச்சிரியத்தில் மிளிர்ந்தது.
'தினமும் பார்க்க முடியாத காதல் தான் நம் காதல்,
ஆனாலும் இந்த ஓவிய சிரிப்போடு என் உயிர் பிணைந்திருக்கிறது.
எப்போ வர்மா நாம் சந்திப்போம்!?' என்ற மகதியின் எழுத்துக்கள் வர்மனுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
அதே குழப்பத்துடன் வர்மன் அடுத்த பக்கத்தைத் திருப்பியவனுக்கு திடீரென அவன் முகத்தில் பதற்றமும், வியப்பும் தெரிந்தன.
வர்மனின் புகைப்படம் அருகே
'என் மன்னவன்' என்று மகதி எழுதி இருந்ததை வாசித்தவனுக்கு,
"மகதி ஏன் என் பெயரை எழுதணும்?" என்ற கேள்வி அவன் உள்ளத்தில் மிதந்தது.
கேள்விகளைச் சுமந்த வண்ணமாகவே மேலும் அந்தப் புத்தகத்தைப் புரட்டியவனுக்கு இதுநாள் வரை வர்மன் செய்தி தாள்களில் பேட்டி கொடுத்த புகைப்படங்கள்,
சினிமா துறையில் வர்மனுக்கு கிடைத்த அங்கீகார விருதுகள் அடங்கிய புகைப்படம், ஏன்! கடந்த பத்து வருடமாக வர்மனின் பிறந்தநாளான்று அவனுக்காக மகதி வாங்கி வைத்த இதய வடிவை சுமந்து இருக்கும் வாழ்த்து அட்டைகள் என்று பல வகையான விஷயங்களைப் பார்த்து வர்மனுக்கு கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.
"வர்மா... இன்னைக்கு எங்க ஸ்கூல்ல ஒரு பையன் என்னைக் காதலிக்கிறேன்னு சொன்னான், ஆனா நான் என் வர்மனுக்காகக் காத்து இருக்கேன்னு சொல்லிட்டேன்" என்று மகதி அவள் கல்லூரி காலகட்டத்தில் எழுதி இருந்த எழுத்தை வாசித்தான் வர்மன்.
"வர்மா...இன்னைக்கு உங்க பிறந்தநாள்! நான் உங்களுக்காகக் கோவிலுக்குப் போய் உங்க பேர்ல அர்ச்சனை பண்ணேன், ஆனா பாருங்க என்னால ஒரு போன் கூடப் பண்ணி உங்களுக்கு வாழ்த்து சொல்ல முடியல" என்ற மகதியின் கையெழுத்தில் அவள் மனதில் உள்ள ஏக்கத்தை எழுத்தின் வடிவே புரிந்துகொண்டான் வர்மன்.
"வர்மா... இன்னைக்கு நீங்க நடன இயக்குனரா பணியாற்றிய படத்தைப் பிரஸ்ட் ஷோவே போய்ப் பார்த்தேன்,
உண்மையைச் சொல்லனும்னா இப்போ எல்லாம் சில பேரோட நடனமே ஆபாச படம் பார்க்குறது போலத் தான் இருக்கு,
குழந்தைங்க பக்கத்துல உக்காந்து ஒரு பாட்டைக் கூடப் பார்க்க முடியல,
ஆனா என் வர்மன் நீங்க நடனம் அமைக்கிற எல்லா பாடலிலும் பெண்களை ரொம்ப அழகான நடனத்தை ஆட வைக்கிறிங்க,
ரொம்ப கண்ணியமாவே இருக்கு உங்க டான்ஸ் ஸ்டெப்ஸ் எல்லாம்" என்று ஒவ்வொன்றையும் ஆழமாகக் கவனித்து ஆத்மார்த்தமாகப் பாராட்டி எழுதி இருந்தாள் மகதி.
வர்மன் தன்னை மறந்து மகதியின் கைக்குறிப்பு புத்தகத்தை வாசித்துக் கொண்டு இருந்தவனுக்கு மகதியின் மனதில் எப்படி வர்மன் மீது காதல் எழுந்தது என்ற கேள்வியை மறந்து! மகதி எப்படியெல்லாம் தன்னை நேசித்து இருக்கிறாள் என்ற ஆச்சிரியம் தான் எழுந்தது.
தைத்திருநாள், தீப திருநாள், கிறிஸ்துமஸ், ரம்ஜான், காதலர் தினம், நண்பர்கள் தினம், ஏன் அன்னையர் தினம் தந்தையர் தினத்தின்போது கூடக் கடந்த பத்து வருடமாகத் தேதியையும் வருடத்தையும் குறிப்பிட்டு எழுத்தின் வடிவிலேயே வர்மனுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தாள் மகதி.
"வர்மா! உங்களைப் பற்றி டிவில ரூமர்ஸ் வந்துகிட்டே இருக்கு, நான் எதையும் நம்பவே இல்லை, ஏன்னா என் வர்மன் எனக்கு மட்டும் தான்" என்று மகதி வலைத்தளங்களில் வந்த செய்திகளைப் பற்றியும் எழுதி இருந்தாள்.
மகதியின் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் அவள் காதலை வர்மனின் கண் முன்னே க்கொண்டு வந்து நிறுத்தியது.
தன்னை மீறி வர்மன் மகதியின் எழுத்துக்களை வாசித்துப் பெருமிதமாகச் சிரித்துக்கொண்டவனின் இதழ்களில் புன்னகை வாடாத மலராகவே மலர்ந்து இருந்தது.
குறுநகையை உதட்டில் ஏந்திய வண்ணமாகவே அடுத்த பக்கத்தைத் திருப்பியவனுக்கு,"வர்மா... இன்னைக்கு மாரியம்மா கோவில்ல உங்களுக்காகத் தீ மிதித்தேன் வர்மா,
கண்டிப்பா உங்களுக்குத் தான் இந்த முறை சிறந்த நடன இயக்குனருக்காக விருது கிடைக்கும்" என்று அவள் எழுதிய எழுத்துக்களை வாசித்த வர்மனின் விழிகளில் ஒரு துளி கண்ணீரும் கசிந்தது.