Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 387
- Thread Author
- #1
வனிச்சூர்:
இருவரும் திடலுக்கு வந்து சேர அங்கே தெரிந்தவர்கள் ஊர்க்காரர்கள் என்று கூட்டமாக இருந்தது.ஏன் யா நீ வெறும் போலீஸ் தானே இதுக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டமென்றாள்.
வாடி என்றவன் ஒரு கையால் வேஷ்டியின் நுனியை பிடித்துக் கொண்டு முன்னே நடந்து சென்றான்.
ஆண்களோ அய்யா செழியா என்று அணைத்துக் கொண்டு அவரவர் அன்பை வெளிப்படுத்த சிரித்துக்கொண்டே ஏற்றுக் கொண்டான்.
பின்னர் செழியனின் வேலையை பற்றி பேச்சு திரும்ப அங்கிருந்த சொந்தங்களிடம் ருத்ரனையும் தீபனையும் இன்னாரென்று அறிமுகப்படுத்தினார்.
நம்ப வம்சி மவனா என்று ஆச்சரியப்பட்டவர்கள்,அவனின் அப்பாவின் சிறு வயது செயல்களைப் பற்றி பெருமையாக சொல்லிக் கொண்டிருக்க தனது தந்தையை பற்றி கேட்டவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
பின்னர் மற்றவர்களெல்லாம் கூடி பேசிக் கொண்டிருக்கும் போது தற்செயலாக திரும்பிய ருத்ரன் தனது வீட்டினரோடு பேசிக் கொண்டிருக்கும் ஷமீராவை தான் யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
வெற்றி கபிலன் கண்ணன் செழியன் தீபன் இவர்கள் ஐவரும் அரட்டையடிக்க, என்ன நம்ம அண்ணா எதுவும் பேச மாட்டேங்குறாரே என்று திரும்பிய செழியன் ருத்ரனை பார்க்க,
அவன் பார்வையோ ஷமீராவின் மேல் இருப்பதை கண்டான்.
எதுக்கு இவளை அண்ணன் இப்படி பார்க்கிறார்கள் என்று நினைத்தவன் அண்ணா என்று பக்கத்தில் இருக்கும் ருத்ரனை தட்ட,அதில் ஆங் என்று நிகழ்வுக்கு வந்தவன்,செழியா உன்கிட்ட நான் ஒரு விஷயம் கேக்கணும் என்க, சொல்லு ணா என்ன விஷயம் என்றான்.
கேட்கிறேன்னு என்னை தப்பா எடுத்துக்காத ஷமீராவோட அம்மா பேரு என்ன என்க...அவங்க பேர் எஸ்தர் ணா என்கவும் என்னடா சொல்லுற என்று அதிர்ச்சியாக கேட்க...
அய்யோ அண்ணா...இதில் ஷாக் ஆக என்ன இருக்கு?அவங்க அல்லேலூயா கும்பல் அப்போ கிறிஸ்டியன் பேரு தானே வச்சிருப்பாங்கள் என்று கபிலன் கேட்க ஒரு நிமிஷம் இருடா என்றான்.
உன் வொய்போட அம்மா போட்டோ இருக்கா?,ஏன் ணா ஏதாச்சும் பிரச்சனையா?
உனக்கு நான் காரணத்தை அப்புறம் சொல்லுறேன்.முதல்ல கேட்டதுக்கு பதில் சொல்லுடா என்று முறைக்க,ம்ம் பேமிலி போட்டோ ஒன்று அனுப்பிருக்காள்னு மூன்று வருடத்திற்கு முன்பு ஷமீரா அனுப்பிய போட்டோவை தேடி எடுத்தவன் இந்தா ணா என்று நீட்ட அதை வாங்கி பார்த்தவன் மச்சி இங்கு பாருடா என்று தீபனிடம் காட்ட அம்மாடா என்று அதிர்ந்தான்.அவர்கள் இருவரையும் பார்த்து மற்ற நால்வருக்கும் இங்கு என்னடா நடக்கின்றது என்பது புரியவில்லை.
உன் மாமியார் எங்கே இருக்காங்க டா என்க...அய்யோ அண்ணா என்ன விஷயமென்று சொல்லுங்கள் என்று செழியன் முறைக்க,இவங்க எங்க இருக்காங்கடா என்று ருத்ரன் மீண்டும் கேட்டான்...
ஆஆஆஆ...
அவங்க ஊர்ல தான் இருப்பாங்க ணா என்று கடுப்பாக சொல்ல,அப்படியா கேட்டு பாரு ஊர்ல இருக்கிறார்களா என்கவும்,டேய் ஏன் டா மண்டையை போட்டு குழப்புற விஷயத்தை சொல்லி தொலையேண்டா என்று கபிலன் கத்த, கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுடா எல்லாத்தையும் அப்பறம் சொல்றேன் என்றான்.
மச்சி உன் அண்ணங்காரன் காரணம் இல்லாமல் எதுவும் சொல்ல மாட்டான்.நீ கால் பண்ணி விசாரி என்று வெற்றி சொல்லவும்,இரண்டு பேரும் என்னமோ சொல்றீங்க என்றவாறு தனது ஃபோனில் இருந்து பாபுவிற்கு கால் பண்ணினான்.
அந்த பக்கம் அட்டென் பண்ணியவன் சொல்லு பங்காளி எப்படி இருக்க என்க..நான் நல்லா இருக்கிறேன் நீ எப்படி இருக்க என்றவன் பரஸ்பரம் நலம் விசாரித்தனர்.பின்னர் செழியனின் வேலையை பற்றி கேட்க சொல்ல முடியாத ஒரு சூழல் பங்கு. நேர்ல பார்க்கும்போது அதெல்லாம் பேசிக்கலாம்...
அப்புறம் டா ஊர்ல எல்லாரும் எப்படி இருக்கிறாங்க?நீ எங்க இருக்கிற?பரத் வீட்லயா இல்ல சோழனூருக்கு போயிட்டியா என்க...நான் வந்து ஒரு வாரம் ஆகுது.இங்க ஒரு பிரச்சனை என்று பாபு சொல்ல,என்னடா..என்ன பிரச்சனை என்றான்.
அது வந்து டா என்று தயங்க,விஷயத்தை சொல்லு டா என்கவும்,அத்தை காணாமல் போய் 15 நாளைக்கு மேலாகுதுடா என்று பாபு சொல்ல என்னடா சொல்றயென்று அதிர்ந்தவாறு அங்கிருந்த ருத்ரனை பார்த்தான்.
இந்த விஷயத்தை எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல டா. அவளுக்கு தெரிஞ்சா எப்படி எடுத்துப்பாளோ என்று வருத்தமாக பாபு சொல்ல,நாதாரிபயலே என்ன விஷயம்னு தெளிவா சொல்லி தொலை டா என்றான்.
அது வந்து டா என்றவன் விஷயத்தை சொல்ல, செழியனோ அதிர்ந்து போய் அங்கே வீட்டினரோடு பேசிக் கொண்டிருக்கும் மனைவியை தான் வருத்தமாக பார்த்தான்.
இவ்வளவு நடந்திருக்கு ஏண்டா ஒரு வார்த்தை சொல்லவில்லை என்று செழியன் சத்தம் போட,எனக்கே தெரியாதுடா.நான் வந்து நாலு நாள் தான் ஆகுது.இங்கு வந்ததுக்கப்புறம் தான் இந்த விஷயம் எல்லாம் எனக்கும் தெரியுது.
நாங்கள் இங்கே தேடிக்கொண்டு தான் டா இருக்கிறோம்.எப்படியாவது அத்தையை கண்டு பிடித்து விடலாம் என்று பாபு சொல்ல,நான் இருக்கும்போது என்ன கவலை என்று சொல்லிவிட்டு போனை வைத்தவன் அண்ணா என்ன விஷயம் சொல்லு..காரணம் இல்லாமல் நீ கேக்க மாட்டேனு புரியுது.ஷமீராவோட அம்மா காணாமல் போய் இரண்டு வாரத்துக்கு மேல ஆகுதுன்னு பாபு சொல்றான் என்றான்.
சொல்றேன் டா என்றவன் அந்த இரவு நேரத்தில் எஸ்தர் மயங்கி விழுந்ததையும்,தனது காரில் அழைத்துக்கொண்டு போனது,பிறகு அங்கிருந்து டெல்லி போனதுனு எல்லாத்தையும் சொல்லவும் அதை கேட்டவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
பெரிய யோக்கிய மயிறு போல இங்கு வந்து அந்த ஆளு பேசுனானே இவனையெல்லாம் ரொசமா கேட்க வாயில நல்லா வருது என்று தனது மாமனாரை திட்டினான்.
அப்போ பொள்ளாச்சியில் தான் அத்தையும் இருக்காங்களா ணா என்க,ஆமாண்டா.அவங்களை மட்டும்
விட்டுட்டு எப்படி வர முடியும்.
"அத்தை ரொம்ப தங்கமானவங்கடா"
ஷமீராவை பார்க்க அவங்களோட முக ஜாடையா இருந்ததா.ஒருவேளை ஒரே உருவம் போல இருப்பார்களே என்று ஒரு யோசனை இருந்திருச்சு.
வெற்றி சொல்லி ஷமீராவோட ஊரும் இவங்களை நான் சந்தித்த ஊரும் ஒரே ஊரா இருக்கவும் தான் எங்களுக்கு சந்தேகம் வந்துச்சு என்றான்.
அவங்க வீட்டை விட்டு எதுக்கு வந்தாங்கன்னு அவங்களை கேட்டால் தான்டா தெரியும்.நம்ம தான் நாளைக்கு பொள்ளாச்சிக்கு போக போறோமே பிறகென்ன..
ஆயிரம் மனஸ்தாபமா இருந்தாலும் தன்னோட பொண்ண பாத்துட்டால் அவங்களும் மனச திறந்து சொல்லுவாங்க இல்லையா...
ஒருவேளை ஷமீராவோட அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிய விஷயம் அவங்களுக்கு தெரியாம இருந்திருந்தால் அதையும் யோசிக்கணும்.எதனால வீட்டை விட்டு வந்தாங்கன்னு அவங்க சொல்லாத போது நம்மளே ஒரு முடிவுக்கு வரக்கூடாது என்று ருத்ரன் சொல்ல...
இது இப்படியே இருக்கட்டும் வேற யாருக்கும் தெரிய வேண்டாம்.நேர்ல பார்த்து பேசிக்கொள்ளலாம் என்று கபிலன் சொல்லும் போது கார் ஒன்னு வேகமாக வந்து நிற்க,யார் டா அதுயென்று பார்க்க கதவை திறந்து இறங்கி வருபவரை பார்த்து தன்ராஜ் மாமாயென்று கண்ணன் சொல்ல, அதைக் கேட்ட ருத்ரன் அப்போ இவங்க தான் அப்பாவோட நண்பனாயென்க ஆமாம் என்றான்.
நான்கு மாதங்களுக்கு முன்பு மெடிக்கல் கேம்பிற்காக இங்கு வந்திருந்த தனராஜ் மறந்து கூட ஊருக்குள் செல்லவில்லை இதே இடத்தில்தான் கேம்ப் போட்டு தங்கியிருந்தார்.
தெரிந்தவர்களும் சொந்த பந்தமும் வீட்டுக்கு வரச் சொல்லி அவரை அழைக்க ஏனோ அவருக்கு ஊருக்குள் போக மனம் வரவில்லை.தற்பொழுது தனது நண்பனின் மகன் உயிரோடு இருப்பதை கேள்விப்பட்டதும் பதறி அடித்து ஓடி வந்திருக்கிறார்.
தன்ராஜை பார்த்த செல்லதுரை வேகமாக எழுந்து போய் அவர் கையை பிடித்து வா ணா என்க,துரை எங்கடா நம்ப வம்சியோட ரத்தம் என்று ஒருவித அலைப்புறுதலோடு அந்த கூட்டத்தில் தனது நண்பனின் சாயலை தேடினார்.
தன்ராஜின் மனதை புரிந்து கொண்ட செல்லதுரை அங்கு தூரத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அண்ணன் மகனை பார்த்து ருத்ரா வா என்று கையை அசைத்தார்.
ருத்ரனும் தனது சித்தப்பாவின் குரலைக் கேட்டு அங்கே போக,சில அடி தூரத்தில் வருபவனை பார்த்த தன்ராஜுக்கு பார்வையே மறைக்கும் அளவிற்கு கண்கள் கலங்கியது.
நினைவு தெரிந்த நாளிலிருந்து இரட்டை பிறவி போல் சுற்றித்திரிந்த அதே இளம் வயது உருவம் எதிரே வருவதை பார்த்து ஒரு நொடி தடிமாறி போனார் அந்த புகழ் பெற்ற மருத்துவர்.
தனது வயதை மறந்தவர் வம்சி என்று வேகமாக போனவர் வந்துட்டியா நீ வந்துட்டியாடா ஏண்டா என்ன விட்டுட்டு போன என்று அவனை கட்டிக் கொண்டு கதறி அழுதார்.
இதைப் பார்த்து அங்கிருந்த சொந்த பந்தங்களுக்கு இப்பயாவது அவர் மனது விட்டு அழட்டும் என்று நினைத்தாலும் அவர்களுக்கும் கண்கள் கலங்கியது.
கிட்டத்தட்ட 25 வருஷமாக தன்ராஜ் இந்த ஊருக்குள் வரவில்லை.அவரை கல்யாணம் பண்ணிக்க சொல்லி எத்தனையோ முறை அவர்கள் உடன்பிறப்புகளும் அப்பா அம்மாவும் சண்டை போட்டு கெஞ்சி கதறி பார்த்து விட்டனர்.
முடியாது என்று சொல்லிவிட்டு சென்னையிலயே தான் இருந்தார். வயது மூப்பின் காரணமாக இருந்த அவரின் அப்பாவும் அம்மாவும் தனது மகனின் அழுகுரலை கேட்டு வந்தவர்கள் ஐயா ராஜி இன்னைக்கு தான் எல்லாரையும் பார்க்கணும்னு உனக்கு மனசு இறங்குச்சா என்க...
அழுது கொண்டிருந்த தன்ராஜ் தனது தாயின் அழுகுரலை கேட்டு திரும்பியவர் என்ன மன்னிச்சிடு மா...எதுவுமே என்னிடம் கேட்காத மா.
ரெண்டு பேருக்கும் இந்த கோயில்லதானே திருநூர் பூசி அனுப்பி வச்சீங்க,அவன் இல்லாம இந்த ஊருக்குள்ள வருவதற்கு எனக்கு எப்படி மா மனசு வரவும் சொல்லுமா என்று கதறினார்.
இருவரும் திடலுக்கு வந்து சேர அங்கே தெரிந்தவர்கள் ஊர்க்காரர்கள் என்று கூட்டமாக இருந்தது.ஏன் யா நீ வெறும் போலீஸ் தானே இதுக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டமென்றாள்.
வாடி என்றவன் ஒரு கையால் வேஷ்டியின் நுனியை பிடித்துக் கொண்டு முன்னே நடந்து சென்றான்.
ஆண்களோ அய்யா செழியா என்று அணைத்துக் கொண்டு அவரவர் அன்பை வெளிப்படுத்த சிரித்துக்கொண்டே ஏற்றுக் கொண்டான்.
பின்னர் செழியனின் வேலையை பற்றி பேச்சு திரும்ப அங்கிருந்த சொந்தங்களிடம் ருத்ரனையும் தீபனையும் இன்னாரென்று அறிமுகப்படுத்தினார்.
நம்ப வம்சி மவனா என்று ஆச்சரியப்பட்டவர்கள்,அவனின் அப்பாவின் சிறு வயது செயல்களைப் பற்றி பெருமையாக சொல்லிக் கொண்டிருக்க தனது தந்தையை பற்றி கேட்டவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
பின்னர் மற்றவர்களெல்லாம் கூடி பேசிக் கொண்டிருக்கும் போது தற்செயலாக திரும்பிய ருத்ரன் தனது வீட்டினரோடு பேசிக் கொண்டிருக்கும் ஷமீராவை தான் யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
வெற்றி கபிலன் கண்ணன் செழியன் தீபன் இவர்கள் ஐவரும் அரட்டையடிக்க, என்ன நம்ம அண்ணா எதுவும் பேச மாட்டேங்குறாரே என்று திரும்பிய செழியன் ருத்ரனை பார்க்க,
அவன் பார்வையோ ஷமீராவின் மேல் இருப்பதை கண்டான்.
எதுக்கு இவளை அண்ணன் இப்படி பார்க்கிறார்கள் என்று நினைத்தவன் அண்ணா என்று பக்கத்தில் இருக்கும் ருத்ரனை தட்ட,அதில் ஆங் என்று நிகழ்வுக்கு வந்தவன்,செழியா உன்கிட்ட நான் ஒரு விஷயம் கேக்கணும் என்க, சொல்லு ணா என்ன விஷயம் என்றான்.
கேட்கிறேன்னு என்னை தப்பா எடுத்துக்காத ஷமீராவோட அம்மா பேரு என்ன என்க...அவங்க பேர் எஸ்தர் ணா என்கவும் என்னடா சொல்லுற என்று அதிர்ச்சியாக கேட்க...
அய்யோ அண்ணா...இதில் ஷாக் ஆக என்ன இருக்கு?அவங்க அல்லேலூயா கும்பல் அப்போ கிறிஸ்டியன் பேரு தானே வச்சிருப்பாங்கள் என்று கபிலன் கேட்க ஒரு நிமிஷம் இருடா என்றான்.
உன் வொய்போட அம்மா போட்டோ இருக்கா?,ஏன் ணா ஏதாச்சும் பிரச்சனையா?
உனக்கு நான் காரணத்தை அப்புறம் சொல்லுறேன்.முதல்ல கேட்டதுக்கு பதில் சொல்லுடா என்று முறைக்க,ம்ம் பேமிலி போட்டோ ஒன்று அனுப்பிருக்காள்னு மூன்று வருடத்திற்கு முன்பு ஷமீரா அனுப்பிய போட்டோவை தேடி எடுத்தவன் இந்தா ணா என்று நீட்ட அதை வாங்கி பார்த்தவன் மச்சி இங்கு பாருடா என்று தீபனிடம் காட்ட அம்மாடா என்று அதிர்ந்தான்.அவர்கள் இருவரையும் பார்த்து மற்ற நால்வருக்கும் இங்கு என்னடா நடக்கின்றது என்பது புரியவில்லை.
உன் மாமியார் எங்கே இருக்காங்க டா என்க...அய்யோ அண்ணா என்ன விஷயமென்று சொல்லுங்கள் என்று செழியன் முறைக்க,இவங்க எங்க இருக்காங்கடா என்று ருத்ரன் மீண்டும் கேட்டான்...
ஆஆஆஆ...
அவங்க ஊர்ல தான் இருப்பாங்க ணா என்று கடுப்பாக சொல்ல,அப்படியா கேட்டு பாரு ஊர்ல இருக்கிறார்களா என்கவும்,டேய் ஏன் டா மண்டையை போட்டு குழப்புற விஷயத்தை சொல்லி தொலையேண்டா என்று கபிலன் கத்த, கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுடா எல்லாத்தையும் அப்பறம் சொல்றேன் என்றான்.
மச்சி உன் அண்ணங்காரன் காரணம் இல்லாமல் எதுவும் சொல்ல மாட்டான்.நீ கால் பண்ணி விசாரி என்று வெற்றி சொல்லவும்,இரண்டு பேரும் என்னமோ சொல்றீங்க என்றவாறு தனது ஃபோனில் இருந்து பாபுவிற்கு கால் பண்ணினான்.
அந்த பக்கம் அட்டென் பண்ணியவன் சொல்லு பங்காளி எப்படி இருக்க என்க..நான் நல்லா இருக்கிறேன் நீ எப்படி இருக்க என்றவன் பரஸ்பரம் நலம் விசாரித்தனர்.பின்னர் செழியனின் வேலையை பற்றி கேட்க சொல்ல முடியாத ஒரு சூழல் பங்கு. நேர்ல பார்க்கும்போது அதெல்லாம் பேசிக்கலாம்...
அப்புறம் டா ஊர்ல எல்லாரும் எப்படி இருக்கிறாங்க?நீ எங்க இருக்கிற?பரத் வீட்லயா இல்ல சோழனூருக்கு போயிட்டியா என்க...நான் வந்து ஒரு வாரம் ஆகுது.இங்க ஒரு பிரச்சனை என்று பாபு சொல்ல,என்னடா..என்ன பிரச்சனை என்றான்.
அது வந்து டா என்று தயங்க,விஷயத்தை சொல்லு டா என்கவும்,அத்தை காணாமல் போய் 15 நாளைக்கு மேலாகுதுடா என்று பாபு சொல்ல என்னடா சொல்றயென்று அதிர்ந்தவாறு அங்கிருந்த ருத்ரனை பார்த்தான்.
இந்த விஷயத்தை எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல டா. அவளுக்கு தெரிஞ்சா எப்படி எடுத்துப்பாளோ என்று வருத்தமாக பாபு சொல்ல,நாதாரிபயலே என்ன விஷயம்னு தெளிவா சொல்லி தொலை டா என்றான்.
அது வந்து டா என்றவன் விஷயத்தை சொல்ல, செழியனோ அதிர்ந்து போய் அங்கே வீட்டினரோடு பேசிக் கொண்டிருக்கும் மனைவியை தான் வருத்தமாக பார்த்தான்.
இவ்வளவு நடந்திருக்கு ஏண்டா ஒரு வார்த்தை சொல்லவில்லை என்று செழியன் சத்தம் போட,எனக்கே தெரியாதுடா.நான் வந்து நாலு நாள் தான் ஆகுது.இங்கு வந்ததுக்கப்புறம் தான் இந்த விஷயம் எல்லாம் எனக்கும் தெரியுது.
நாங்கள் இங்கே தேடிக்கொண்டு தான் டா இருக்கிறோம்.எப்படியாவது அத்தையை கண்டு பிடித்து விடலாம் என்று பாபு சொல்ல,நான் இருக்கும்போது என்ன கவலை என்று சொல்லிவிட்டு போனை வைத்தவன் அண்ணா என்ன விஷயம் சொல்லு..காரணம் இல்லாமல் நீ கேக்க மாட்டேனு புரியுது.ஷமீராவோட அம்மா காணாமல் போய் இரண்டு வாரத்துக்கு மேல ஆகுதுன்னு பாபு சொல்றான் என்றான்.
சொல்றேன் டா என்றவன் அந்த இரவு நேரத்தில் எஸ்தர் மயங்கி விழுந்ததையும்,தனது காரில் அழைத்துக்கொண்டு போனது,பிறகு அங்கிருந்து டெல்லி போனதுனு எல்லாத்தையும் சொல்லவும் அதை கேட்டவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
பெரிய யோக்கிய மயிறு போல இங்கு வந்து அந்த ஆளு பேசுனானே இவனையெல்லாம் ரொசமா கேட்க வாயில நல்லா வருது என்று தனது மாமனாரை திட்டினான்.
அப்போ பொள்ளாச்சியில் தான் அத்தையும் இருக்காங்களா ணா என்க,ஆமாண்டா.அவங்களை மட்டும்
விட்டுட்டு எப்படி வர முடியும்.
"அத்தை ரொம்ப தங்கமானவங்கடா"
ஷமீராவை பார்க்க அவங்களோட முக ஜாடையா இருந்ததா.ஒருவேளை ஒரே உருவம் போல இருப்பார்களே என்று ஒரு யோசனை இருந்திருச்சு.
வெற்றி சொல்லி ஷமீராவோட ஊரும் இவங்களை நான் சந்தித்த ஊரும் ஒரே ஊரா இருக்கவும் தான் எங்களுக்கு சந்தேகம் வந்துச்சு என்றான்.
அவங்க வீட்டை விட்டு எதுக்கு வந்தாங்கன்னு அவங்களை கேட்டால் தான்டா தெரியும்.நம்ம தான் நாளைக்கு பொள்ளாச்சிக்கு போக போறோமே பிறகென்ன..
ஆயிரம் மனஸ்தாபமா இருந்தாலும் தன்னோட பொண்ண பாத்துட்டால் அவங்களும் மனச திறந்து சொல்லுவாங்க இல்லையா...
ஒருவேளை ஷமீராவோட அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிய விஷயம் அவங்களுக்கு தெரியாம இருந்திருந்தால் அதையும் யோசிக்கணும்.எதனால வீட்டை விட்டு வந்தாங்கன்னு அவங்க சொல்லாத போது நம்மளே ஒரு முடிவுக்கு வரக்கூடாது என்று ருத்ரன் சொல்ல...
இது இப்படியே இருக்கட்டும் வேற யாருக்கும் தெரிய வேண்டாம்.நேர்ல பார்த்து பேசிக்கொள்ளலாம் என்று கபிலன் சொல்லும் போது கார் ஒன்னு வேகமாக வந்து நிற்க,யார் டா அதுயென்று பார்க்க கதவை திறந்து இறங்கி வருபவரை பார்த்து தன்ராஜ் மாமாயென்று கண்ணன் சொல்ல, அதைக் கேட்ட ருத்ரன் அப்போ இவங்க தான் அப்பாவோட நண்பனாயென்க ஆமாம் என்றான்.
நான்கு மாதங்களுக்கு முன்பு மெடிக்கல் கேம்பிற்காக இங்கு வந்திருந்த தனராஜ் மறந்து கூட ஊருக்குள் செல்லவில்லை இதே இடத்தில்தான் கேம்ப் போட்டு தங்கியிருந்தார்.
தெரிந்தவர்களும் சொந்த பந்தமும் வீட்டுக்கு வரச் சொல்லி அவரை அழைக்க ஏனோ அவருக்கு ஊருக்குள் போக மனம் வரவில்லை.தற்பொழுது தனது நண்பனின் மகன் உயிரோடு இருப்பதை கேள்விப்பட்டதும் பதறி அடித்து ஓடி வந்திருக்கிறார்.
தன்ராஜை பார்த்த செல்லதுரை வேகமாக எழுந்து போய் அவர் கையை பிடித்து வா ணா என்க,துரை எங்கடா நம்ப வம்சியோட ரத்தம் என்று ஒருவித அலைப்புறுதலோடு அந்த கூட்டத்தில் தனது நண்பனின் சாயலை தேடினார்.
தன்ராஜின் மனதை புரிந்து கொண்ட செல்லதுரை அங்கு தூரத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அண்ணன் மகனை பார்த்து ருத்ரா வா என்று கையை அசைத்தார்.
ருத்ரனும் தனது சித்தப்பாவின் குரலைக் கேட்டு அங்கே போக,சில அடி தூரத்தில் வருபவனை பார்த்த தன்ராஜுக்கு பார்வையே மறைக்கும் அளவிற்கு கண்கள் கலங்கியது.
நினைவு தெரிந்த நாளிலிருந்து இரட்டை பிறவி போல் சுற்றித்திரிந்த அதே இளம் வயது உருவம் எதிரே வருவதை பார்த்து ஒரு நொடி தடிமாறி போனார் அந்த புகழ் பெற்ற மருத்துவர்.
தனது வயதை மறந்தவர் வம்சி என்று வேகமாக போனவர் வந்துட்டியா நீ வந்துட்டியாடா ஏண்டா என்ன விட்டுட்டு போன என்று அவனை கட்டிக் கொண்டு கதறி அழுதார்.
இதைப் பார்த்து அங்கிருந்த சொந்த பந்தங்களுக்கு இப்பயாவது அவர் மனது விட்டு அழட்டும் என்று நினைத்தாலும் அவர்களுக்கும் கண்கள் கலங்கியது.
கிட்டத்தட்ட 25 வருஷமாக தன்ராஜ் இந்த ஊருக்குள் வரவில்லை.அவரை கல்யாணம் பண்ணிக்க சொல்லி எத்தனையோ முறை அவர்கள் உடன்பிறப்புகளும் அப்பா அம்மாவும் சண்டை போட்டு கெஞ்சி கதறி பார்த்து விட்டனர்.
முடியாது என்று சொல்லிவிட்டு சென்னையிலயே தான் இருந்தார். வயது மூப்பின் காரணமாக இருந்த அவரின் அப்பாவும் அம்மாவும் தனது மகனின் அழுகுரலை கேட்டு வந்தவர்கள் ஐயா ராஜி இன்னைக்கு தான் எல்லாரையும் பார்க்கணும்னு உனக்கு மனசு இறங்குச்சா என்க...
அழுது கொண்டிருந்த தன்ராஜ் தனது தாயின் அழுகுரலை கேட்டு திரும்பியவர் என்ன மன்னிச்சிடு மா...எதுவுமே என்னிடம் கேட்காத மா.
ரெண்டு பேருக்கும் இந்த கோயில்லதானே திருநூர் பூசி அனுப்பி வச்சீங்க,அவன் இல்லாம இந்த ஊருக்குள்ள வருவதற்கு எனக்கு எப்படி மா மனசு வரவும் சொல்லுமா என்று கதறினார்.